search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி தோட்டங்கள்"

    • ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள மகளிர் குழு பிரதிநிதி களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வனம் தன்னா ர்வ அமைப்பின் நிறுவனர் கலைமணி முன்னிலை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்தும், எதிர்காலத் திட்டம் குறித்தும் பேசினார். இதில் தொடர்ச்சியாகசெய ல்படாத மகளிர் குழுக்களை செயல்பட வைத்தல், ஒவ்வொரு வீட்டிலும் ஊட்ட ச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைத்தல், தனித்தொழில் செய்ய ஆர்வமுள்ள மகளிர் சுயஉதவிக் குழுவி னரை அடையாளம் காணுதல் ஆகியன பற்றி பயிற்சி நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், பங்கேற்றவர்களுக்கு காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், பணித்தள பொறுப்பாளர் ஐயப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×