search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oil"

    • தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் முக்கியத்துவம் வாய்ந்தது.
    • எந்த எண்ணெய் தீபம் ஏற்ற உகந்தது என்று அறிந்துகொள்ளலாம்.

    கடலை எண்ணெய், பாமாயில், ரீபைண்டு ஆயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை விளக்கேற்ற பயன்படுத்தக்கூடாது. இவற்றால் தீமைகளே ஏற்படும்.

    இறைவனுக்கு உகந்த எண்ணெய் விபரம் வருமாறு:-

    மகாலட்சுமிக்கு - நெய்

    திருமால், சர்வ தேவதைகளுக்கு - நல்லெண்ணெய்

    விநாயகருக்கு - தேங்காய் எண்ணெய்

    சிவபெருமானுக்கு - இலுப்பை எண்ணெய்

    அம்பாளுக்கு -நெய்,விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஊற்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜை செய்ய, அம்பாளின் அருள் கிடைக்கும்.

    தீபத்திற்கு ஏற்ற எண்ணெய்

    பசு நெய்:- லட்சுமி வாசம் செய்வாள், புத்திர பாக்கியம் கிட்டும்.

    நல்லெண்ணெய்:- பூஜை தீபத்திற்கு சிறந்தது, சனி பரிகாரம் தரும், லட்சுமிகடாட்சம் உண்டாகும்.

    தேங்காய் எண்ணெய்:- லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யும், கணவன், மனைவி பாசம் கூடும், பழையபாவம் போகும்.

    இலுப்பை எண்ணெய்:- எல்லாப் பாவங்களும் போகும், மோட்சம் கிட்டும், நல்ல ஞானம் வரும், பிறப்பு அற்றுப் போகும்.

    விளக்கெண்ணெய்:- தெய்வ அருள், புகழ், ஜீவன சுகம், உற்றார் சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை இது விருத்தி செய்யும்.

    வேப்ப எண்ணெய்:- குலதெய்வ அருள் கிடைக்கும்.

    மூவகைஎண்ணெய்- நெய், வேப்பஎண்ணை, இலுப்பை எண்ணெய் இந்த மூன்றும் கலந்து தீபமிட செல்வம் உண்டாகும். ஆரோக்கியம் தரும். இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.

    • கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.
    • இந்த எண்ணெய் கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை தரும்.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் எண்ணெய் - 500 மி

    நல்லெண்ணெய் - 100 மி

    கரிசலாங்கண்ணி இலைகள் - 2 கைப்பிடி

    அரைக்க வேண்டியவை

    சின்ன வெங்காயம் - 20

    செம்பருத்தி இலை - 2 கைப்பிடி

    கறிவேப்பிலை - 2 கைப்பிடி

    கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்

    மருதாணி - 1 கைப்பிடி

    நெல்லிக்காய் - 10

    வெந்தயம் - 2 ஸ்பூன்

    கற்றாழை - 2 இதழ்.

    செய்முறை

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.

    இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

    குறிப்பு: சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

    • கறிவேப்பிலை எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல.
    • இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் எண்ணெயின் மகத்துவம் கொஞ்சம் அல்ல. இந்த எண்ணெயானது இளம் வயதினரை தாக்கும் நரை முடியை மீண்டும் கருமையாக்க உதவி புரிகிறது. இதெல்லாம் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த வழி முறைகள் தான்.

    இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.

    இந்த பெரும் பிரச்சனையில் இருந்து விடுபட கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தலாம். இப்போது கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்…

    தேவையான பொருட்கள்:

    கறிவேப்பிலை எண்ணெய் செய்ய இரண்டே பொருட்கள் போதும். ஒன்று செக்கில் கொடுத்து அரைக்கப்பட்ட சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும். இரண்டாவது நிழலில் உலர்த்தப்பட்ட கறிவேப்பிலை இலைகள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு நிழலில் உலர்த்த வேண்டும்.

    செய்முறை:

    முதலில் தேவையான அளவு கறிவேப்பிலையை உருவி ஒரு தட்டில் அல்லது துணியில் போட்டு நிழலில் உலர்த்தி வையுங்கள். கறிவேப்பிலையில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ளவும். கடாய் ஒன்றில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை சூடு செய்யுங்கள்.

