search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ennore Port"

    26CNI0240402024: சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு சமீபத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. இந்த நிலையில் அந்த கப்பலில் வந்த காங்-யுவு (57) என்ற மாலுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சீன கப்பல் கடந்த 6-ந் தே

    பொன்னேரி:

    சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு சமீபத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது.

    இந்த நிலையில் அந்த கப்பலில் வந்த காங்-யுவு (57) என்ற மாலுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சீன கப்பல் கடந்த 6-ந் தேதி இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்த இருந்த போதே அவர் காணவில்லை என்று இந்தோனேசியா துறைமுகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் மாலுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? உடல்நல குறைவால் உயிரிழந்தாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்று இருப்பது ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிய வந்தது.
    • கண்டெய்னர் கதவின் சீலை உடைக்காமல் அதில் உள்ள கதவின் நட்டுகளை கழற்றி 495 டயர்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    பொன்னேரி:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து 1500 டயர்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு சென்றது. இந்த டயர்கள் அனைத்தும் பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    பிரேசில் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ரூ.8.29 லட்சம் மதிப்பு உள்ள 495 டயர்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக பிரேசில் நாட்டில் உள்ள நிறுவனம் சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்று இருப்பது ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிய வந்தது. மேலும் கண்டெய்னர் கதவின் சீலை உடைக்காமல் அதில் உள்ள கதவின் நட்டுகளை கழற்றி நூதன முறையில் 495 டயர்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக மணலி சன்னதி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணி (29), திருவொற்றியூரைச் சேர்ந்த இளமாறன் என்கிற அப்புன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான 4 பேரை போலீசர் தேடி வருகிறார்கள்.

    • பிரேசில் நாட்டு கம்பெனி ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு புகார் தெரிவித்தது.
    • முதல் விசாரணையில் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்றதாக ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரியவந்துள்ளது.

    பொன்னேரி:

    சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் கம்பெனி டயர் கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு மீஞ்சூர் அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் பிரேசில் நாட்டுக்கு 1500 டயர் ஏற்றுமதி செய்ய கடந்த 2-ம் மாதம் 9-ந் தேதி அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் பிரேசில் நாட்டில் ஆர்டர் கொடுத்த கம்பெனி நிறுவனம் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் 1005 டயர்கள் மட்டும் இருப்பது தெரியவந்தது. மீதமுள்ள 495 டயர்கள் காணாமல் இருப்பது குறித்து பிரேசில் நாட்டு கம்பெனி ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு புகார் தெரிவித்தது.

    அதன் அடிப்படையில் தனியார் டயர் கம்பெனி தலைமை அதிகாரி நாராயணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டு மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து முதல் விசாரணையில் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்றதாகவும் ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரியவந்துள்ளது. மேலும் கண்டெய்னர் கதவு சீல் உடைக்காமல் கதவின் போல்ட் மட்டும் கழற்றி 495 டயர்களை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு 8.29 லட்சம் ஆகும். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மலேசியாவில் இருந்து மேலும் ஒரு கப்பலில் ஆற்று மணல் வந்ததையடுத்து மேலும் 3 கப்பல்களில் மெட்ரிக் மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. #EnnorePort
    சென்னை:

    தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை அரசே இறக்குமதி செய்து பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 56 ஆயிரத்து 750 மெட்ரிக்டன் ஆற்று மணல் சரக்கு கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மணல் துறைமுக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக ஒரு யூனிட் மணல் ரூ.10,350 என்ற விலையில் இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த 21-ந் தேதி மலேசியாவில் இருந்து 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் ஆற்று மணல் கப்பலில் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் ஏற்றிய நிலையில் 3-வது கப்பல் எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. ஏற்கெனவே 2-வது கப்பலில் வந்த மணல் விற்பனை இன்னும் தொடங்கப்படாத நிலையில் 3-வது கப்பலிலும் மணல் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் உள்ளூர் மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஒரே வாரத்தில் 2 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 3 கப்பல்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் மணல் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. #EnnorePort
    எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று கப்பல் மூலம் 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் கொண்டு வரப்பட்டு பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. #EnnorePort
    சென்னை:

