search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணை"

    • இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும்.
    • உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

    நாகப்பட்டினம்:

    அடுத்த மாதம் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள் மற்றும் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. தரமான பொருள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்ட த்தில், உணவு பாதுகாப்பு த்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்

    புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மற்றும் நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், தயாரிக்கப்பட்ட இனிப்பு கள், காரம், எண்ணெய், நெய், பாசிப்பரு ப்பு, கடலைப்பருப்பு, கடலை மாவு, போன்ற பலகாரங்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொ ருட்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவை உணவு விற்பனை நிலையங்களில் உணவு மாதிரிகளாக எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.

    ஒரு உணவு விற்பனை நிலையத்தை நியமன அலுவலர் புஷ்பராஜ், உணவு பாதுகா ப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, தயாரிப்பு விபரம் முறையாக இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்ப ட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் கைப்ப ற்றப்பட்டு, முழுமையான விபரத்துடன் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவுடன் மீண்டும் நிறுவன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதையடுத்து நியமன அலுவலர் புஷ்பராஜ் அளித்த பேட்டியில்,

    இனிப்பு , கார வகைகள் விற்பனை செய்பவர்கள் தரமான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்க வேண்டும். உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படு த்தக்கூடாது. உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை மேற்கொள்ளும் பகுதி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

    அனைத்து உணவு விற்பனையாளர்களும் உரிமம் , பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ஐ மீறுபவர்கள்மீது கடுமையா ன நடவடிக்கை எடுக்க ப்படும். பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது புட்சேப்டி ஆப் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம். உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். புகார்தாரர் விபரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

    • சிக்கன் கடையில் கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பதாக புகார் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அந்த கடையில் சோதனை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மெய்யனூரில் உள்ள சிக்கன் கடையில் கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பதாக புகார் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உணவுக்கு ஒவ்வாத கெட்டு போன 40 லிட்டர் சமையல் எண்ணை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 40 லிட்டர் எண்ைண பறிமுதல் செய்யப்பட்டது. இந்த எண்ணை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதும், அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டி விற்க முயற்சி செய்துள்ளதும் தெரியவந்தது. இந்த எண்ணையில் தயாரிக்கப்படும் உணவை உட்கொண்டால் பல நோய்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அந்த சிக்கன் கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சமையல் எண்ணெய் விலைகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக, விவசாயிகள் கொண்டு வரும் சூரியகாந்தி விதைகள் ஏல முறையில் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ சூரியகாந்தி விதைகள் 65 முதல் 73 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சராசரி விலையாக ரூ.66-க்கு விலை போனதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ஊத்துக்குளி, குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம் பகுதிகளில் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து சூரியகாந்தி விதைகள் உலக நாடுகளுக்கு ஏற்றமதியாவது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலைகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. மேலும் மற்ற எண்ணெய் வித்துகளில் இருந்து தயாராகும் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது‌.

    இந்நிலையில், சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.230 ரூபாயை கடந்து விற்பனையாகும் நிலையில், விதைகளுக்கு போதிய விலை கிடைக்காமல் சரிவை சந்தித்து வருகிறது. சூரியகாந்தி பயிரிட்டு விதைகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் அவர்களுக்கு நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெளிச்சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், விதைக்கு விலை கிடைக்கவில்லை. பெரு நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து விதைக்கு விலை கிடைக்காமல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ×