search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai District"

    • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் எழுதி இருந்தனர்.
    • நெல்லையில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ைவ 43 அரசு பள்ளிகளில் இருந்து 2,157 மாணவர்கள், 3,205 மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 1,865 மாணவர்கள், 3,092 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.45 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 53 பள்ளிகளில் இருந்து 3,363 மாணவர்கள், 4,063 மாணவிகள் என ெமாத்தம் 7,426 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

    இதில் 2,912 மாணவர்கள், 3,909 மாணவிகள் என 6,821 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.85 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை 56 அரசு பள்ளிகளில் இருந்து 1,848 மாணவர்கள், 2,735 மாணவிகள் என மொத்தம் 4,583 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 1,650 மாணவர்கள், 2,637 மாணவிகள் என மொத்தம் 4,287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.54 சதவீத தேர்ச்சி ஆகும்.

    10-ம் வகுப்பு தேர்வை பொறுத்த வரை நெல்லை மாவட்டத்தில் 84 அரசு பள்ளிகளில் இருந்து 6,152 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5,211 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.70 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தென்காசி மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில் இருந்து 7,177 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6,059 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.42 சதவீத தேர்ச்சி ஆகும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 86 அரசு பள்ளிகளில் இருந்து 5,103 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.71 சதவீத தேர்ச்சி ஆகும்.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டன. கடனாநதி, ராமநதி பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் 11 அணைகள் உள்ளன. இதில் அதிக கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய அணையாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 118 அடி, மொத்த கொள்ளளவு 5511 மில்லியன் கன அடி ஆகும்.



    அதற்கு அடுத்ததாக பாபநாசம் அணை மிகப் பெரிய அணையாக உள்ளது. இதன் மொத்த அடி 143, கொள்ளளவு 5500 மில்லியன் கன அடி ஆகும். இது போக சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன.

    இந்த 11 அணைகளில் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய 3 அணைகளில் எப்போதும் தண்ணீர் இருப்பு இருக்கும். இந்த அணைகளில் தண்ணீர் இல்லாவிடில், குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விடும். தற்போது பாபநாசம் அணையில் சகதியும், தண்ணீரும் சேர்ந்து நீர்மட்டம் 9 அடி மட்டுமே உள்ளது.

    குடிநீருக்காக குறைந்தது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியே செல்கிறது.

    இதனால் குடிநீருக்காக மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது. மணி முத்தாறு அணையில் தற்போது 64.31 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த தண்ணீர் பச்சையாறு வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் இப்போது பச்சையாறு பகுதியில் உள்ள ஆகாய தாமரைகள் தாமிரபரணி ஆறு வரை பரவி உள்ளது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையிலும் தற்போது 47.41 அடியாக நீர்மட்டம் உள்ளது.

    பாபநாசம் அணையும் சகதி தண்ணீர் மட்டும் உள்ளதால் அந்த அணையில் மற்ற பகுதிகள் வறண்டு விட்டது. அணையின் அடிப்பகுதியில் உள்ள மரங்களின் வேர் பகுதி மட்டும் காய்ந்து வெளியே தெரிகிறது.

    இதுபோல கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. இங்கு பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் மணல் நிரம்பி சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது. இந்த அணைகளின் ஒரு ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் போல் லேசாக தண்ணீர் கசிந்து செல்கிறது.

    இதனால் இந்த அணைகளில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பா நதியிலும் பல ஆண்டுகளாக தூர்வாராமல் 23 அடி வரை மணல் நிரம்பி உள்ளது. அதன் மேல் 1½ அடி உயரத்துக்கு சிறிதளவு தண்ணீர் உள்ளது. மற்றபடி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

    இதுபோல குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளிலும் சிறி தளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நீரோட்டம் இல்லாததால் இந்த அணைகளும் வறண்டு விட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 அணைகளும் வறண்டு மழைக்காக காத்திருக்கிறது.

    எப்போதும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழும் அகத்தியர் அருவியில் தற்போது மிக குறைவாகவே தண்ணீர் விழுகிறது. குற்றால அருவிகளில் எந்த அருவியிலும் தண்ணீர் விழவில்லை. குற்றாலம் மெயினருவி முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது மணிமுத்தாறு அணை நீர்மட்டத்தை வைத்து குடிநீர் தேவை மட்டும் சமாளிக்கப்படுகிறது.

    வழக்கமாக ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வேண்டும். சில ஆண்டுகளில் முன்னதாக மே கடைசி வாரமே தென்மேற்கு பருவ மழை பெய்து விடும். எனவே தென் மாவட்ட மக்கள் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். தென்மேற்கு பருவ மழை பெய்தால் தான் வறண்டு உள்ள 9 ஆணைகளுக்கும் தண்ணீர் வரும். இல்லாவிடில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
    தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு கூடுதல் நீர் வந்தது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி 104 அடியானது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லை. இதன் காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவு நீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 827 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 134.74 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது.

