என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கதம்பம்
லிட்டர் எதனால் எடையானது?
- இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாமாயில் எதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியுமா?
- மெழுகுவர்திகள் செய்யவும் இயந்திரங்களுக்கு உயவு எண்ணெய் பயன்பாட்டுக்காகவுமே இந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது.
லிட்டர் கணக்கில் அளந்து கொடுக்கப்பட்ட எண்ணெய் கிலோ கணக்கில் எடையில் விற்கப்படுவது தற்செயலானது அல்ல.
சன் ஃப்ளவர் ஆயில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எல்லா எண்ணெய்களிலும், பாரஃபின் வேக்ஸ் என்னும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலிய துணைப் பொருள். குரூட் ஆயிலிலிருந்து பெட்ரோலைப் பிரித்து எடுக்கும்போது கிடைக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று.
இந்த பாரஃபின் வேக்சால் விளக்கு எரிக்க முடியும். அமெரிக்காவில், மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவது இல்லை. இந்த பாரஃபின் வேக்சே பயன்படுகிறது.
இந்த பாரஃபின் வேக்சின் அடர்த்தி எண் சாதாரண சமையல் எண்ணெயைவிட அதிகம். அதாவது எடை அதிகம். இது மணமற்றது. நிறமற்றது. இது போதாதா? உடனே இதனை நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சன் ஃப்ளவர் ஆயில் ஆகியவற்றில் கலக்க ஆரம்பித்துவிட்டார்கள். குறைந்த விலைப் பொருளைக் கலப்பதால் வரும் லாபம் ஒருபுறம் இருக்க, அந்த கலப்படப் பொருள் அதிக எடையோடு இருப்பதால் எண்ணெய்களை எடைக்கு விற்று அதிலும் லாபம் கண்டார்கள்.
ஆனால் மக்களாகிய நாம் அமெரிக்க மண்ணெண்ணையைத்தான் அன்றாடம் தின்றுகொண்டிருக்கிறோம்.
அடுத்தது பாமாயில்:- பாமாயில் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய். இது சமையல் எண்ணெய் என்பதற்கு உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள தகுதிகளில் எதனுடனும் பொருந்தாத ஒரு பொருள்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாமாயில் எதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியுமா? மெழுகுவர்திகள் செய்யவும் இயந்திரங்களுக்கு உயவு எண்ணெய் பயன்பாட்டுக்காகவுமே இந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னாளில், இதனை சுத்திகரிப்பு செய்து உணவுப் பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்பட்டது.
டீக்கடையில் விற்கப்படும் பஜ்ஜி, வடை , போண்டா...ஹோட்டலில் சாப்பிடும் அனைத்து உணவுகள், இனிப்பு கார வகைகள் என எல்லாமே பாமாயிலில் தயாரிக்கப்படுவதுதான்.
குறைந்த விலை என்பதால் எல்லோருமே பாமாயிலைப் பயன்படுத்துகிறார்கள். பாமாயிலால் ஏற்படும் பின் விளைவுகள் ஏராளம். அவை உடனே வெளியில் தெரிவதில்லை.
கொலஸ்ட்ரால், மலச்சிக்கல் உடம்பில் அரிப்பு, இதயக்கோளாறுகள், ரத்தக்குழாய் அடைப்பு ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாய் இருகின்றது .
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட எண்ணெய்தான் இந்த பாமாயில்.
-பி. சுந்தர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்