search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level increased"

    • மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் முல்லைபெரியாறு, வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 128.25 அடியாக உள்ளது. வரத்து 1526 கனஅடி, நீர்திறப்பு 1633 கனஅடி, இருப்பு 4320 மி.கனஅடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.66 அடி, வரத்து 1600 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 2664 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.23 அடி

    பெரியாறு 12, தேக்கடி 7.2, கூடலூர் 3.7, உத்தமபாளையம் 1, வீரபாண்டி 12, சோத்துப்பாறை 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை வரை 61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 47 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நகர்ப்புறங்களில் சற்று குறைவான மழையே பெய்துள்ளது. ராதாபுரத்தில் 14 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,511 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,005 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 121.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 130.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 318 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 100.15 அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழையின் போது மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து 80 அடியாக இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை மீண்டும் 100 அடியை தாண்டியுள்ளது.

    இதுபோல கடனாநதி- 75.80, ராமநதி- 69, கருப்பாநதி- 69.23, குண்டாறு- 36.10, வடக்கு பச்சையாறு- 31, நம்பியாறு- 21.62, கொடுமுடியாறு- 42, அடவிநயினார்- 98.50 அடிகளாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    குற்றாலத்தில் நேற்று காலை அதிகளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று பிற்பகல் தண்ணீர் குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று காலை குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்தது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையில் தண்ணீர் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-61
    சேர்வலாறு-47
    ராமநதி-15
    ராதாபுரம்-14
    கடனாநதி-10
    சேரன்மகாதேவி-9
    ஆய்க்குடி-4
    அம்பை-2
    சங்கரன்கோவில்-2
    நெல்லை- 1.2
    மணிமுத்தாறு- 1.2
    செங்கோட்டை- 1 #ManimutharDam
    நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தொடர்ந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134 அடியை எட்டி உள்ளது.
    கூடலூர்:

    கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2629 கன அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 134 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து 1977 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 193 கன அடியாக உயர்ந்துள்ளது. 57 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 53.75 அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு 168 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 20.4, தேக்கடி 24.6, கூடலூர் 13.4, சண்முகாநதி அணை 21, உத்தமபாளையம் 17.4, வீரபாண்டி 50, மஞ்சளாறு 105, சோத்துப்பாறை 14, கொடைக்கானல் 20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. மதியம் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் பல பகுதிகளில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 70 மில்லிமீட்டர் மழை பதிவானது. சிவகிரியில் 37 மில்லிமீட்டர் மழையும், சங்கரன்கோவிலில் 25 மில்லிமீட்டர் மழையும், ஆய்க்குடி மற்றும் கருப்பாநதியில் தலா 24 மில்லிமீட்டர் மழையும் பெய்தது.

    பாளையில் 18.20 மில்லிமீட்டர் மழை, சேர்வலாறில் 18 மில்லி மீட்டர் மழை, நெல்லையில் 14 மில்லிமீட்டர் மழை, ராதாபுரத்தில் 6 மில்லிமீட்டர் மழை, செங்கோட்டையில் 2 மில்லிமீட்டர் மழை பதிவானது. மலைப்பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 100.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 85.89 அடியாக இருந்தது. இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.60 அடியாக உள்ளது.

    சங்கரன்கோவில் தொடர் மழையினால் சங்கரன்கோவில் இருமன்குளத்தை சேர்ந்த வேல்சாமி, தங்கப்பாண்டி ஆகியோரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இன்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு பெய்த மழையினால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து இன்று காலை 74.31 அடியாக உயர்ந்துள்ளது. #ServalarDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக ஆய்க்குடி, தென்காசி, சேர்வலாறு, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசியை அடுத்த ஆய்க்குடி பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மழைக்காக அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒதுங்கி நின்ற ஆனந்த் என்பவர் மின்னல் தாக்கி காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதே பகுதியில் மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலியாயின.

    தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த கால நிலை நிலவியது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளன. ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால் தற்போது இந்த அணைகளில் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு கூடுதலாக தண்ணீர் வருகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 104.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை பராமரிப்பு பணிக்காக நீர்மட்டம் வேகமாக குறைக்கப்பட்டது. தற்போது அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 51.34 அடியாக இருந்தது.

    இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து இன்று காலை 74.31 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.80 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 66 அடியாகவும், ராமநதி அணை 59.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.53 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 86.75 அடியாகவும் உள்ளன. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பிய நிலையில் உள்ளது.

    குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று கன மழை பெய்த‌து. இதனால் நேற்று மாலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்னீர் அதிகளவு விழுந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலை மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்தது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே புஷ்கர விழாவுக்காக நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ள வெளி மாநில பக்தர்கள் குற்றாலத்திலும் குளிக்க குவிந்துள்ளனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் நேற்று பெய்த கன மழையினால் அங்குள்ள தனியார் பள்ளியில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மழைநீர் வடிந்ததையடுத்து வகுப்புகள் நடந்தன.



    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் நேற்று மதியம் கன மழை பெய்தது. கயத்தாறில் பெய்த கன மழையினால் அங்குள்ள உப்பாற்று ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஆய்க்குடி-37.2, கயத்தாறு-35, சேர்வலாறு-28, தென்காசி 25.8, பாபநாசம்-22, சங்கரன்கோவில்-21, கோவில்பட்டி-11, மணிமுத்தாறு-8.8, கடனா அணை 8.2, சிவகிரி-7, அம்பை-6.6, கருப்பாநதி-6, செங்கோட்டை-5, ராமநதி அணை-4, குண்டாறு-3, அடவிநயினார் அணை-2, பாளை-2. #ServalarDam
    மழை நீடித்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 133.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,746 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,907 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5,422 மில்லியன் கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையாலும் வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது. 71 அடி உயரமுள்ள அணையில் தற்போது 66.34 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,461 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 1,560 கன அடி நீர் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4,935 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 68 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தற்போது அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 51.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 87 கன அடி தண்ணீர் வருகிறது. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.34 அடி. வரத்து 42 கன அடி. திறப்பு 30 கன அடி.

