search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oil"

    • தாமரை எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள் தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகளை குறைக்கும்.
    • கூந்தல் வளர்ச்சி அதிகரித்து எளிதில் உடையாத வகையில் நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாகவும் மாறும்.

    சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான பொருட்களைக்கொண்டு பராமரிப்பது முக்கியம். இதற்கு தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் தாமரை எண்ணெய். தாமரையை நேரடியாகப் பயன்படுத்துவதை விட, எண்ணெயாகப் பயன்படுத்தும் போது, சருமத்தில் எளிதில் ஊடுருவும்.

    இந்த எண்ணெய் தாமரை மலரை மட்டுமின்றி, விதைகளையும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சரும பராமரிப்புக்குத் தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. தாமரை எண்ணெய்யில் உள்ள ஒலிகோசாக்கரைடு, சரும செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. சருமத்தின் இளமைக்கு அவசியமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றின் இயல்பான செயல்பாட்டைப் பராமரிக்க உதவும்.

    சைட்டோகைன் உற்பத்தியை மேம்படுத்த உதவும். இதனால், செல்கள் புத்துயிர் பெறும். முகப்பருக்கள் போன்ற பிரச்சினைகள் குறையும். தாமரை எண்ணெயை முகத்திற்கு மட்டுமின்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேல் படியும் இறந்த செல்களை அகற்றும். சரும வறட்சியில் இருந்து காத்து, தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை மீட்டுத் தரும். இந்த எண்ணெயை நகங்களின் மீது தடவி வந்தால் அவை உறுதியாகும்.

    தாமரை எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால், தோலில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை குறையும். மேலும், தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். கூந்தல் எளிதில் உடையாத வகையில் நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாகவும் மாறும். தாமரையில், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும். முகப்பரு தழும்புகள், கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்.

    தலை முடிக்கு இயற்கை சாயம்

    ஒரு டம்ளர் தண்ணீரில், இரண்டு ஸ்பூன் பிளாக் டீ இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் தூள் உப்பு போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வற்றியதும் அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை ஆற வைக்கவும். தலைக்கு குளித்தவுடன் இதை முடியில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இது இயற்கையான தலைமுடி சாயமாக பயன்படும்.

    சாக்லெட் லிப் பாம்

    தேன்மெழுகு 2 டீஸ்பூன், கோகோ பவுடர் 1 டீஸ்பூன், பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன், பெப்பர்மிண்ட் எண்ணெய் சில துளிகள் எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை சூடுபடுத்தவும். அதை விட சிறிய பாத்திரத்தில் தேன்மெழுகைப் போட்டு சூடான தண்ணீரின் மேல் வைக்கவும். தேன்மெழுகு உருகியதும், அதில் கோகோ பவுடரைக் கொட்டி நன்றாகக் கலக்கவும். பின்பு பாதாம் எண்ணெய், பெப்பர்மிண்ட் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கலந்து ஆற வைக்கவும். ஒரு கண்ணாடிக் குப்பியில் ஊற்றி பத்திரப்படுத்தவும். இதை தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையாகும்.

    • கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் சிறந்த தீர்வாக உள்ளது.
    • இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்.

    மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வாக அமைகிறது கருஞ்சீரகம். இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

    இந்த எண்ணெய்யை இரண்டு முறைகளில் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    முதல் முறை:

    கருஞ்சீரகம் – 100 கிராம்,

    வெந்தயம் – 100 கிராம்,

    தேங்காய் எண்ணெய் – 150 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.

    பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். இதைத் தினமும் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

    மற்றொரு முறை:

    கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,

    வெந்தயம் - 2 டீஸ்பூன்,

    கற்றாழை ஜெல் - 1 கப்,

    தேங்காய் எண்ணெய் - 1 கப்

    எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையின் தோலை நீக்கி, நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாகக் கழுவ வேண்டும். அப்போதுதான், அதிலுள்ள அரிப்புத் தன்மை நீங்கும்.

    அடுப்பில், வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய்யையும், கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். எண்ணெய் கொதிக்கும் போது, கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில், அரை மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சிய எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி 6 மாதம் வரை பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம்.

    இதை, வாரம் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக மசாஜ் செய்து குளிக்கும்போது, உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்.

    தொடர்ந்து 1 மாதம் வரை பயன்படுத்தும் போது, முடியின் வளர்ச்சி நன்றாகத் தூண்டப்பட்டு, அடர்த்தியாக முடி வளரும்.

    • ஆலிவ் எண்ணெய் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
    • பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

    சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

    ஆன்டி-ஆக்சிடண்டுகள்:

    ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலீன் போன்ற ஆன்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கின்றன.

    மாய்ஸ்சுரைசர்: ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். சருமம் வறண்டுபோகாமல் தடுக்கும்.

    சரும பிரச்சினைகளை நீக்குதல்: ஆலிவ் எண்ணெய் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் போன்ற சரும பிரச்சினைகளுக்கு இயற்கையான மருந்தாகும். இதை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம், சருமத்துளைகள் திறந்து, மேற்கண்ட பிரச்சினைகள் எளிதில் நீங்கும். வடுக்கள் மற்றும் முகப் பருக்களால் ஏற்படும் அடையாளங்கள் மறையும். சருமம், மாசு மருவின்றி பளபளப்பாகக் காட்சி தரும்.

    ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, பிளேவனாய்டுகள் மற்றும் பாலிபீனால்கள் சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் போன்ற கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு தோல் பிரச்சினைகளை குணமாக்குகிறது.

    அழற்சியைக் குறைத்தல்: ஆலிவ் எண்ணெய்யின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் வெளிப்புற மற்றும் உட்புற அழற்சிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அழகு சிகிச்சைக்காக 'எக்ஸ்ட்ரா வெர்ஜின்' ஆலிவ் எண்ணெய் எனும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.

    தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.

    * தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

    * வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

    * குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

    * வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.

    * படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

    * தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

    * தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
    ஹைட்ரோ கார்பன் எடுக்க நாகை, விழுப்புரம், புதுவை, காரைக்காலில் 274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படுகிறது.

    சென்னை:

    இந்தியாவில் பூமிக்கு அடியில் அதிகப்படியான எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுவும் உள்ள பகுதிகளில் காவிரிப் படுகையும் ஒன்றாகும்.

    புதுச்சேரி முதல் மன்னார் வளைகுடா வரை நிலப் பகுதியில் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கடலில் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவும் காவிரிப் படுகையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    காவிரிப் படுகையை குறிவைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. நெடுவாசலில் 2006-ம் ஆண்டே பூமிக்கடியில் துளையிடப்பட்டது. இதனால் 21 லட்சம் ஏக்கர் நிலம் உபரி நிலமாக மாறி விடும் என்பது கண்டு பிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அந்த திட்டத்தை கைவிட வைத்தனர்.

    என்றாலும் காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து எண்ணெயையும் இயற்கை எரிவாயுவும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி டெல்டா உள்ளடக்கிய காவிரிப் படுகை முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகளை தற்போது மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

    ஹைட்ரோ கார்பன் என்பது ஹைட்ரஜன் வாயு மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப் பொருளாகும். இந்த ஹைட்ரோ கார்பன் வாயு ஆக்ஸிசன் உதவியுடன் எரி பொருளாக மாற்றி பயன்படுத்தப்படுகிறது.

    பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, மண்ணெய், சமையல் எரிவாயு, நாப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டு மொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன்கள் தான். எனவே நாட்டில் எரிபொருள் தேவையை முழுமையாக தீர்ப்பது ஹைட்ரோ கார்பன்கள் தான்.

    இதற்கு முன்பு தமிழ் நாட்டில் காவிரிப் படுகைப் பகுதியில் சிறிய அளவில்தான் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் நேற்றும், நேற்று முன்தினமும் மத்திய அரசு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

     


    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டே மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துடன் இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி பெற்று விட்டது. இதன் முதல் கட்டப் பணியாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க எவ்வளவு செலவாகும்? எவ்வளவு நாட்களாகும்? பூமிக்குள் செலுத்தப்படும் வேதிப்பொருட்களை பாதுகாப்பது எவ்வாறு? கழிவுப் பொருட்களை அகற்றுவது எவ்வாறு? என்பது பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு சமீபத்திய உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.

    குறிப்பாக காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதால் பொதுமக்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றியும் இது தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்கவும் வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய வன மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கி இருப்பதால் வேதாந்தா நிறுவனம் உடனடியாக காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும் பணிகளைத் தொடங்கும்.

    காவிரிப் படுகையை இரு மண்டலமாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் (பிரிவு-1) 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படும். கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் (பிரிவு-2) 158 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும்.

    இந்த 274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். காவிரிப் படுகையில் கடல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு இந்த கிணறுகளில் பல இடங்களில் அமைக்கப்படும். நிலப்பகுதிகளைப் பொருத்த வரை நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கிணறுகள் அதிகம் அமையும்.

    சில ஹைட்ரோ கார்பன் கிணறுகள் மக்கள் அடர்த்தியாக, அதிகம் வாழும் பூம்புகார், வேளாங்கண்ணி, நாகை, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அமைய உள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இயற்கையாக அமைந்துள்ள பிச்சாவரம் பாம்குரோவ் காடுகளின் மிக, மிக அருகில் அதாவது பிச்சாவரம் பாம்குரோவ் காட்டுப் பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும் எண்ணெய் கிணறுகள் வர உள்ளன.

