பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்வு

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் முல்லைபெரியாறு, வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
முல்லைபெரியாறு அணை
முல்லைபெரியாறு அணை
Published on

கூடலூர்:

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 128.25 அடியாக உள்ளது. வரத்து 1526 கனஅடி, நீர்திறப்பு 1633 கனஅடி, இருப்பு 4320 மி.கனஅடி.

வைகை அணையின் நீர்மட்டம் 54.66 அடி, வரத்து 1600 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 2664 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.23 அடி

பெரியாறு 12, தேக்கடி 7.2, கூடலூர் 3.7, உத்தமபாளையம் 1, வீரபாண்டி 12, சோத்துப்பாறை 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com