search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவியல்"

    • கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    மணவாளக்குறிச்சி:

    வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஐ.இ.டி. கன்னியாகுமரி நெட்வொர்க் மற்றும் அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த கண்காட்சியில் 172 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக காட்சிப்படுத்திய மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் துணை தாளாளர் சுனி, இயக்குநர் தருண்சுரத், அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வரும், ஐ.இ.டி.கன்னியாகுமரி நெட்வொர்க்கின் முன்னாள் தலைவருமான ஜோசப் ஜவகர், அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிமலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • அறிவியல் செயல்திட்டம், சிறுதானிய பயன்பாடு குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் சி க .சு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதாரண்யம் ஒன்றிய அளவிலான வானவில் மன்றம்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

    வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள பன்னாள் ஆயக்காரன்புலம்பஞ்சநதிக்குளம் தகட்டூர் புஷ்பவனம் கோடியக்காடுஉள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி சேர்ந்தநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி அறிவியல் நாடகம் அறிவியல் செயல் திட்டம் சிறுதானிய பயன்பாடு குறித்துகண்காட்சி வைத்திருந்தனர் நிகழ்ச்சியின் நடுவர்களாக அறிவியல் ஆசிரியர் சிவகுமார் செந்தில்குமார் ராஜ்குமார் ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் படைப்புகளை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்படக்கூடியது அறிவியல் மன்றம் ஆகும்.
    • அமிலத்தன்மை நீக்கும் சோதனையை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித மற்றும் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, ஆடின் மெடோனா, உமா மகேஸ்வ ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவி மோனிகா அனை வரையும் வரவேற்றார்.

    மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் விமலா கலந்து கொண்டு பேசுகையில்:-

    கணித மன்றத்தின் மூலம் கணித புதிர்கள் மற்றும் கணித விளையாட்டுகள் வேதகால கணிதம் மற்றும் மின்னல் வேக கணிதம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏதுவாக எளிய முறையில் கணித பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவை கணித மன்றத்தின் செயல்பாடுகள் ஆகும். மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படும் அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்பட க்கூடியது அறிவியல் மன்றம் ஆகும் என்றார்.

    பின்னர், திரவ அடர்த்தி வேறுபாடு சோதனையை சந்தோஷ், அமிலத்தன்மை நீக்கும் சோதனையை புஷ்பா ஆகியோர் செய்து காண்பித்தனர். முடிவில் மாணவி அகத்தியர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவி ஷாலினி தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள் பாஸ்கரன், சக்கரபாணி, நடராஜன், முகமது ரஃபீக், பாலசுப்பி ரமணியன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் விஜயகுமார் செய்திருந்தனர்.

    • கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.

    பள்ளிபாளையம்:

    கோடை விடுமுறையை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டாட ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.

    இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் கண்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) புவனேஸ்வரி, பாதரை பள்ளி தலைமை ஆசிரியர், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்றம் கருத்தாளர் குணசேகர் மற்றும் கண்டிப்புதூர் பள்ளியில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள கலந்து கொண்டனர்.

    இதில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கற்பனையும் கைத்திறனும், சமையலறையில் அறிவியல் மற்றும் புதிர் கணக்குகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் அளிக்க ப்பட்டது.

    • காளையார்கோவிலில் அறிவியல் இயக்க கொண்டாட்டம் நடந்தது.
    • செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.

    காளையார்கோவில்

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த திருவிழா மண்டல, ஒன்றிய அளவில் மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது.

    ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 350 இடங்களில் இது நடைபெற உள்ளது.

    அதன் தொடக்கமாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சேவல் புஞ்சை நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயூ தலைமையில் ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கஸ்தூரிபாய் முன்னிலையில் நடந்தது.

    அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஆரோக்கியசாமி. ஆயிரம் ஆயிரம் அறிவியல் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார். இதில் அந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.

    • திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
    • முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழாவில் சேவை செய்த மாணவர்களுக்கும், முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார். உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி , சாரண ஆசிரியர் திருவருள்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.