    புதுக்கோட்டயை சேர்ந்த தனியார் நிறுவனம் வெளிநாட்டில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 55 ஆயிரம் டன் ஆற்று மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தது. அந்த மணலை விற்க தமிழக அரசு தடை விதித்தது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த ஆற்று மணலை தமிழக அரசு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க தேவை ஏற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை அரசே இறக்குமதி செய்து பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை தனியார் நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க டெண்டர் விடப்பட்டது. இதில் ஐதராபாத் மதன்பூரை சேர்ந்த இன்ரிதம் எனர்ஜி நிறுவனம் மணல் இறக்குமதி செய்து ஒப்படைக்க தேர்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் மெட்ரிக்டன் ஆற்று மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி முதல் கட்டமாக 56 ஆயிரத்து 750 மெட்ரிக்டன் மணல் மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை மூலம் 4.5 டன் கொண்டு 1 யூனிட் மணல் ரூ.10 ஆயிரத்து 350 என்ற வகையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் கப்பல் மூலம் 52 ஆயிரத்து 68 மெட்ரிக் டன் மலேசிய ஆற்று மணல் கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக மணலை கப்பலில் இருந்து இறக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மணலை இறக்கும் பணி நாளை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த மணலை பொதுமக்களுக்கு நேரடியாக விற்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து மணலுக்கான தொகையை செலுத்திய பிறகு தாங்களே லாரிகளை ஏற்பாடு செய்து மணலை ஏற்றிச் செல்லலாம். #EnnorePort
    எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் 50 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. #EnnorePort #OilSpill

    பொன்னேரி:

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரன் ஸ்டார் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது. கடந்த 14-ந் தேதி இந்த கப்பல் துறை முகத்துக்கு வந்து சேர்ந்தது.

    நேற்று அதிகாலை 4 மணி அளவில் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது இணைப்பு குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கப்பலில் நிலை தளத்தின் மீது கொட்டியது. பின்னர் அங்கிருந்து வழிந்து கடலில் கலந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக எண்ணெய் செல்லும் குழாயை அடைத்தனர். இதனால் பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறவில்லை.

    எனினும் சுமார் 2½டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்து விட்டது. இதனால் கப்பலை சுற்றி எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. எண்ணெய் படலம் பரவாமல் இருக்க உடனடியாக அவசர மீட்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

    கடலில் கொட்டிய கச்சா எண்ணெய்  மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், மிதக்கும் எண்ணெயை அகற்ற வசதியாகவும் கப்பலை சுற்றிலிலும் மிதவை தடுப்புகள் போடப்பட்டன.

     


    துறைமுக தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கடலோ பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணூர் துறை முகத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    எண்ணெய் படலத்தை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆகாய மார்க்க மாகவும், கடலில் உள்ளே இருந்தும் எண்ணெய் படலம் எதுவரையில் பரவி இருக்கிறது என்று கணக்கிடப்பட்டது. இதில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு எண்ணெய் பரவியிருப்பது தெரிய வந்தது. துறைமுகத்தை ஒட்டிய கடல் பகுதியில் மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்திற்குள் மட்டும் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து எண்ணெயை உறிஞ்சும் நான்கு பெரிய ஸ்கிம்பர் கருவியை கடலில் இறக்கி எண்ணெய் படலத்தை உறிஞ்சி வருகின்றனர். இன்று 2-வது நாளாக பணி நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் மிதவை தடுப்புகள் போடப்பட்ட இடத்தை சுற்றிலும் படகுகள் மூலம் துறைமுக ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணித்து வருகின்றன. கடலோர காவல் படை படகுகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. உறிஞ்சி எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பேரல்களில் சேகரிக்கப்பட்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதற்கிடையே இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான மாசு கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ‘சமுத்ரா பஹேரேதார்’ என்ற கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் படலத்தை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருவதால் விரைவில் இந்த பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து துறைமுக ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது, “கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. மிதவை போடப்பட்ட இடத்திற்குள்ளேயே எண்ணெய் மிதக்கிறது.

    மேலும் அது பரவ வாய்ப்பு இல்லை. எனவே பெரிய அளவில் கடலில் மாசு ஏற்படாது.  50 சதவீத எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது.  இன்று மாலைக்குள் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

    எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கச்சா எண்ணெய் கொட்டியது. இதில் எண்ணூரில் இருந்து நீலாங்கரை வரையிலும் பரவியிருந்தது. இதனால் கடலில் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2 ஆண்டுகளில் எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணை கொட்டு வது இது 2-வது முறை ஆகும். #EnnorePort  #OilSpill

    தமிழ்நாட்டில் மணல் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. #SandImport #EnnorePort

    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில் மிகவும் தேக்கம் அடைந்துள்ளது.

    மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பலில் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த மணல் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் வாங்குவதற்கு வசதியாக இருந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு 50 ஆயிரம் டன் மணல் கப்பலில் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டது.

    ஒரு யூனிட் மணல் ரூ.10,350-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. லாரி உரிமையாளர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து மலேசிய மணலை வாங்கி வந்தனர்.

    எண்ணூர் துறைமுகத்தில் தற்போது 500 லாரி அளவுக்குத்தான் மணல் உள்ளது. இதுவரை புக்கிங் செய்தவர்களுக்குத்தான் இந்த மணலை விற்க முடியும் என்பதால் நேற்று மதியம் ஆன்-லைன் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. இனி மேல் மணல் வந்தால்தான் மீண்டும் முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மணல் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. அனேகமாக இன்னும் 10 நாளில் கப்பலில் மணல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    கடந்த முறை இறக்குமதி செய்யப்பட்ட மணலை விட இந்த முறை 2 மடங்கு அதிகம் மணல் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. 1 லட்சம் டன் அளவுக்கு மலேசிய மணலை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த முறை வீடு தேடி மணல் வினியோகம் செய்யும் நடைமுறையும் தொடங்கி வைக்கப்படும் என தெரிகிறது.

    இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    மலேசிய மணல் தூத்துக்குடி, எண்ணூருக்கு வருவதால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் விலையில் மணல் கிடைக்கிறது.

    கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மணல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஏராளமானவர்கள் மணல் கேட்டு காத்திருக்கிறார்கள்.

    மணல் லாரி உரிமையாளர்கள் 41 ஆயிரம் லாரிகளுக்கு பணம் செலுத்திவிட்டு காத்திருப்பதால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு வருகிற 19-ந்தேதி லாரிகளுடன் காத்திருப்பு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SandImport #EnnorePort

    எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலின் பரிசோதனை முடிவு வராததால் மணல் விற்பனை தாமதமாகி உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

    இதைத் தொடர்ந்து முதற் கட்டமாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் 55 ஆயிரம் டன் மணல் கொண்டுவரப்பட்டது.

    ஒரு யூனிட் மணல் ரூ.9980-க்கு விற்பனை செய்யலாம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த மணலை வாங்க நிறைய பேர் முன் வரவில்லை. இதனால் மணல் இன்னும் முழுமையாக விற்பனையாகவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் எண்ணூர் துறைமுகத்துக்கும் மலேசியாசில் இருந்து கப்பலில் மணல் கொண்டுவரப்பட்டது. இந்த மணலை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் முன்பதிவு செய்ய முடியாத நிலைதான் காணப்படுகிறது.

    இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துள்ள மணலில் சிலிக்கான் கலப்படம் எதுவும் உண்டா? அது ஆற்று மணல்தானா? என்பதை கண்டறிய பரிசோதனை செய்வது வழக்கம். அந்த நடைமுறைக்காக மணல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்ததும் விற்பனை தொடங்கப்படும்.

    அனேகமாக இன்று அல்லது நாளை பரிசோதனை முடிவு வந்துவிட்டால் முன்பதிவை தொடங்கி வருகிற 1-ந்தேதியில் இருந்து மணல் விற்பனையை தொடங்கி விடுவார்கள். காலதாமதத்துக்கு இதுதான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கு விரிவாக்கம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கமல்ஹாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் 3-ம் கட்ட விரிவாக்க நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடக்க உள்ளது. கடற்கரைக்கு முன்னால் உள்ள சதுப்பு நிலத்தை தொழிற்சாலை நிலமாக மாற்றி நிலக்கரி சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கு சட்டவிரோதமாக பரிசீலித்து வருகிறீர்கள். இது பேராபத்தை ஏற்படுத்துவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை நீரோட்டத்தை தடுக்காத வகையில் இன்னொரு இடத்தில் செயல்படுத்தலாம்.

    எண்ணூர் கழிமுகப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் வெள்ளப்பெருக்கு சமயத்தில் சென்னைவாசிகளுக்கு மேலும் தீங்கு ஏற்படும். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். எனவே நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுக விரிவாக்க பணிகள் குறித்து பரிசீலிக்கக்கூடாது. முதலில் 2 நபர் துணைக்குழு கடந்த ஜனவரி மாதம் ஆய்வு நடத்தியது தொடர்பான அறிக்கையை வெளியிடவேண்டும். அதன் பின்னர் அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு அனுமதிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×