search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan Temples"

    • முருகப்பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு, பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

      மானாமதுரை

      சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடைபெற்றது. மானாமதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

      மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிவிடு முருகனை தரிசனம் செய்தனர்.

      மானாமதுரை ெரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் நடந்த தைப்பூச விழாவில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜை நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்தனர்.

      மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு கிராமத்தில் எழுந்தரு ளியுள்ள செல்வமுருகன் கோவி லில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வ முருகனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஏ.ஆர்.பி. முருகேசன் செய்திருந்தார்.

      மானாமதுரையில் தாய மங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மயூரநாதர் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.

      மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பாலமுருகன் கோவிலிலும் தைப்பூச விழா நடந்தது.

      இடைக்காடர் சித்தர்கோவிலில் பவுர்ணமி அன்னதான வழிபாட்டு குழுசார்பில் சிறப்பு யாகம், அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இரவு இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.மதுரை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர் .

      கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி, கருப்பனேந்தல் மடம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதல்ஜீவ ஒடுக்கம் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.

      இளையான்குடி ஒன்றியம் குறிச்சி வழிவிடு பெரியநாச்சி, காசி விசுவநாதர் கோவிலில் செந்திலாண்டவர் சன்னதியில் தைப்பூச விழா நடந்தது. செந்திலாண்டவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடைபெற்று தீபார தனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செந்திலாண்டவரை தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி எஸ். பி.தேவர் செய்திருந்தார்.

      வேதியேரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சமுக பிரத்யங்கிராதேவி கோவிலில் தங்ககவசம், பூஜை, திருவிளக்கு வழிபாடு நடந்தது. திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் நடந்த தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.

      • உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு 18 வகையான நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
      • சிவகிரி கருப்பாயி நாச்சியார் கட்டளைக்கு பாத்தியப்பட்ட (தளத்துக்கோவில்) பால சுப்பிரமணியர் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

      சிவகிரி:

      சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் பால சுப்பிரமணிய சுவாமி மற்றும் உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு பால், தயிர், நெய், பன்னீர், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை சாறு, கும்பநீர் உட்பட 18 வகையான நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து விபூதி அலங்காரம் மற்றும் பட்டாடைகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

      இக்கோவில் அடி வாரத்தில் உள்ள கருணை ஆனந்தா சித்தர் சுவாமிகள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

      இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விபூதி, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் ராணி பாலகுமாரி நாச்சியார், ராஜா சேவுகப்பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னத்தம்பியார் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். சிவகிரி கருப்பாயி நாச்சியார் கட்டளைக்கு பாத்தியப்பட்ட (தளத்துக்கோவில்) பால சுப்பிரமணியர் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவில் முத்துக்குமாரசாமி சப்பரத்தில் பவனி வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிவகிரி அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

      சிவகிரி அருகே உள்ள கூடலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகிரி, சங்கரன்கோவில், வாசு தேவநல்லூர், புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

      • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
      • பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கந்தபெருமானை வழிபட்டனர்.

      திருப்பூர் :

      திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்றுமாலை அனைத்து கோவில்களிலும் தேரோட்டம் நடக்கிறது.

      ஊத்துக்குளி : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 28-ந்தேதி கதித்தமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை கீழ் தேரோட்டம் நடைபெறுகிறது.

      இதையொட்டி கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 6:30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு திருத்தேர் நிலை தேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பரிவேட்டை நடைபெறும். 7-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி உலா காட்சி நடைபெறும்.

      வருகிற 8-ந் தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். வருகிற 9-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

      அலகுமலை

      பொங்கலூர் அருகே அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினசரி உபயதாரர்கள் சார்பாக சாமிதிருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு சாமி திருத்தேர் ஏற்றம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தொடங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

      நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் வினீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன்,ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், அலகுமலை ஊராட்சித் தலைவர் தூயமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர். நாளை 6-ந் தேதி மாலை பரிவேட்டையும், 7-ந் தேதி சாமி திருவீதி உலாவும், 8-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

      சிவன்மலை

      காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ந்தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

      பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. 11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர்.பின்னர் சாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெற்றது.நேற்று காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

      திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து பக்தர்களால் பிடிக்கப்பட்டு இழுத்து செல்லப்படும்.