    • மாணவர்களால் உருவாக்கப்பட்ட உயர்திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • தொலைநோக்கியின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும், விளக்கங்களையும் மாணவர்களுக்கு விளக்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியில் சாராபாய் விண்வெளி கழகத்தின் சார்பில் அதிநவீன தொலைநோக்கி மூலம் சிறப்பு விண்வெளி காணொளி காட்சி பள்ளியில் இரண்டாவது முறையாக நடைபெற்றது.

    இந்த பள்ளி மாணவ- மாணவிகளால் உருவாக்கப்பட்ட உயர் திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இதன் மூலம் இரவில் அனைவரும் முழு சந்திரனையும் விண்வெளி கோள்கள் மற்றும் கிரகங்களையும் கண்டு வியப்புற்றனர். சங்கத்தின் முதல் கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சங்கத்தின் வழிகாட்டியும் இஸ்ரோ விஞ்ஞானியுமான இங்கர்சால், தமிழ்நாடு அறிவியல் பேரவை தலைவர் விழிநாதன் மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு விண்வெளியில் அதிசயங்களையும் தொலைநோக்கின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும் அதற்கான விளக்கங்களையும் மாணவ -மாணவியர்களுக்கு விளக்கி அவர்களின் சந்தேகங்களை அறிவியல் பூர்வமாக தெளிவுபடுத்தினர்.

    இது போன்ற விண்வெ ளியை, தொலைநோக்கி மூலம் பார்க்கும் நிகழ்வுகள் மாதம் ஒருமுறை விண்வெளியை காணும் உகந்த நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளியின் தாளாளர் சுதீஷ் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வித்யா, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி அன்பழகன் கலந்து கொண்னர்.

    சுபம் வித்யா மந்திர் பள்ளி சாராபாய் விண்வெளி சங்கத்தின் தலைவர் மாணவர் விஷ்வந்த், 9-ம் வகுப்பு மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோர் முதுகலை ஆசிரியர் ரியாஸ் மற்றும் முதுகலை ஆசிரியர் சுப்ரமணியம் ஆகியோரின் வழிகாட்டலில் கழக உறுப்பினர்களை கொண்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் லயன்ஸ் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
    • முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தூத்துக்குடியில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் மாவட்ட அளவில் 545 மாணவர்களின் 30 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் செழியனின் கண்டுபிடிப்பு தேசிய அளவில் குஜராத்தில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது.

    மேலும் இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிக்கும் தகுதி பெற்றுள்ளார். மாணவர் செழியனை லயன்ஸ் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர். முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.

    • பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.

    கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும்.
    • தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும்.

    உத்தராயணம் - தட்சிணாயனம் பற்றி பார்ப்போம்.. .

    தட்சிணாயனம்: 'தட்சண்' என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலமாகும்.

    ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி முதல் நாளன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் படுக்கையில் இருந்து விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோவில்களில் பஜனை பாடி அந்தத் தேவர்களை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

    உத்தராயணம்: 'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி என்று பொருளாகும். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும்.

    தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாகும். உத்தராயனமும், தட்சிணாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.

    சூரியன் தெற்காகவும் வடக்காகவும் நகருவதாக நமக்குத் தோன்றுவது, புவியானது தனது அச்சில் இருபத்து மூன்றரை (231/2) பாகை சாய்ந்து சூரியனைச் சுற்றி வருவவதால் தான். அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது.

    இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான் "ஆடிப்பட்டம் தேடிவிதை" என்றனர்.

    தட்சிணாயனம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

    ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம்.

    உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயன காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

    இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலைகுளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    - வீரமணி

    • மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.
    • சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும், மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நூல் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி வரை நடக்கி றது. இதனை தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நி லைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தார்.

    இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல், நேர்முக உதவியாளர்கள் பழனிவேல் (மேல்நிலை), மாதவன் (இடைநிலை) மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர்கள் அறிவியல், வரலாறு, இலக்கி யம் சார்ந்த புத்தகங்கள் வாசித்தனர்.

    பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 729 பள்ளிகளில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர். ஒரு மணி நேரம் வாசித்தல் முடிந்த உடன் மாணவர்களுக்கு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இது அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×