என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்வு
Byமாலை மலர்4 Oct 2018 4:13 AM GMT (Updated: 4 Oct 2018 4:13 AM GMT)
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது. #PeriyarDam
கூடலூர்:
முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 5535 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 1½ அடி உயர்ந்து 129.10 அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர்திறப்பு 1700 கனஅடியாக உள்ளது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்துசேருகிறது.
மூலவைகையாற்று பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கும் நீர்வரத்து 2415 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.87 அடியாக உள்ளது. அணையிலிருந்து 1390 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. கொடைக்கானலில் பெய்துவரும் கனமழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 73 கனஅடி, திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.41 அடி. 39 கனஅடிநீர் வரும் நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. பெரியாறு 32, தேக்கடி 31, கூடலூர் 13, சண்முகாநதிஅணை 9, உத்தமபாளையம் 6.6, வீரபாண்டி 15, வைகை அணை 3, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 17, கொடைக்கானல் 3.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. #PeriyarDam
முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 5535 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 1½ அடி உயர்ந்து 129.10 அடியாக உள்ளது. அணையிலிருந்து நீர்திறப்பு 1700 கனஅடியாக உள்ளது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்துசேருகிறது.
மூலவைகையாற்று பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கும் நீர்வரத்து 2415 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.87 அடியாக உள்ளது. அணையிலிருந்து 1390 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. கொடைக்கானலில் பெய்துவரும் கனமழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 73 கனஅடி, திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.41 அடி. 39 கனஅடிநீர் வரும் நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. பெரியாறு 32, தேக்கடி 31, கூடலூர் 13, சண்முகாநதிஅணை 9, உத்தமபாளையம் 6.6, வீரபாண்டி 15, வைகை அணை 3, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 17, கொடைக்கானல் 3.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. #PeriyarDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X