    தீயை குறைவாக வைத்து சூடு செய்யுங்கள். அதே சமயம் புகை வரும் அளவிற்கு சூடு செய்ய வேண்டாம். எண்ணெய் சூடேறிய பிறகு உலர்த்தி வைக்கப்பட்ட கறிவேப்பிலையை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இந்த எண்ணெய் நன்றாக ஆறி வரட்டும். கறிவேப்பிலை நிறம் மாறி வரும்.

    எண்ணெய் முழுவதுமாக ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் இதனை ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். கறிவேப்பிலையோடு சேர்த்தே ஊற்றிக் கொள்ளலாம். கறிவேப்பிலை எண்ணெயில் மிதக்காமல் நன்றாக மூழ்கி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இளநரை உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இந்த எண்ணெயை உபயோகிக்கலாம்.

    • இதனைத் தினமும் இரவு செய்யலாம்.
    • சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன.

    ஜோஜோபா எண்ணெயில் (Jojoba Oil ) அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் கண்களைப் புத்துயிர் பெறச் செய்யும். அவோகேடாவில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது. அப்ரிகாட் கர்னல் எண்ணெயில் வைட்டமின் ஏ, ஓலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் உள்ளதால் சோர்வடைந்த கண்களுக்கு சிகிச்சையளிக்கின்றன. அத்துடன் தேங்காய் எண்ணெயை தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியை நீரேற்றத்துடன் வைக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜோஜோபா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டியளவு

    அப்ரிகாட் கர்னல் எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    அவோகேடா எண்ணெய் - 2 தேக்கரண்டியளவு

    4 எண்ணெய்களையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி கண்களைச் சுற்றித் தடவிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து கழுவுங்கள். இதனைத் தினமும் இரவு செய்யலாம்.

    கண் சுருக்கங்கள்

    ஆரஞ்சு பழத்தின் தோல் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுவதால் கண்களில் ஏற்பட்ட சுருக்கத்தினை சரி செய்ய உதவுகிறது. வேப்ப எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் கண்களின் தோற்றத்தினை மேம்படுத்துகிறது.

    தேவையான பொருட்கள்

    1 தேக்கரண்டியளவு ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர், 3 முதல் 4 துளி வேப்ப எண்ணெய் எடுத்து ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.

    • குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது.
    • பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது.

    பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சரியான எண்ணெய் மசாஜ், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. எண்ணெய் மசாஜ் மூலம் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிப்பது பெற்றோர் கையில் மட்டும் தான் உள்ளது.

    குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும்.

    குழந்தையின் நாசுக்கான சருமத்தில் ஏதாவது ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்தில் தவறான பாதிப்புகளைத் தரும். எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த ளரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.

    குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும்.

    சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நகங்கள் மற்றும் தலை முடிக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி மற்றும் விரல்கள் மிகவும் பளபளப்பாக மாறுகின்றன. குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

    குழந்தைக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் மிகவும் ஏற்றது. ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் குழந்தையின் தசை வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தோல் அழற்சி, வெட்டு அல்லது தடிப்புகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும். வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது .

    • ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
    • ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

    சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

    தேவையானவை: எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி, மென்மையான பருத்தி துணி, வெந்நீர்

    செய்முறை: உங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி, வட்ட இயக்கத்தில் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யால் மசாஜ் செய்யவும். மூக்கு, கன்னங்கள் மற்றும் நெற்றியில் சற்று அழுத்தித் தேய்க்கவும். இப்போது, பருத்தி துணியை வெந்நீரில் நனைக்கவும். அறை வெப்பநிலைக்கு வரும் வரை துணியை முகத்தில் அழுத்திப் பிடிக்கவும்.

    துணியை எடுத்த பின்பு மீண்டும் மிதமான சூடுள்ள நீரில் நனைக்கவும். இந்த முறை துணியை வைத்து அழுத்துவதற்குப் பதிலாக, எண்ணெய்யை அகற்றுவதுபோல் அழுத்தி மசாஜ் செய்யவும். அதன்பிறகு, டிஷ்யூ பேப்பரால் முகத்தைத் துடைத்து உலர வைக்கவும். இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு செய்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். சருமம் பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி குறையும்.

    • கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
    • கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

    இப்போது இருக்கும் மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில் இள வயதிலேயே முடி உதிர்கிறது. இதை தடுக்க பலர் ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட் போன்ற சிகிச்சைகளை லட்சக்கணக்கில் செலவு செய்து எடுத்து கொள்கின்றனர். ஆனால் இதற்கு நம் ஆயுர்வேதத்தில் செலவில்லாமல் சிகிச்சை உள்ளது, அது பற்றி பார்க்கலாம்.

