search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala South West Monsoon"

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 3 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்த முன் அறிவிப்புகளை வெளியிடும். இதுவரை இந்திய வானிலை ஆய்வு மையம் இதுபற்றி தகவல் வெளியிடாத நிலையில் தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் நிறுவனம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 4-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜதின்சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும். அதன் பிறகு ஜூலை மத்தியில் நாடு முழுவதும் பெய்யத் தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ந்தேதி தொடங்கும்.

    தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி வருகிற 22-ந்தேதி அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் தென்படும். இந்திய தீபகற்ப பகுதியில் பருவமழை மெதுவாகவே தொடங்கும்.

    இந்த ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் மத்தியில் உள்ள மாநிலங்களில், தென்மாநிலங்களை விட குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.



    இந்தியாவில் சராசரியாக பெய்யும் மழையில் 96 சதவீத அளவு மழை வடமேற்கு பகுதியில் பெய்யும். ஆந்திராவின் ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் உள் பகுதியில் குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் இந்த ஆண்டு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது குமரி மாவட்டத்திலும் அதிக மழை பொழிவு இருக்கும். இதுபோல மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணைக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    நீர்பிடிப்பு பகுதியில் கன மழை நீடித்து வருவதால் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam
    கூடலூர்:

    கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழக கரையோர மாவட்டங்களிலும் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.30 அடியாக உள்ளது. நீர்வரத்து 5653 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1800 கன அடி திறக்கப்படுகிறது.

    இதில் 1400 கன அடி மின்சார உற்பத்திக்கும், 400 கன அடி தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4525 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.



    வைகை அணையின் நீர்மட்டம் 48.33 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு 1169 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை குடிநீருக்காக 60 கன அடியும் என மொத்தம் 960 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 1782 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 கன அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 129.68 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 84, தேக்கடி 65, கூடலூர் 10.2, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 6, வீரபாண்டி 2.5, மஞ்சளாறு 5, வைகை அணை 7.4, சோத்துப்பாறை 3, மருதாநதி 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #SouthWestMonsoon #PeriyarDam #VaigaiDam

    ×