என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரி நீர்மட்டம் 8 அடி உயர்வு
Byமாலை மலர்4 Oct 2018 6:36 AM GMT (Updated: 4 Oct 2018 6:36 AM GMT)
கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இன்று காலை வினாடிக்கு 620 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக இருந்தது. வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தண்ணீர் இருந்தது.
தற்போது கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து உள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 19.98 அடியாக பதிவாகியது. 249 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது
கிருஷ்ணா நதி நீர் வரத்து தற்போது வருவது போல் தொடர்ந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இன்று காலை வினாடிக்கு 620 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக இருந்தது. வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தண்ணீர் இருந்தது.
தற்போது கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து உள்ளது. கடந்த 29-ந் தேதி முதல் இன்று காலை வரை 5 நாட்களில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 19.98 அடியாக பதிவாகியது. 249 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது
கிருஷ்ணா நதி நீர் வரத்து தற்போது வருவது போல் தொடர்ந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X