    பெரியாறு 2.8, தேக்கடி 3, கூடலூர் 15.3, வைகை அணை 1.4, சண்முகா நதி அணை 13, உத்தமபாளையம் 13.4, மஞ்சளாறு 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134 அடியை எட்டி உள்ளது.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

    மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த மாதம் 127 அடியாக இருந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 134 அடியை எட்டி உள்ளது.

    மீண்டும் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இதன்மூலம் இருபோக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

    அணைக்கு 2495 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1946 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடமலைக்குண்டு, வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மூல வைகயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 3723 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 63.42 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது. 123 கன அடி நீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 141 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 18.8, தேக்கடி 29.2, வைகை அணை 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இன்று காலை வினாடிக்கு 620 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக இருந்தது. வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தண்ணீர் இருந்தது.

    தற்போது கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து உள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 19.98 அடியாக பதிவாகியது. 249 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது

    கிருஷ்ணா நதி நீர் வரத்து தற்போது வருவது போல் தொடர்ந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது. #PeriyarDam
    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 5535 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 1½ அடி உயர்ந்து 129.10 அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர்திறப்பு 1700 கனஅடியாக உள்ளது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்துசேருகிறது.

    மூலவைகையாற்று பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கும் நீர்வரத்து 2415 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.87 அடியாக உள்ளது. அணையிலிருந்து 1390 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. கொடைக்கானலில் பெய்துவரும் கனமழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 73 கனஅடி, திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.41 அடி. 39 கனஅடிநீர் வரும் நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேனி மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. பெரியாறு 32, தேக்கடி 31, கூடலூர் 13, சண்முகாநதிஅணை 9, உத்தமபாளையம் 6.6, வீரபாண்டி 15, வைகை அணை 3, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 17, கொடைக்கானல் 3.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. #PeriyarDam

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலை 124 அடியாக உள்ளது. #Papanasamdam
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்து வருகிறது. குண்டாறு, அடவிநயினார் அணை பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தினசரி மழை பெய்து வருகிறது.

    பாபநாசம் மலைப் பகுதியில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று காலை வரை பெய்த மழை அளவு 86 மில்லி மீட்டர் ஆகும். அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 805 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    தண்ணீர் அதிகளவில் வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 119 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று காலை 124 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை பகுதியில் இன்று காலை வரை 59 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.38 அடியாக இருந்தது. இன்று அது மேலும் 2 அடி உயர்ந்து 140.88 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் லேசான மழையே பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 926 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 55 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 71.75 அடியாக உள்ளது.

    இதேபோல் கடனாநதி அணை 82.50 அடியாகவும், ராமநதி அணை 80 அடியாகவும், குண்டாறு அணை 36.10 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் 4 அடி அதிகரித்து 132.22 அடியாக உயர்ந்து நிரம்பி வழிகிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 70.21 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. தற்போது விவசாயத்திற்காக 9 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்- 86, சேர்வலாறு-59, கொடு முடியாறு-55, கருப்பாநதி-43, அடவிநயினார்-35, கடனாநதி-33, குண்டாறு-20, தென்காசி-17, ராதாபுரம்-15, ஆய்க்குடி-10, செங்கோட்டை -9, ராமநதி-5, மணிமுத்தாறு-1.4 #Papanasamdam

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று இரவும் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையினால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 53.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, இரணியல், முள்ளங்கினாவிளை, மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு, விட்டு பெய்து வரும் சாரல் மழையினால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 12.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.20 அடியாக உள்ளது. அணைக்கு 1685 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 675 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பி வருவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 14.14 அடியாக உள்ளது. பொய்கை அணை 15.60 அடியை எட்டியது. மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு வாரமாக முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    அணையின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மலையோர பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நிரம்பி வருவதால் அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படும். சிற்றாறு அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-37.4, பெருஞ்சாணி-23.2, சிற்றாறு 1 - 36.2, சிற்றாறு 2 - 31, மாம்பழத்துறையாறு-20, கொட்டாரம்-3.4, மயிலாடி-7.2, பாலமோர் -53.4, ஆரல்வாய்மொழி-5.2, கன்னிமார்-24.6, சுருளோடு-15.2, நாகர்கோவில்-16.8, பூதப்பாண்டி-10.4, ஆனைக்கிடங்கு-20, அடையாமடை-28, முள்ளங்கினாவிளை-32, புத்தன்அணை-24.6


    நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடித்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam
    கூடலூர்:

    கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழக கரையோர மாவட்டங்களிலும் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 5653 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1800 கன அடி திறக்கப்படுகிறது.

    இதில் 1400 கன அடி மின்சார உற்பத்திக்கும், 400 கன அடி தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.



    வைகை அணையின் நீர்மட்டம் 48.33 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 1169 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கன அடியும் என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 1782 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 கன அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 129.68 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 84, தேக்கடி 65, கூடலூர் 10.2, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 6, வீரபாண்டி 2.5, மஞ்சளாறு 5, வைகை அணை 7.4, சோத்துப்பாறை 3, மருதாநதி 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam

    ×