search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nutrition"

    • சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
    • முருங்கை கீரை சூப், வரகு அரிசி கொலுக்கட்டை, தினை அரிசி அப்பம், சாமை அரிசி லட்டு, அவித்த கொண்டைக்கடலை, முளைகட்டிய தானிய வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லட்சுமிராமன் செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாரம்பரிய உணவான கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, வரகு, தினை, தானிய வகைகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்பதால் கிடைக்கக்கூடிய பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். பாதுகாப்பு தரும் உணவு, சக்திதரும் உணவு, வளர்ச்சிதரும் உணவுகளான முருங்கை கீரை சூப், வரகு அரிசி கொலுக்கட்டை, தினை அரிசி அப்பம், சாமை அரிசி லட்டு, அவித்த கொண்டைக்கடலை, முளைகட்டிய தானிய வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், அலுவலர்கள், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அமுதா, அன்பரசி, குழந்தை திரேஸ், கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தை மைய பணியாளர்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • செங்கோட்டை வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத திருவிழா
    • பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பற்றியும், தன்சுத்தம் பற்றியும் விளக்கவுரையாற்றப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கோட்டை வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத திருவிழா கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளா் இளம் பெண்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் நடந்தது. குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளா்கள் சிவகாமி, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமைஆசிரியா் தமிழ்வாணி வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து ஊட்டச்சத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பற்றியும், தன்சுத்தம் பற்றியும் விளக்கவுரையாற்றப்பட்டது. பின்னா் சத்தான உணவுகளின் அவசியம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டாரத் திட்ட உதவி அலுவலா் சண்முகசுந்தரி மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் அங்கன்வாடி பணியாளா் லதாபேபி நன்றி கூறினார்.


    • அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
    • கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.

    வாழப்பாடி:

    பேளூர் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார ஊட்டச்சத்து திட்ட மேற்பாற்வையாளர்கள் பத்மாவதி, பத்மா, திட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி ஆகியோர், ஊட்டச்சத்து கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்து முன்னிலை வகித்தனர்.

    டாக்டர் கார்த்திகா, சமுதாய சுகாதார செவிலியர் ராணி, மணிமாலா ஆகியோர் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

    கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.

    அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து கண்காட்சி, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். முடிவில், வட்டார சுகாதார மேற்பாற்வையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    • ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடுவச்சேரி கிராமத்தில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் வீடு வீடாக சென்று இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    மாணவ செயலாளர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ், கோவிந்தராஜ், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நடனம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன், நவீன்பிரபு மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றுவருகிறது
    • கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

    புதுக்கோட்டை,:

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் 'ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் வாசிக்க அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.
    • ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லதா விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் அஜய்ராஜ் சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்பாலின் மகத்துவத்தையும், அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை லயன் சங்கம், தஞ்சை டெம்பிள்சிட்டி லயன் சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து உலக தாய்பால் வாரவிழா நிகழ்ச்சியை அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தியது .

    அம்மாபேட்டை லயன்ஸ் சங்க தலைவர் முரளி, தஞ்சை டெம்பிள்சிட்டி லயன்சங்க தலைவர் சிவா, மாவட்ட தலைவர்கள் சுப்ரமணியன், நைனா குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்பாலின் மகத்து வத்தையும், அவசியத்தையும், விரிவாக எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் லயன்சங்க நிர்வாகிகள்பொன்மணி, மோகன்ராம், செயலாளர் வேல்மணி,பொருளாளர் ஜனார்த்தனன், சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன், செவிலியர் சித்ரா மற்றும் ஏராளமான தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநெறி மன்ற நிர்வாகி ராமநாதன் மற்றும் லயன் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கடலூர் மாநகராட்சி பள்ளியில் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பள்ளிகளை தூய்மையாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

     கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? அரசு சார்பில் வழங்கப்படும் சத்துணவு சரியான முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதா? மேலும் தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? சத்துணவுக்காக வழங்கப்பட்டுள்ள பொருட்கள் உள்ளதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

    பின்னர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு தரமாக வழங்குவதோடு சரியான முறையில் வழங்க வேண்டும் மேலும் பள்ளிகளை தூய்மையாக பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் என் குப்பை என் உரிமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. அப்போது உதவி செயற்பொறியாளர் மகாதேவன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷிணி ராஜா, பாலசுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரத்தில் 15 காசநோயாளிகளை தத்து எடுத்து ஊட்டச்சத்துகள் கலெக்டர் வழங்கினார்.
    • நோய் தொற்றிலிருந்து விடுபடும் வரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட காசநோய் ஒழிப்பு மன்றக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், காசநோயாளிகளை தத்தெடுத்து, அவர்களுக்கு சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து வழங்குதல், காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காசநோய் பற்றிய தகவல்களையும், காசநோய் கண்டறியவும் அரசோடு சேர்ந்து அனைவரும் பங்குகொண்டால் மட்டுமே 2025-க்குள் காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும்.

