search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spoiled"

    • சிக்கன் கடையில் கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பதாக புகார் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அந்த கடையில் சோதனை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மெய்யனூரில் உள்ள சிக்கன் கடையில் கெட்டுப்போன உணவுப் பொருள் விற்பதாக புகார் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு உணவுக்கு ஒவ்வாத கெட்டு போன 40 லிட்டர் சமையல் எண்ணை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 40 லிட்டர் எண்ைண பறிமுதல் செய்யப்பட்டது. இந்த எண்ணை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதும், அவற்றை மீண்டும் பயன்படுத்த வேண்டி விற்க முயற்சி செய்துள்ளதும் தெரியவந்தது. இந்த எண்ணையில் தயாரிக்கப்படும் உணவை உட்கொண்டால் பல நோய்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அந்த சிக்கன் கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பவானிசாகர் பூங்கா பகுதிகளில் செயல்படும் மீன் கடைகள், தள்ளு வண்டி கடைகளில் சோதனை செய்தபோது கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டன.
    • பின்னர் மீண்டும் இதே கடைகளில் நாங்கள் ஆய்வு செய்வோம். அப்போதும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்கா சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும்.

    பவானிசாகர் அணை பூங்காவையொட்டி 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்குள்ள பொறித்த மீன்களை சாப்பிடுவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது.

    இந்நிலையில் பவானிசாகர் மீன் விற்பனை நிலையம் மற்றும் பூங்கா எதிரில் செயல்படும் மீன் ரோஸ்ட் கடைகள் மற்றும் உணவகங்களில் கெட்டுப்போன மீன் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    சத்தியமங்கலம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மணி தலைமையிலான அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் 15 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சி, செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பொரித்து வைக்கப்பட்ட 5 கிலோ மீன் ரோஸ்ட் வகை, செயற்கை நிறம் சேர்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ மீன்கள் என மொத்தம் 25 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தையும் அழித்தனர்.

    பின்னர் செயற்கை நிறம் சேர்க்காமல் மீன் இருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் பயன்படுத்த கூடாது. மீன்கள் தரமானதாகவும் செயற்கை நிறம் சேர்க்கப்படாமல் மசாலா பொடிகள் மட்டுமே கலக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    பவானிசாகர் பூங்கா பகுதிகளில் செயல்படும் மீன் கடைகள், தள்ளு வண்டி கடைகளில் சோதனை செய்தபோது கெட்டுப்போன மீன் பறிமுதல் செய்யப்பட்டன.

    செயற்கை நிறம் ஏற்றப்பட்டு பொறித்து வைக்கப்பட்ட மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன.இந்த கடைக்காரர்களுக்கு 14 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் பின்னர் மீண்டும் இதே கடைகளில் நாங்கள் ஆய்வு செய்வோம். அப்போதும் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது.

    இந்த நிலையில் கோடை காலமும் தொடங்கியதால் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவின்போதும் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்காளர்கள் காலையிலேயே ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப் போட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரியின் மேற்கு மாவட்டத்தில் தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் பெய்ததால் பொதுமக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்தனர்.

    தற்போது கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத் தில் அதிக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட் களாக நீடிக்கும் இந்த மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நேற்று குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. தற்போது விடுமுறை காலம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் அங்கு சென்று நீராடி மகிழ்கிறார்கள்.

    அதே போல பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது. அதேசமயம் நாகர்கோவில் நகரில் மழை பெய்யவில்லை. வானில் கருமேகங்கள் திரண்டு இடி இடித்தது. ஆனால் குளிர்ந்த காற்று மட்டுமே வீசி சற்று ஆறுதல் அளித்தது.

    திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்தன. இந்த வாழைகளில் பெரும்பாலானவை குலை தள்ளிய நிலையில் இருந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-20, பெருஞ்சாணி-9.2, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-6, அடையா மடை-4, கோழிப் போர்விளை-10, புத்தன் அணை-10.4, திற்பரப்பு-10.8.

    மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 2.10 அடியாக இருந்தது. அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 62 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணையில் 20.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.




    ×