    கடனாநதி-78.80, ராமநதி- 69.25, கருப்பாநதி-67.03, குண்டாறு-35.87, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு-18.66, கொடுமுடியாறு-35, அடவிநயினார்-93.25 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளதால் 5-ந்தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. #Rain #Dams
    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலையில் மழையுமாக காலநிலை மாறி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. மதியம் கருமேகங்கள் சூழ்ந்து மாலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக அம்பை, பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை பகுதியில் 37.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய மழை காரணமாகவும் கூடுதல் தண்ணீர் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 121.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,835 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.18 அடியாக இருந்தது.

    இங்கு பெய்த மழையினால் இந்த அணை மேலும் 3 அடி உயர்ந்து 133.27 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 100 அடியை தாண்டிய மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 101.05 அடியாக உள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் அணைகள் நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளான கடனா, ராமநதி, கருப்பாநதி, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் 76.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 69.25 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 63.23 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 31.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 42 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 98.50 அடியாகவும் உள்ளன.

    நம்பியாறு, குண்டாறு அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. எனினும் சீசன் முடிந்து விட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

    ஐயப்ப பக்தர்கள், குறைவான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். தொடர் மழையினால் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 500 குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதில் பல குளங்கள் நிரம்பியுள்ளன.

    அணை பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பை-37.60, பாபநாசம் -24, ராமநதி-20, மணிமுத்தாறு-19.20, சேர்வலாறு-15, கொடுமுடியாறு-15, அடவிநயினார் அணை-11, குண்டாறு-9, சேரன்மகாதேவி-8, செங்கோட்டை-7, நெல்லை-5, கருப்பாநதி-4, ஆய்க்குடி-2.60, நாங்குநேரி-2. #Rain #Dams

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை வரை 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 47 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நகர்ப்புறங்களில் சற்று குறைவான மழையே பெய்துள்ளது. ராதாபுரத்தில் 14 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,511 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 121.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 318 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழையின் போது மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து 80 அடியாக இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை மீண்டும் 100 அடியை தாண்டியுள்ளது.

    இதுபோல கடனாநதி- 75.80, ராமநதி- 69, கருப்பாநதி- 69.23, குண்டாறு- 36.10, வடக்கு பச்சையாறு- 31, நம்பியாறு- 21.62, கொடுமுடியாறு- 42, அடவிநயினார்- 98.50 அடிகளாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    குற்றாலத்தில் நேற்று காலை அதிகளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று பிற்பகல் தண்ணீர் குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலை குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்தது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையில் தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-61
    சேர்வலாறு-47
    ராமநதி-15
    ராதாபுரம்-14
    கடனாநதி-10
    சேரன்மகாதேவி-9
    ஆய்க்குடி-4
    அம்பை-2
    சங்கரன்கோவில்-2
    நெல்லை- 1.2
    மணிமுத்தாறு- 1.2
    செங்கோட்டை- 1 #ManimutharDam
    நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #DenguFever #SwineFlu
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    இதில் ஒரு சிலருக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் காணப்படுகிறது. அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 22 பேர் டெங்கு, பன்றிகாய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள முன்னீர் பள்ளம் பகுதியை சேர்ந்த தொழிலாளி முத்து கிருஷ்ணன் (வயது 55), பாளை சமாதானபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி செல்வம் (வயது 30) ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த‌னர்.

    இருவரும் நேற்று பரிதாபமாக இறந்தனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மாநகராட்சி பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டும் நகராட்சி, பேரூராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலமும் கிராம பகுதிகளிலும் ஒரு யூனியனுக்கு 3 நடமாடும் வாகனம் மூலம் சிறப்பு சுகாதார குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். #DenguFever #SwineFlu
    நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று செங்கோட்டை பகுதியிலும் கனமழை கொட்டியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று செங்கோட்டை பகுதியில் கனமழை கொட்டியது. குண்டாறு, அடவி நயினார் அணை பகுதிகளிலும் நன்றாக மழை பெய்தது. கடனாநதி அணை பகுதியிலும் நேற்று கனமழை கொட்டியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக செங்கோட்டையில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த படியாக கடனாநதி அணை பகுதியில் 21 மில்லி மீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 17 மில்லி மீட்டரும், தென்காசியில் 13 மில்லி மீட்டரும், மழை பெய்துள்ளது. மாநகர பகுதியான நெல்லையில் 2 மில்லி மீட்டரும், பாளையில் 3.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணை பகுதியில் குறைந்த அளவாக 1 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றை விட சற்று குறைந்து 104.15 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையில் தண்ணீர் எதுவும் இல்லை. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 11 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று 84.40 அடியாக உள்ளது.

    கடனாநதி-63, ராமநதி -47.25, கருப்பாநதி-58.07, குண்டாறு-32.38, வடக்கு பச்சையாறு-20, நம்பியாறு -19.94, கொடுமுடியாறு-31.75, அடவிநயினார்-85 அடிகளாக நீர்மட்டம் இன்று உள்ளது.

    களக்காட்டில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் கொளுத்துவதும், மதியத்திற்கு பின் வானம் மேகக்கூட்டங்களுடன் காணப்படுவதுமாக இருந்து வந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. சுற்றுவட்டாரத்தில் பெய்த போதும் களக்காட்டில் மழை பெய்யாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று களக்காட்டில் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மதியத்திற்கு பின்னர் வானில் மேகக் கூட்டங்கள் திரண்டன. அதன் பின் மாலை 4 மணியளவில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக மழை நீடித்தது.