    மேலும் காசநோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரை களை வழங்கி கண்காணித்து நோய் தொற்றிலிருந்து விடுபடும் வரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை வழங்கிட வேண்டும். காசநோய் தொடர்பான விழிப்பு ணர்வை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டினை காட்டிலும் 2022-ஆம் ஆண்டு காசநோய் 20 சதவீதம் குறைந்துள்ளதாக கள ஆய்வில் கண்டறியப்பட்டு காசநோய் விகிதத்தை குறைத்ததற்காக தமிழக முதல்-அமைச்சர் அவர்களால் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்ப ட்டுள்ளதுநமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

    மேலும் இதுபோன்ற தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் காசநோய் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மேலும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் காசநோயாளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்துக முதல்-அமைச்சரால் தலைமைச் செயலகத்தில் காசநோய் விகித்ததை குறைத்ததற்காகவும், காசநோய் குழு சிறப்பாக செயல்பட்டதற்காகவும் துணை இயக்குநனருக்கு (காசநோய்) பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தை (வெண்கலம்) வழங்கியதையொட்டி அதனை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும் காசநோயாளிகளை தத்தெடுத்து ஊட்டச்சத்து வழங்கிய விழுப்புரம் கிரீன்ஸ்ரூபவ் விழுப்புரம் ரோட்டரி கிளப் (சென்ட்ரல்), விழுப்புரம் மகாவீர் சூப்பர் மார்க்கெட் ஆகியோரும் சென்னையில் தாங்கள் பெற்ற சான்றிதழினை காட்டி மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து 5 காசநோயாளிகளை ரோட்டரி கிளப் (சென்ட்ரல்) தத்தெடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்கினார்கள். 15 காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) சண்முகக்கனி, துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி, காசநோய் தடுப்புதிட்ட ஒருங்கிணைப்பாளர்கள். ரோட்டரி கிளப் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள மகளிர் குழு பிரதிநிதி களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வனம் தன்னா ர்வ அமைப்பின் நிறுவனர் கலைமணி முன்னிலை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பேசினார். இதில் தொடர்ச்சியாகசெய ல்படாத மகளிர் குழுக்களை செயல்பட வைத்தல், ஒவ்வொரு வீட்டிலும் ஊட்ட ச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைத்தல், தனித்தொழில் செய்ய ஆர்வமுள்ள மகளிர் சுயஉதவிக் குழுவி னரை அடையாளம் காணுதல் ஆகியன பற்றி பயிற்சி நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், பணித்தள பொறுப்பாளர் ஐயப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சத்துணவு - அங்கன்வாடி உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் மாநாடு நடந்தது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4-ஆம் வட்ட கிளை மாநாடு உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.

    வட்ட கிளை தலைவர் ஆடிட்டர் பாண்டி தலைமை தாங்கினார். பழனி, அக்கினிபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை துணைத் தலைவர் அமிர்தம் வரவேற்றார்.

    மாவட்ட பொருளாளர் ஜெயராமன், வட்ட கிளை செயலாளர் மகேஸ்வரன், வட்ட கிளை பொருளாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் பாலமுருகன், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்தரம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் முத்துராணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அய்யங்காளை பெரியகருப்பன், ராசையா, ரங்கமலை மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சத்துணவு - அங்கன்வாடி வருவாய்க் கிராம உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.7,850 வழங்கவும், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும், தமிழக அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றினர்.

    முடிவில் மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

    60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தினசரி நம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
    நம் நாட்டில் 60 வயதைக் கடந்து விட்டால் ‘முதியோர்’ என்கிறார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவீடன், டென்மார்க் போன்ற பல நாடுகளில் 60 வயதையெல்லாம் ஒரு வயதாகவே கருதுவது இல்லை. இந்த வயதில் உள்ளவர்களை அங்கெல்லாம் நடுத்தர வயதுக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள்.

    நமக்கெல்லாம் 60 வயதிலேயே உடல் ஆட்டம் கண்டுவிடுகிறது. இதற்கு ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும், மினரல்களும் கிடைக்காதது தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக 60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தினசரி நம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

    முதுமைக்குத் தேவையான சத்துக்களுள் பீட்டாகரோட்டின் என்பதும் ஒன்று. இது பச்சை நிறம் கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள், கேரட், பீட்ரூட், தக்காளி, பப்பாளிப்பழம், மாம்பழம், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் கிடைக்கிறது.அடுத்து வைட்டமின் சி என்பதும் முக்கியமானது. இது முளைகட்டிய தானியங்கள், கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு மற்றும் புளிப்புத்தன்மை கொண்ட பழங்களிலும் கிடைக்கிறது.



    அடுத்து வைட்டமின் ஈ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. இது பாதாம் பருப்பு, பசலைக்கீரை, சூரியகாந்தி விதை, வேர்க்கடலை போன்றவற்றில் அதிகமாக இருக்கிறது. செலீனியம் என்ற மினரல் முதுமையில் இருப்பவர்களுக்கு அவசியமான தாகும். இது முட்டை, கோழி, மீன், காளான், சிவப்பு அரிசி, வெண்ணெய், சோயாபீன்ஸ், எள் போன்ற உணவுகளில் கிடைக்கிறது.முதுமையில் துத்தநாக குறைபாடு ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. இது பூசணி விதை, வெள்ளரி விதை, வறுத்த வேர்க்கடலை, காராமணி, ஆட்டு ஈரல் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

    முதுமையில் இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இரும்புச்சத்து ஆட்டுக்கல்லீரல், இறால் மீன், பசலைக்கீரை, பீட்ரூட், மாதுளை, ஆப்பிள், தர்ப்பூசணி, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் கிடைக்கிறது. இவைகளை நாம் முடிந்த வரையில் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் முதுமையையும், முதுமைக்கால நோய்களையும் தடுக்கலாம்.இவற்றுடன் தினமும் காலையிலோ, மாலையிலோ முக்கால் மணி நேரத்திற்குக் குறையாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். .இவைகளைக் கடைப்பிடித்து வந்தால், முதுமையை வெல்லலாம். 80-90 வயதுகளிலும் ஆரோக்கியமாக வாழலாம்.

    மு.பெரியசாமி, திருத்துறைப்பூண்டி
    ×