    விழுப்புரத்தில் தொடங்கி புதுச்சேரி வரையிலான முதல் பிரிவு திட்டத்தின்படி மொத்தம் 1,794 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதில் 1654 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வங்க கடலில் அமைகிறது. மீதமுள்ள 141 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விழுப்புரம் பகுதியில் 139 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பூமிக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். புதுச்சேரி பகுதியில் 2 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும்.

    இரண்டாவது பிரிவில் 2574 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாகையில் 142 சதுர கிலோ மீட்டருக்கும், காரைக்காலில் 39 சதுர கிலோ மீட்டருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் பட உள்ளது. மீதமுள்ள 2393 சதுர கிலோ மீட்டர் பகுதி கடலில் அமைகிறது.

    274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே கிணறு அமைக்கும் பணிக்கான ஆய்வறிக்கையை அது மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. அந்த அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் காவிரிப் படுகையில் உள்ள ஹைட்ரோ கார்பன்களை உறிஞ்சி எடுக்கும் பணிகள் தொடங்கி விடும்.

    அடுத்த 15 ஆண்டுகளுக்குள் காவிரிப் படுகையில் உள்ள பெரும்பாலான இயற்கை எரிவாயுவை எடுக்கும் வகையில் இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை தயாரிக்க ரூ.106 கோடி செலவாகும் என்றும் கிணறு தோண்ட தலா ரூ.49 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    காவிரிப் படுகையில் இதற்கு முன்பு இயற்கை எரி வாயும், கச்சா எண்ணெயையும் மட்டுமே எடுக்கப்பட்ட வந்தது. தற்போது மிக, மிக ஆழமான பகுதிகளில் உள்ள ஷேல் எரிவாயுவை எடுக்க முடிவு செய்துள்ளனர். காவிரிப் படுகையில் ஷேல் எரிவாயு மிக, மிக அதிக அளவில் இருப்பது நவீன ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஷேல் எரிவாயு என்பது பூமியின் மிக ஆழமான பகுதிகளில் களி மண் பாறைகளில் உள்ள துளைகளில் தங்கி இருக்கும் வாயுவாகும். இந்த வாயுவை வெளியில் எடுப்பது சாதாரணமான பணி அல்ல.

    78 விதமான வேதிப் பொருட்களை தண்ணீருடன் கலந்து அதை 6 டன் வேகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செலுத்தினால்தான், அந்த ஷேல் வாயுக்கள் களிமண் பாறை துளைகளில் இருந்து வெளியேறி வரும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி டெல்டா பகுதி மக்கள் ஏற்கனவே குடிநீரே கிடைக்காமல் தவித்தப்படி உள்ளனர். விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் தண்ணீரை எடுத்தால் மிகப் பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதுமட்டுமின்றி பூமிக்கு கீழ் துளைகளில் உள்ள வாயுவை அகற்றும் போது கடல் நீர் புகுந்து நல்ல நிலம் உலர் நிலமாக மாறும். 78 வகையான வேதிப் பொருட்களை பூமிக்குள் செலுத்துவதால் நிலத்தடி நீர் மாசுபடும். அது புற்று நோயை மிக எளிதாக வரவழைக்கும் என்கிறார்கள்.

    காவிரிப் படுகையின் பூமி சல்லடையாக துளைக்கப்படும் பட்சத்தில் நில நடுக்கம் அபாயம் அதிகரிக்கும். இந்த திட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் பணி புரிய லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் குடியேற வாய்ப்புள்ளது. இது தமிழர்களின் கலாச்சாரத்தை உடைக்கும் வகையில் மாறும்.

    தமிழர்களின் ஒட்டு மொத்த வாழ்வாரத்தையே இந்த திட்டம் அழித்து விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே காவிரிப் படுகையில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    எட்டயபுரத்தில் அ.ம.மு.க. நிர்வாகி மீது அவரது மனைவி கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 48). இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இவரது மனைவி மீனாட்சி(40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி அதிகாலை மீனாட்சி சமைத்து கொண்டிருந்தார். அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த மீனாட்சி சமைத்து கொண்டிருந்த கொதிக்கும் எண்ணையை எடுத்து முனியசாமி மீது ஊற்றியுள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் மீனாட்சியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் 50 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. #EnnorePort #OilSpill

    பொன்னேரி:

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரன் ஸ்டார் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது. கடந்த 14-ந் தேதி இந்த கப்பல் துறை முகத்துக்கு வந்து சேர்ந்தது.