    கருப்பு மிளகு எண்ணெய்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன.

    உச்சந்தலையில் வீக்கம் ஏற்பட்டால், முடி வேரில் வலுவிழந்து விழ ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், கருப்பு மிளகு எண்ணெயை தடவுவதன் மூலம் உங்கள் தலைமுடியை வலுவாக மாற்றலாம். சொட்டை தலையில் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது. மேலும், இதன் இந்த பண்பு பொடுகை சுத்தப்படுத்தி, அது பரவாமல் தடுக்கிறது. ஆக கருப்பு மிளகு எண்ணெய் பொடுகுக்கு சிறந்த மருந்து என்றால் அது மிகையாகாது.

    கருப்பு மிளகு எண்ணெய் உச்சந்தலையில் தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு மிகவும் நல்லது. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கரு மிளகு எண்ணெய், உச்சந்தலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது.

    • சிக்கன் கடையில் கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பதாக புகார் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அந்த கடையில் சோதனை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மெய்யனூரில் உள்ள சிக்கன் கடையில் கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பதாக புகார் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உணவுக்கு ஒவ்வாத கெட்டு போன 40 லிட்டர் சமையல் எண்ணை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 40 லிட்டர் எண்ைண பறிமுதல் செய்யப்பட்டது. இந்த எண்ணை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதும், அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டி விற்க முயற்சி செய்துள்ளதும் தெரியவந்தது. இந்த எண்ணையில் தயாரிக்கப்படும் உணவை உட்கொண்டால் பல நோய்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அந்த சிக்கன் கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும்.
    • கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையத்திற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும்.

    மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது வால்நட். காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. பல்வேறு நன்மைகளை தரும் வால்நட், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.

    சுருக்கம் மற்றும் வறட்சி: வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி, கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் எண்ணெய் ஊடுருவி, சுருக்கங்களை நீக்கி, இளமை தோற்றத்தை மீட்டுத்தரும். இரவில், இந்த எண்ணெய்யை நன்றாகத் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதமாகும்.வால்நட் எண்ணெய்யைக் குளிக்கும் தண்ணீரில் சிறிது சேர்த்துக் குளித்து வந்தால், சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகளுடன் ஏற்படும் அழற்சி பிரச்சினை தீரும்.

    சருமத் தொற்று மற்றும் கருவளையம்: வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை குணப்படுத்த, வால்நட் எண்ணெய்யை ஏதேனும் ஒரு மூலிகை எண்ணெயுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரலாம். பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும். இதை கண்களைச் சுற்றித் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், சில நாட்களிலேயே கருவளையம் மறையும். இதில், உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தின் இளமையை தக்கவைக்கும் தன்மை கொண்டவை.

    அரிப்பு மற்றும் பொடுகு: குளிப்பதற்கு முன்பு வால்நட் எண்ணெய்யை இளம் சூட்டில் உடலில் தடவிக் குளித்தால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் குறையும். வால்நட் எண்ணெய்யை தலைப்பகுதியில் உள்ள சருமத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

    முடி வளர்ச்சி: வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெயை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும். இதுதவிர, புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வால்நட் எண்ணெய்யில் இருக்கும் சத்துக்களுக்கு உண்டு. தினமும் வால்நட்டை சாப்பிடுவதால், புற்றுநோய் பாதிப்பு 15 சதவீதம் குறைவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலும் வால்நட் எண்ணெய்க்கு உள்ளது.

    • விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சமையல் எண்ணெய் விலைகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக, விவசாயிகள் கொண்டு வரும் சூரியகாந்தி விதைகள் ஏல முறையில் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ சூரியகாந்தி விதைகள் 65 முதல் 73 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சராசரி விலையாக ரூ.66-க்கு விலை போனதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ஊத்துக்குளி, குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம் பகுதிகளில் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து சூரியகாந்தி விதைகள் உலக நாடுகளுக்கு ஏற்றமதியாவது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலைகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. மேலும் மற்ற எண்ணெய் வித்துகளில் இருந்து தயாராகும் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது‌.

