search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pass rate"

    • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 92.08 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. விழுப்புரம் மாவட்ட த்தில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் 189 உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 20,972 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவற்றில் மாணவர்கள் 10,263 பேர், மாணவிகள் 10,709 பேர் தேர்வு எழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் 92.08 சதவீதம் தேர்ச்சி விகிதமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அரசு பள்ளி களில் 90.23 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோட்டக்குப்பம், வீடூர் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 92.82 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.

    கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.

    ×