    நேற்று அதிகாலை 4 மணி அளவில் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது இணைப்பு குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கப்பலில் நிலை தளத்தின் மீது கொட்டியது. பின்னர் அங்கிருந்து வழிந்து கடலில் கலந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக எண்ணெய் செல்லும் குழாயை அடைத்தனர். இதனால் பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறவில்லை.

    எனினும் சுமார் 2½டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்து விட்டது. இதனால் கப்பலை சுற்றி எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. எண்ணெய் படலம் பரவாமல் இருக்க உடனடியாக அவசர மீட்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

    கடலில் கொட்டிய கச்சா எண்ணெய்  மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், மிதக்கும் எண்ணெயை அகற்ற வசதியாகவும் கப்பலை சுற்றிலிலும் மிதவை தடுப்புகள் போடப்பட்டன.

     


    துறைமுக தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கடலோ பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணூர் துறை முகத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    எண்ணெய் படலத்தை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆகாய மார்க்க மாகவும், கடலில் உள்ளே இருந்தும் எண்ணெய் படலம் எதுவரையில் பரவி இருக்கிறது என்று கணக்கிடப்பட்டது. இதில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு எண்ணெய் பரவியிருப்பது தெரிய வந்தது. துறைமுகத்தை ஒட்டிய கடல் பகுதியில் மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்திற்குள் மட்டும் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து எண்ணெயை உறிஞ்சும் நான்கு பெரிய ஸ்கிம்பர் கருவியை கடலில் இறக்கி எண்ணெய் படலத்தை உறிஞ்சி வருகின்றனர். இன்று 2-வது நாளாக பணி நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் மிதவை தடுப்புகள் போடப்பட்ட இடத்தை சுற்றிலும் படகுகள் மூலம் துறைமுக ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணித்து வருகின்றன. கடலோர காவல் படை படகுகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. உறிஞ்சி எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பேரல்களில் சேகரிக்கப்பட்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதற்கிடையே இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான மாசு கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ‘சமுத்ரா பஹேரேதார்’ என்ற கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் படலத்தை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருவதால் விரைவில் இந்த பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து துறைமுக ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது, “கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. மிதவை போடப்பட்ட இடத்திற்குள்ளேயே எண்ணெய் மிதக்கிறது.

    மேலும் அது பரவ வாய்ப்பு இல்லை. எனவே பெரிய அளவில் கடலில் மாசு ஏற்படாது.  50 சதவீத எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது.  இன்று மாலைக்குள் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

    எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கச்சா எண்ணெய் கொட்டியது. இதில் எண்ணூரில் இருந்து நீலாங்கரை வரையிலும் பரவியிருந்தது. இதனால் கடலில் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2 ஆண்டுகளில் எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணை கொட்டு வது இது 2-வது முறை ஆகும். #EnnorePort  #OilSpill

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா மந்திரி ஆலோசனை தெரிவித்துள்ளார். #Saudiminister #1mlnbpd #oiloutputcut
    அபுதாபி:

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய  கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.

    இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி இன்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.


    அபுதாபியில் இன்று நடைபெற்ற எரிபொருள் கருத்தரங்கில் பேசிய காலித் அல் ஃபலி, ‘சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம்’ என குறிப்பிட்டார்.

    சவுதி அரேபியாவும் அடுத்த மாதத்துக்குள் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். #Saudiminister #1mlnbpd #oiloutputcut
    ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #US #Iran #India
    வாஷிங்டன்:

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறியது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதற்கிடையே, ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா சமீபத்தில் கூறியது. இதுகுறித்து அமெரிக்காவிடம் விளக்கியது.



    இந்நிலையில், ஈரான் நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்காவின் வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள 8 நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். இருப்பினும், அமெரிக்க தடைக்கு பின்னர் குறைந்தளவே கச்சா எண்ணெய் வாஙக அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #US #Iran #India
    ஈரான் உடனான உறவை துண்டிக்க அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியுறவு இணை மந்திரி பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். #MansoonSession #VKSingh
    புதுடெல்லி:

    ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. 

    நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிடில் பல விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என அமெரிக்கா கூறியிருந்தது.

    சவூதி, ஈராக் நாட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அமெரிகாவின் எச்சரிக்கை இந்தியா, சீனா என பல நாடுகளுக்கும் பொருந்தும் நிலையில், இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.



    இந்நிலையில், இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விளக்கமளித்த மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-

    ஈரானுடனான உறவை, சுதந்திரமாக இந்தியா முடிவு செய்யும். இதில் 3ஆவது நாட்டின் தலையீட்டுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நலன்களைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

    என அவர் பேசினார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழு, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்து, டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 
    ×