search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perunchani dam"

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டி தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி எடுத்தது. நாகர்கோவில் பகுதியில் பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

    தோவாளை, அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிந்து வருகிறது. நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்த நிலையில் தெருக்களிலும் வீடுகளை சுற்றியும் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

    அந்தப் பகுதியில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. நேற்று இரு அணைகளுக்கும் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்றும் 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.24 அடியாக உள்ளது. அணைக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 75.12 அடியாக உள்ளது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்1- நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணைக்கு 138 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 3 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதையடுத்து ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர் மழைக்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 36 வீடுகள் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 12 வீடுகள் இடிந்துள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 5 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்துள்ளன.

    மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த நெற்பயிர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில் 605 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.13 அடியாக இருந்தது. அணைக்கு 1171 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.40 அடியாக உள்ளது. அணைக்கு 888 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடித்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெருஞ்சாணியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி வருவதால் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள்.

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.13 அடியாக இருந்தது. அணைக்கு 1171 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 227 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.40 அடியாக உள்ளது. அணைக்கு 888 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 12.20 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 17 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.50 அடியாக உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29, பெருஞ்சாணி 58, சிற்றார்-1-25.4, சிற்றார்-2-24.8, பூதப்பாண்டி 18.6, களியல் 4.4, குழித்துறை 8.4, நாகர்கோவில் 4.8, புத்தன் அணை-54.8, சுருளோடு 42.8, தக்கலை 15.1, குளச்சல் 6, இரணியல் 9.2, பாலமோர் 14.2 மாம்பழத் துறையாறு-21 ஆரல்வாய்மொழி 2 கோழி போர்வைவிளை 9.6 ஆணை கிடங்கு 194 முக்கடல் 30.2 குருந்தன்கோடு 9.4.

    மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்று மாம்பழத்துறையாறு திறக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையினால் பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பியது.

    மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்று மாம்பழத்துறையாறு திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது. 54.12 அடி கொள் ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 54.05 அடியாக இருந்தது. 

    மழை குறைந்தாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அது படிப்படியாக குறைந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35 அடியாக இருந்தது. அணைக்கு 2150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. அணையில் இருந்து 2186 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.20 அடியாக உள்ளது. அணைக்கு 597 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 806 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
    நீர்வரத்து அதிகரிப்பால் பெருஞ்சாணி அணையில் இருந்து காலை 10 மணிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. #perunchanidam
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    பெருஞ்சாணி அணை நிரம்பியதால் அங்கிருந்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.

    மழை குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மாமுகம், இஞ்சிக்கடவு, மங்காடு, ஏழூர், வைக்கலூர் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. வைக்கலூர் பகுதியில் வாழைத் தோட்டங்களை சூழ்ந்த மழை வெள்ளம் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தெரிசனங்கோப்பு, ஞாலம், அருமநல்லூர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தில் நெல், வாழை பயிர்கள் மூழ்கின. தற்போது அங்கும் வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது.

    ஏற்கனவே மழை காரணமாக சுமார் 125 வீடுகள் இடிந்து விழுந்தன. இவர்களுக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் 11 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீடுகளை இழந்த பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    மழை வெள்ளத்தால் இடிந்த வீடுகள், பயிர் சேதங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல மழையால் சேதம் அடைந்த மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.

    பெருஞ்சாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் நேற்று அந்த அணை மூடப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை பெருஞ்சாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 1454 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 77 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 75 அடியானது.

    இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, வள்ளியாறு, கோதையாறு, குழித்துறையாறுகளில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    இதேபோல பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து 4 ஆயிரத்து 688 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  #perunchanidam

    அணைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பெருஞ்சாணி அணையில் இருந்து 4226 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. #Perunchanidam
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்து வரும் கன மழையினால் மாவட்டம் முழுவதும் குளு, குளு சீசன் நிலவுகிறது.

    கன்னிமார், புத்தன் அணை, பூதப்பாண்டி பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. கன்னிமாரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலில் இன்று காலையில் 5 மணி முதல் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.

    குலசேகரம், திருவட்டார், கீரிப்பாறை, தடிக்காரன் கோணம், குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் கொட்டித் தீர்த்து வரும் கன மழையினால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதையடுத்து அணையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து 4226 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து வள்ளியாறு, கோதையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    குழித்துறை ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. பழையாற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி தண்ணீர் விழுவதால் அருவியில் குளிப்பதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 24.20 அடியாக உள்ளது. அணைக்கு 2947 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 712 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 76.20 அடியாக உள்ளது. அணைக்கு 2818 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 4226 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    சானல்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக குலசேகரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது.

