search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அரசு பள்ளியில் ஊட்டச்சத்து மாததிருவிழா
    X

    செங்கோட்டை அரசு பள்ளியில் ஊட்டச்சத்து மாததிருவிழா

    • செங்கோட்டை வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத திருவிழா
    • பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பற்றியும், தன்சுத்தம் பற்றியும் விளக்கவுரையாற்றப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கோட்டை வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத திருவிழா கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளா் இளம் பெண்களுக்கான விழிப்புணா்வு கூட்டம் நடந்தது. குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் கலைவாணி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளா்கள் சிவகாமி, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமைஆசிரியா் தமிழ்வாணி வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து ஊட்டச்சத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பற்றியும், தன்சுத்தம் பற்றியும் விளக்கவுரையாற்றப்பட்டது. பின்னா் சத்தான உணவுகளின் அவசியம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டாரத் திட்ட உதவி அலுவலா் சண்முகசுந்தரி மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் அங்கன்வாடி பணியாளா் லதாபேபி நன்றி கூறினார்.


    Next Story
    ×