    இந்த மழையினால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தெருக்களில் ஆறு போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தெருக்கள் வெள்ளக்காடானது. திருக்கல்யாணத்தெரு கருத்த விநாயகர் கோவில் முன் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    செங்கோட்டை-23, கடனாநதி-21, குண்டாறு-17, கருப்பாநதி-14, தென்காசி-13, ராமநதி-12, அடவிநயினார்-7, சங்கரன் கோவில்-6, சேர்வலாறு-6, அம்பை-5.2, பாளை-3.6, சிவகிரி-3, ராதாபுரம்-3, நெல்லை-2, ஆய்க்குடி-1.8, பாபநாசம்-1. #tamilnews
    தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.
    நெல்லை:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக பாய்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டை மலைப்பகுதியில் உள்ள குண்டாறு அணையில் 57 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. செங் கோட்டை நகர பகுதியில் 33 மில்லி மீட்டர் மழையும், தென்காசியில் 28 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    பாபநாசம், கொடுமுடியாறு அணை பகுதியிலும் அதிக மழை பெய்து வருகிறது. பாபநாசத்தில் 27 மில்லி மீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 39.40 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 42 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதனால் அணைக்கு வினாடிக்கு 272 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இன்றைய நீர்மட்டம் 72.80 அடியாக உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் நேற்று 48.60 அடியாக இருந்தது. இன்று 1 அடி உயர்ந்து 49.50 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 57.50 அடியாக உள்ளது.

    குண்டாறு அணை நீர்மட்டம் நேற்று 17.88 அடியாக இருந்தது. ஒரே நாளில் இங்கு 5 அடி உயர்ந்து இன்று 22.38 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 12 அடியாக உள்ளது. இது போல அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 70 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையில் கடந்த மார்ச் மாதம் முதல் பழுது பார்க்கும் பணிகள் நடந்து வருவதால் அணையில் உள்ள அனைத்து தண்ணீரும் வெளியேற்றப்பட்டு விட்டது. தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே பழுது பார்க்கும் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 522.43 கன அடி தண்ணீர் செல்கிறது.

    ஆனால் அதிகாரிகள் அந்த தண்ணீர் முழுவதையும் ஆற்றில் திறந்து விட்டு விடுகிறார்கள். இதனால் அணையில் தண்ணீர் இல்லாமல் சகதி தண்ணீர் மட்டும் 19.68 அடிக்கு உள்ளது. உடனடியாக சேர்வலாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவை நிறுத்தி அணையில் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    நெல்லை, பாளை உள்பட மாவட்டத்தில் பரவலாக இன்று காலையும் சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டாறு    - 57
    செங்கோட்டை - 33
    கொடுமுடியாறு - 30
    தென்காசி    - 28
    பாபநாசம்     - 27
    அடவிநயினார் - 20
    சேர்வலாறு - 19
    கடனா அணை - 15
    ராமநதி - 15
    கருப்பாநதி - 12
    ராதாபுரம்    - 11
    மணிமுத்தாறு - 9.2
    ஆய்க்குடி - 7.2
    அம்பை - 4.2
    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டர் மழையும், செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    ராமநதி அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 1 மில்லி மீட்டர், அம்பையில் 2.2. மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவியில் இன்று சற்று கூடுதலாக தண்ணீர் விழுகிறது. இது போல அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 655 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணையில் இருந்து அனைத்து தண்ணீரும் பாபநாசம் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 205 கனஅடி தண்ணீர் வினாடிக்கு வெளியேற்றப்படுகிறது.

    பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை 36.86 அடியாக உள்ளது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 34.50 அடியாக இருந்தது. ஒரே நாளில் அங்கு 2 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையில் குறைந்தபட்ச அளவான 19.68 அடியில் சகதி மட்டும் உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை சற்று உயர்ந்து 72.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீருக்காக 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது போல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது.


    நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ரே‌ஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் குருமூர்த்தி உத்தரவின் பேரில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ரே‌ஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் குருமூர்த்தி உத்தரவின் பேரில், துணை பதிவாளர் ரியாஜ் அகமது தலைமையில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் 24 கிலோ அரிசி, 55 கிலோ சீனி, 17 லிட்டர் மண்எண்ணெய், 9 கிலோ கோதுமை, 25 கிலோ துவரம் பருப்பு, 4 லிட்டர் பாமாயில், 344 பாக்கெட் தேயிலை, 271 பாக்கெட் உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவு ஏற்படுத்தியதும், போலி பதிவு மூலம் விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. சில கடைகளில் கூடுதல் இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டின் மதிப்பு ரூ.15 ஆயிரத்து 366 ஆகும். தவறு செய்த பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் பாயிண்ட் விற்பனை எந்திரங்கள் மூலம் விற்பனை பட்டியல் போடப்படுவதால், போலி விற்பனை பதிவு செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.#tamilnews
    ×