    தோவாளை, ஆரல்வாய் மொழி பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-57.2, பெருஞ்சாணி-68.8, சிற்றாறு 1-40.4, சிற்றாறு 2-39, மாம் பழத்துறையாறு-33, நிலப்பாறை-12, இரணியல்-5.2, ஆனைக்கிடங்கு-23.2, குளச்சல்-9, குருந்தன் கோடு-2.4, அடையா மடை-57, கோழிப் போர்விளை-33, முள்ளங்கினாவிளை-14, புத்தன் அணை-70.2, திற்பரப்பு-42.4, நாகர் கோவில்-27, பூதப்பாண்டி- 60.2, சுருளோடு-58.4, கன்னிமார்-90, ஆரல்வாய் மொழி-29, பாலமோர்-72.4, கொட்டாரம்-12.6, மயி லாடி-27.6.  #Perunchanidam


    கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று விடிய, விடிய மழை கொட்டியதன் எதிரொலியாக முழு கொள்ளளவை எட்டிய பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

    அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 35.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல சுருளோடு, மயிலாடி, ஆனைக்கிடங்கு, குளச்சல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தொடர்ந்து பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 763 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 671 கன அடி நீரும், சிற்றார்-1 அணையில் இருந்து 268 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 75.65 அடியானது. இதன் காரணமாக பெருஞ்சாணி அணையில் இன்று காலை 1000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேதஅருள்சேகர் கூறுகையில் பெருஞ்சாணி அணையின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 1000 கனஅடி நீர் இன்று உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளின் ஓரங்களில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர் என்றார்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் தற்போது 21.70 அடியாக உள்ளது.

    அணைகளில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மழை காரணமாக ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதிகளில் செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. சாமிதோப்பு பகுதியில் உப்பளங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. பாலமோர் உள்பட பல பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணியும் முடங்கி உள்ளது.

    மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    பாலமோர்-35.6, நாகர்கோவில்-11.4, பூதப்பாண்டி -18.6, சுருளோடு -19.2, கன்னிமார்-17.4, ஆரல்வாய்மொழி-9.4, மயிலாடி-18.2, இரணியல்-14.2, கொட்டாரம்-18.6, ஆனைக்கிடங்கு -23.2, குளச்சல்-12.6, குருந்தன்கோடு -17.8, முள்ளங்கினாவிளை -32, புத்தன்அணை -15.2, கோழிப்போர்விளை-22, பேச்சிப்பாறை-15.6, பெருஞ்சாணி -14.8, சிற்றார்1-17.4, சிற்றார்2-12.6, பொய்கை-20, மாம்பழத்துறையாறு-20.
    பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் இன்று காலை மீண்டும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. #PerunchaniDam
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

    பூதப்பாண்டி, சுருளோடு, நாகர்கோவில், கோழிப்போர் விளை மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் நேற்றிரவும் மழை பெய்தது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 17.50 அடியாக இருந்தது. அணைக்கு 712 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதால் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீரின் அளவுக்கேற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை அணையின் நீர்மட்டம் 75.55 அடி யாக இருந்தது. அணைக்கு 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 101 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

    ஏற்கனவே குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் இன்று காலை மீண்டும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 15 அடியை எட்டுகிறது. மாம்பழத்துறையாறு முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்றும் சூறைக்காற்று வீசியது. ராஜாக்கமங்கலம் பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் நின்ற மின்கம்பங்களும் சேதமடைந்து மின்சாரமும் தடைபட்டது. மின்வாரிய அதிகாரிகள் மரத்தின் கிளைகளை வெட்டி மின் இணைப்பை சரி செய்தனர்.

    சூறைக்காற்றிற்கு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழைகளும் முறிந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-10.2, பெருஞ்சாணி-9.8, சிற்றாறு-1-11.6, சிற்றாறு-2-9, மாம்பழத்துறையாறு-20, பூதப்பாண்டி-2.6, சுருளோடு-11.4, பாலமோர்-8.4, கோழிப்போர் விளை-7, புத்தன்அணை-10.2, திற்பரப்பு-8. #PerunchaniDam

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று இரவும் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையினால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 53.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, இரணியல், முள்ளங்கினாவிளை, மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு, விட்டு பெய்து வரும் சாரல் மழையினால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 12.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.20 அடியாக உள்ளது. அணைக்கு 1685 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 675 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பி வருவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 14.14 அடியாக உள்ளது. பொய்கை அணை 15.60 அடியை எட்டியது. மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு வாரமாக முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    அணையின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மலையோர பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நிரம்பி வருவதால் அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படும். சிற்றாறு அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-37.4, பெருஞ்சாணி-23.2, சிற்றாறு 1 - 36.2, சிற்றாறு 2 - 31, மாம்பழத்துறையாறு-20, கொட்டாரம்-3.4, மயிலாடி-7.2, பாலமோர் -53.4, ஆரல்வாய்மொழி-5.2, கன்னிமார்-24.6, சுருளோடு-15.2, நாகர்கோவில்-16.8, பூதப்பாண்டி-10.4, ஆனைக்கிடங்கு-20, அடையாமடை-28, முள்ளங்கினாவிளை-32, புத்தன்அணை-24.6


    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது.

    மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    நாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த மழையினால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    களியல், பேச்சிப்பாறை, குலசேகரம், பெருஞ்சாணி, குழித்துறை, தக்கலை, களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலாடி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு, விட்டு மழை பெய்தது.

    திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் காரணமாகவும் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது.

    ஆனால் பேச்சிப்பாறை அணையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் அதிக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியதை அடுத்து அணையில் இருந்து பரளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். வலியாற்று முகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காய்பட்டணம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 774 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் விடப்பட்டு உள்ளது. சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் 39 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 291 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    1115 குளங்கள் 75 சதவீதமும், 422 குளங்கள் 50 சதவீதமும், 123 குளங்கள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது. பாசன குளங்கள் நிரம்பி வருவதை அடுத்து கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர்.

    வழக்கமாக 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு இதுவரை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகள் நாற்று நடவும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.




    ×