என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதுவரை 12 பேர் பலி- நெல்லையில் டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 22 பேர் அனுமதி
Byமாலை மலர்3 Nov 2018 11:13 AM GMT (Updated: 3 Nov 2018 11:13 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு 12 பேர் பலியாகியுள்ள நிலையில் மேலும் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். #DenguFever #SwineFlu
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
இதில் ஒரு சிலருக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் காணப்படுகிறது. அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 22 பேர் டெங்கு, பன்றிகாய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள முன்னீர் பள்ளம் பகுதியை சேர்ந்த தொழிலாளி முத்து கிருஷ்ணன் (வயது 55), பாளை சமாதானபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி செல்வம் (வயது 30) ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இருவரும் நேற்று பரிதாபமாக இறந்தனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டும் நகராட்சி, பேரூராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலமும் கிராம பகுதிகளிலும் ஒரு யூனியனுக்கு 3 நடமாடும் வாகனம் மூலம் சிறப்பு சுகாதார குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். #DenguFever #SwineFlu
நெல்லை மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
இதில் ஒரு சிலருக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் காணப்படுகிறது. அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 22 பேர் டெங்கு, பன்றிகாய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள முன்னீர் பள்ளம் பகுதியை சேர்ந்த தொழிலாளி முத்து கிருஷ்ணன் (வயது 55), பாளை சமாதானபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி செல்வம் (வயது 30) ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இருவரும் நேற்று பரிதாபமாக இறந்தனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் உள்ள 55 வார்டுகளிலும் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டும் நகராட்சி, பேரூராட்சி பகுதியில் நடமாடும் வாகனம் மூலமும் கிராம பகுதிகளிலும் ஒரு யூனியனுக்கு 3 நடமாடும் வாகனம் மூலம் சிறப்பு சுகாதார குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். #DenguFever #SwineFlu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X