    இந்நிலையில், சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.230 ரூபாயை கடந்து விற்பனையாகும் நிலையில், விதைகளுக்கு போதிய விலை கிடைக்காமல் சரிவை சந்தித்து வருகிறது. சூரியகாந்தி பயிரிட்டு விதைகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் அவர்களுக்கு நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெளிச்சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், விதைக்கு விலை கிடைக்கவில்லை. பெரு நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து விதைக்கு விலை கிடைக்காமல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • வண்ணார்பேட்டை ஆற்று பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆயில் கொட்டிக்கிடப்பதை கவனிக்காமல் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர்.
    • போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கொட்டிக்கிடந்த ஆயில் மீது மணலை தூவி அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் இருந்து தச்சநல்லூர் செல் லும் சாலையில் உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தில் இன்று காலை ஆயில் ஏற்றி சென்ற லாரியில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டது.

    பாலத்தில் கொட்டிய ஆயில்

    இதனால் ஆற்று பாலத்தில் ஆயில் கொட்டி கிடந்தது. இதில் இன்று காலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர்.

    ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த ஆயிலில் வழுக்கி கீழே விழுந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப் பட்டது.

    தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்ற சென்று கொட்டிக்கிடந்த ஆயில் மீது மணலை தூவி அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேர நெருக்கடிக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

    • இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாமாயில் எதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியுமா?
    • மெழுகுவர்திகள் செய்யவும் இயந்திரங்களுக்கு உயவு எண்ணெய் பயன்பாட்டுக்காகவுமே இந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது.

    லிட்டர் கணக்கில் அளந்து கொடுக்கப்பட்ட எண்ணெய் கிலோ கணக்கில் எடையில் விற்கப்படுவது தற்செயலானது அல்ல.

    சன் ஃப்ளவர் ஆயில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எல்லா எண்ணெய்களிலும், பாரஃபின் வேக்ஸ் என்னும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலிய துணைப் பொருள். குரூட் ஆயிலிலிருந்து பெட்ரோலைப் பிரித்து எடுக்கும்போது கிடைக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று.

    இந்த பாரஃபின் வேக்சால் விளக்கு எரிக்க முடியும். அமெரிக்காவில், மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவது இல்லை. இந்த பாரஃபின் வேக்சே பயன்படுகிறது.

    இந்த பாரஃபின் வேக்சின் அடர்த்தி எண் சாதாரண சமையல் எண்ணெயைவிட அதிகம். அதாவது எடை அதிகம். இது மணமற்றது. நிறமற்றது. இது போதாதா? உடனே இதனை நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சன் ஃப்ளவர் ஆயில் ஆகியவற்றில் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள். குறைந்த விலைப் பொருளைக் கலப்பதால் வரும் லாபம் ஒருபுறம் இருக்க, அந்த கலப்படப் பொருள் அதிக எடையோடு இருப்பதால் எண்ணெய்களை எடைக்கு விற்று அதிலும் லாபம் கண்டார்கள்.

    ஆனால் மக்களாகிய நாம் அமெரிக்க மண்ணெண்ணையைத்தான் அன்றாடம் தின்றுகொண்டிருக்கிறோம்.

    அடுத்தது பாமாயில்:- பாமாயில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய். இது சமையல் எண்ணெய் என்பதற்கு உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள தகுதிகளில் எதனுடனும் பொருந்தாத ஒரு பொருள்.

    இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாமாயில் எதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியுமா? மெழுகுவர்திகள் செய்யவும் இயந்திரங்களுக்கு உயவு எண்ணெய் பயன்பாட்டுக்காகவுமே இந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னாளில், இதனை சுத்திகரிப்பு செய்து உணவுப் பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்பட்டது.

    டீக்கடையில் விற்கப்படும் பஜ்ஜி, வடை , போண்டா...ஹோட்டலில் சாப்பிடும் அனைத்து உணவுகள், இனிப்பு கார வகைகள் என எல்லாமே பாமாயிலில் தயாரிக்கப்படுவதுதான்.

    குறைந்த விலை என்பதால் எல்லோருமே பாமாயிலைப் பயன்படுத்துகிறார்கள். பாமாயிலால் ஏற்படும் பின் விளைவுகள் ஏராளம். அவை உடனே வெளியில் தெரிவதில்லை.

    கொலஸ்ட்ரால், மலச்சிக்கல் உடம்பில் அரிப்பு, இதயக்கோளாறுகள், ரத்தக்குழாய் அடைப்பு ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாய் இருகின்றது .

    அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட எண்ணெய்தான் இந்த பாமாயில்.

    -பி. சுந்தர்

    ×