      நாளை 6-ந் தேதி (திங்கட்கிழமை) 2-வது நாளாக மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்வார்கள்.வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலைதிருத்தேர் நிலையை அடைகிறது.

      வருகிற 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. 12-ந்தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்த வாரியும், 14-ந் தேதி மாலை 3 மணியளவில் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், திருமலைக்கு சாமி எழுந்தருளலும், மலைமீது அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. மலைக்கோவி ல்ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச விழா 28-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை சுவாமி கிரிவலம் நடைபெற்றது. நேற்று ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன பவனியும் நடைபெற்றது.

      இன்று காலை 6 மணிக்கு, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 3மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 6ந் தேதி பரிவேட்டை, தெப்போற்சவம், குதிரை வாகன பவனியும், 7-ந் தேதி மகா தரிசனம், அன்னதான நிழ்ச்சியும், 8ந் தேதி மஞ்சள் நீர்விழாவும் நடக்கிறது.

      கொங்கணகிரி

      திருப்பூர் கொங்கணகிரியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கந்த கந்த சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கந்தபெருமானை வழிபட்டனர்.

      தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால் இந்த வருடம் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் கவலை அடைந்தனர்.

      • தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்க ளில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
      • அதிகாலை முருகனுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

      ஈரோடு:

      தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்க ளில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

      ஈரோடு அடுத்த திண்டல் மலை வேலாயுதசாமி சாமி கோவிலில் இன்று அதிகாலை முருகனுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

      முன்னதாக பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் அதிகாலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதிகளை சேர்ந்த பெண்கள் பலர் திண்டல் மலைக்கு பாத யாத்திரை வந்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

      கோபிசெட்டிபாளையம் பவள மலை முத்துக்குமார சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 2-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. விநாயகர் பூஜையும் கொடியேற்றமும், சுவாமிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

      இதை தொடர்ந்து யாக சாலை பூஜை, தீபாரா தனை, யானை வாகனத்தில் முத்துக்குமாரசாமி திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை அபிஷேகமும், யாகசாலை பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முத்துகுமாரசாமி கிரிவலம் வந்தார்.

      தைப்பூச விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு முத்து விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் பெண்கள் பலர் பதி மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.

      இதையடுத்து காலை திருக்கல்யாண உற்சவம் நடை பெற்றது. இதை தொடர்ந்து மகா தீபாரா தனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இதையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது.

      தொடர்ந்து நாளை காலை சண்முகசுப்பிரமணி யருக்கு அபிஷேகம், சிவப்பு சாற்றி அலங்காரமும் நடைபெற உள்ளது.

      மேலும் கோபி பச்சை மலை சுப்பிரமணியசாமி கோவிலிலும் தைப்பூச திருவிழாவையொட்டி மலை அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறு கிறது.

      இதேபோல் கோபி கடைவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில், மூல வாய்க்கால் சுப்ரமணியசாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் தைப்பூச விழா நடந்தது.

      ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள இரப்பரை பகுதியில் ஓதிமலை ஆண்டவர் முருகன் கோவில் அமைந்து உள்ளது. தைப்பூச விழாவை யொட்டி 5 முகம் கொண்ட மலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

      முன்னதாக நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் இளநீர், பன்னீர் காவடிகளை எடுத்து வந்தனர். தொடர்ந்து இன்று காலை வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் காவடி எடுத்து வந்தனர்.

      இதை தொடர்ந்து இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. இதில் சின்ன தேர் மற்றும் பெரிய தேர் என 2 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கி றார்கள்.

      பவானியில் உள்ள பழனியாண்டவர் கோவி லில் தைப்பூச திருவிழா கடந்த 27-ந் தேதி வாஸ்து பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் பழனி யாண்டவருக்கு நடை பெற்றது.

      பழணியாண்டவர் கோவிலில் இருந்து கடந்த 31-ந் தேதி பவானியில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டுச் சென்றனர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான இன்று வள்ளி, தெய்வானை உடனமர் பழனியாண்டவருக்கு பக்தர்கள் முன்னிலையில் இன்று காலை பழனி யாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் நடை பெற்றது.

      பின்னர் இன்று காலை பக்தர்கள் அேராகரா கோஷத்துடன் திருத்தேரோட்டம் நடந்தது. தேர் பவானி நகரில் முக்கிய வீதி வழியாக வலம் வந்து நிலை அடைந்தது.

      ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவி லான சென்னிமலை முருகன் கோவிலில் தைப் பூச விழா கடந்த 28–-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக சிறப்பு பூஜை களுடன் விழா நடைபெற்று வருகிறது.

      இதையொட்டி தினமும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை உடன் சமேதராக அலங்கார வாக னங்களில் காட்சி அளித்து அருள் பாலித்தார்.

      தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று இரவு வசந்த மண்டபத்தில் திருக் கல்யாணம் நடந்தது. இதை யொட்டி முருகபெரு மானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

      இன்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேக மும் காலை 5.40 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. 5.55 மணிக்கு தேர் கொண்டு வரப்பட்டது.

      பின்னர் உற்சவ மூர்த்தி கள் தேர் நிலையை மூன்று முறை வலம் வந்து சாமியை காலை 6.10-க்கு 3 தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்க ப்பட்டனர்.

      முதல் தேரில் விநயாகப்பெருமானும், பெரிய தேரில் முருப்பெரு மான் அமர்தவள்ளி, சுந்தர வள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்திலும், 3-ம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினர்.

      அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவம் தலைமையில் சிறப்பு ஆராதனை நடை பெற்று சுவாமி தரிசனம் நடந்தது.

      இதையடுத்து காலை 6.15-க்கு தேரோட்டம் தொடங்கியது. அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் தோப்பு. வெங்கடா ச்சலம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

      அதை தொடந்து லட்சக்கண க்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் கந்தனுக்கு 'அரோகரா' முருகனுக்கு ''அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

      வழி நெடுக திரண்டு இருந்த பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவியும், கடலைகாய், நெல் தூவியும் முருகப்பெரு மானை வழிபட்டனர்.

      தேரோட்டத்தில் செயல் அலுவலர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ். செல்வம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செங்கோட்டையன், பிரபு, சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      தேரோட்டத்தை முன்னிட்டு தேவஸ்தான அலுவலக வளாகத்தில் தைப்பூச இசை விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கபட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பலர் அரோகரா கோஷத்துடன் காவடி சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

      தேர் காலை 6.40 மணிக்கு தெற்கு ராஜா வீதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேர் தெற்கு, மேற்கு ரத வீதிகளில் வலம் வந்து வடக்கு ரத வீதியில் நிறுத்தப்படும், திருத்தேர் நாளை (திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு நிலை அடைகிறது.

      தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் வரும் 9 -ந் தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணியளவில் நடராஜப்பெரு மானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்த ருளி திருவீதி உலா காட்சி நடைபெறும். இதை காண சென்னிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

      அந்தியூரில் உள்ள சுப்பிர மணியர் கோவில் தைப்பூசத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

      அந்தியூர் தேர்வீதியில் அமைந்துள்ள சுப்பிர மணியர் கோவிலில் தைப்பூசத் திருவிழா விமரி சையாக நடந்தது. இன்று காலை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

      விழாவையொட்டி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, பால் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்த னர். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

      தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு தங்க கவச அலங்கார பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தது.

      இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்து சென்றனர்.

      இந்த நிகழ்ச்சியை பால தண்டாயுதபாணி கிருத்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

      • முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது
      • கந்த சஷ்டியை முன்னிட்டு நடந்தது

      கரூர்:

      கந்த சஷ்டியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25 துவங்கி தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூர சம்கார நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. சஷ்டி விழாவின் தொடர்ச்சியாக கோவிலில் நேற்று காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

      • சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
      • நாளை மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

      திருப்பூர்:

      திருப்பூர் மாவட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

      விழாவையொட்டி காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அடிவாரத்தில் உள்ள நஞ்சுஸ்டேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வருகிறது. திருவீதி உலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சக்தியிடம் வேல் வாங்குதல், சப்பரத்தில் எழுந்தருளல், பல வடிவங்கள் எடுத்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி ஆகியன நாளை மாலை 5மணிக்கு நடக்கிறது. நாளை மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

      இதேப்போல் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில்,விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் ,அலகுமலை முத்துக்குமாரசாமி கோவில், மங்கலம் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில் மற்றும் திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் , அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தையொட்டி முருகன் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

      • பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.
      • முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

      பல்லடம் :

      பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.வருடம்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும். நேற்று சஷ்டி விரதம் ஆரம்பநாள்.

      இதன்படி பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடைபெற்றது இதன் பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டனர்.

      • கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் ஈஸ்வரன் கோயில்களின் உள்ள முருகன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
      • ஆடி கிருத்திகையை யொட்டி கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை, புகழிமலை, பாலமலை பாலசுப்பிரமணி சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

      கரூர்:

      ஆடி கிருத்திகையை யொட்டி கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை, புகழிமலை, பாலமலை பாலசுப்பிரமணி சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இவற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

      கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

      கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்கள் மற்றும் ஈஸ்வரன் கோயில்களின் உள்ள முருகன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இவற்றில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

      • சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை முருக பெருமானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.
      • திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

      ஈரோடு:

      ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்க ளில் இன்று ஏராளமான பக்த ர்கள் சாமி தரிசனம் செய்த னர்.

      சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்தி கையை யொட்டி இன்று அதிகாலை முருக பெரு மானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

      தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

      இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை சுப்பி ரமணியசாமி கோவிலில் இன்று அதிகாலை சுப்பிர மணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

      தொடர்ந்து இன்று காலை பெண்கள், ஆண்கள் என ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பால் குடம் எடுத்து வந்தனர்.

      இதை தொடர்ந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி சுப்பிரமணிசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.

      இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று மாலை தங்க மயில் வாகனத்தில் தங்கரத புறப்பாடு நடக்கிறது.

      ஈரோடு அடுத்த திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு, திண்டல், பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

      இதே போல் ஈரோடு பார்க் ரோடு முருகன், காசிபாளையம் மலை மலேசியா பாலமுருகன், கருங்கல்பாளையம் சுப்பிர மணியசாமி, பவானி பழனி ஆண்டவர், கோபி செட்டிபாளையம் பவள மலை முருகன் கோவில் மற்றும் பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

      துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
      துறையூர் பேருந்து நிலையம் அருகே திருச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அழகிய முருகன் ஆலயம். இந்த ஆலயத்தின் பெயர் ‘சுயம்பு கோலோச்சும் முருகன் கோவில்’ என்பதாகும். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய முகப்புடன் கூடிய நுழைவுவாசல். அடுத்துள்ள மகா மண்டபத்தை அடுத்து விலாசமான அர்த்த மண்டபம் உள்ளது.

      அதை அடுத்த கருவறையில், இறைவன் கோலோச்சும் முருகன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனுக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் வேலையும் கொடியையும் தாங்கி நிற்கும் முருகனின் கீழ் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரைகளை காட்டுகின்றன. முருகன் தனது வலது புறம் சக்தி சூரியனுடனும் இடது புறம் பக்தி சண்டிகேஸ்வரருடனும் கட்சி தருகிறார். தவிர முருகனுக்கு முன் அவரது தந்தை சிவபெருமானும், தாய் பார்வதியும், சகோதரர் வலம்புரி விநாயகரும் அமர்ந்துள்ளனர்.

      தனது குடும்ப சகிதமாய் பக்தர்களுக்கு முருகப் பெருமான் கோலோச்சும் அமைப்பு மிகவும் சிறப்பானது என்பதுடன் எங்கும் காண இயலாது என்கின்றனர் பக்தர்கள். முருகப்பெருமானின் கோஷ்டத்தில் அறுபடை வீடுகளும் மிக அழகாக வண்ணத்தில், சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தவிர கருவறையின் முன் மயில், குதிரை, நந்தி, மூஞ்சுறு, பலி பீடம் ஆகியவையும் காணப்படுகின்றன. ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கில் விநாயகர், வலம்புரி விநாயகர், ராகு-கேதுவும், மேற்கில் உற்சவ மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தின் வலது புறம் கொல்லிமலை அருள்வாக்கு சித்தர் ஜானகிராம் சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. இந்த ஆலயத்தை கட்டியவரும் இவர் தான்.

      இந்த ஆலயத்திற்கு மேலே ஒரு தளம் உள்ளது. இறைவனின் கருவறைக்கு மேலே கோபுர கலசம் உள்ளது. இது முற்றிலும் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. கருவறையில் மூன்று ஷவர் பைப்புகள் உள்ளன. முருகனுக்கும், சண்டிகேஸ்வரருக்கும், சூரியனுக்கும் காலையில் அபிஷேகம் செய்யும் முன், இந்த ஷவரை திறந்து விடுவார்கள். தலை மேல் உள்ள ஷவரில் இருந்து தண்ணீர் பூப் பூவாய் பொழிய, முருகன் ஷவரில் நீராடுவது போன்ற அந்த நிகழ்வு, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அற்புத அமைப்பு வேறு எங்கும் உள்ளதா? என்பது சந்தேகமே!

      கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தினத்தன்று, ஆலயம் முன்பு பிரமாண்டமான முறையில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் விழா, பக்தர்கள் முன்னிலையில் ஒளிமயமாக நடைபெறும். கந்தசஷ்டியின் போது ஆலயத்தின் முன், முருகன் வேல் வாங்கி சூரனை சம்ஹாரம் செய்யும் போது கருவறை முருகன் முகத்தில் வெள்ளி பணித் துளிகளாய் வியர்வை துளிகள் காணப்படுவது நம்மை சிலிர்க்க வைக்கும் அதிசயமாகும்.

      இந்த ஆலயம் செவி (காது) வடிவத்தில் இருப்பதால், பக்தர்களின் அனைத்து விதமான பிரார்த்தனையையும், தன்னுடைய காதில் ஏற்று முருகப்பெருமான் அவற்றை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

      தினசரி மூன்று கால ஆராதனை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம், நாவல் மற்றும் வன்னி மரமாகும். இந்த ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், இட்லி, உப்புமா, தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் என தினசரி விதம் விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

      கால பைரவர், குடும்ப சகிதமாக முருகப்பெருமான்

      ஆலயத்தின் வடக்குப் பகுதியில், பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. இந்த கால பைரவருக்கு ‘கலியுக குபேர காலச் சக்கர பைரவர்’ என்று பெயர். இந்த பைரவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக மலை குகை உள்ளே இருந்தார். இவரது அடி பீடத்தில் 6,646 ஸ்ரீசக்கரங்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

      கோவிலின் மேல் தளத்தில் குமார குரு பகவானின் சன்னிதி உள்ளது. இங்கு முருகப்பெருமானே குமார குருவாக அருள்பாலிக்கிறார். குருப்பெயர்ச்சியின் போது ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அன்றைய தினம் 5008 பால்குடம் சுமந்தும், 1000 காவடி சுமந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருவது பரவசத்தை கொடுக்கும் நிகழ்வாகும். அன்றைய தினம் ஆலயத்தில் மட்டுமின்றி, நகரில் உள்ள பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்படும்.

      இங்கு குருஷேத்திர சனி பகவானாக காட்சி தரும், சனீஸ்வரர், ஆலயத்தின் மேல் தளத்தில் தனிச் சன்னிதியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வேறு எந்த ஆலயத்திலும் சனி பகவான் கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஏழரைச் சனி, ஜென்ம சனி, கண்டகச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சனீஸ்வரரை வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

      மேல் தளத்தில் குபேர மூலையில் குபேர காளி, வடக்கு நோக்கி அருள்புரிகிறார். ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும், காலை வேளையில் இந்த குபேர காளிக்கு விசேஷ அபிஷேக ஆராதைனகள் நடைபெறும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

      இந்த ஆலயத்தில் முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான தைப்பூசம் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

      நினைத்ததை நடத்தி தந்து அருள்புரியும், கோலோச்சும் முருகப்பெருமானை, நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே!

      திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது கோலோச்சும் முருகன் ஆலயம்.

      தத்து கொடுக்கும் நிகழ்வு


      இந்த ஆலயத்தில் புதுமையான சம்பிரதாயம் ஒன்று உள்ளது, ‘தத்து கொடுக்கும் நிகழ்வு. தீராத வியாதி களால் அவதிப்படுபவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள முருகன் சன்னிதிக்கு வந்து, இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, மாலை சாத்தி, புதிய வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள். பின்னர் தங்களின் நோய் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, தன்னைத் தானே முருகப்பெருமானுக்கு தத்துக் கொடுத்து விடுவார்கள். அதன்பிறகு அந்த நபர் தன்னுடைய பழைய உடைகளை தானம் அளித்து விட்டு, புதிய உடை அணிந்து 10 பேருக்கு அன்னதானம் அளிக்கிறார்.

      அன்னதான நிகழ்வு முடிந்ததும், மூன்று பெயர்களை எழுதி, குலுக்கிப் போட்டு அதில் ஒன்றை எடுத்து, தன்னுடைய பெயராக சூட்டிக்கொண்டு இல்லம் திரும்புவார். அப்படி அந்த தத்துக் கொடுக்கும் நிகழ்வைச் செய்யும் நபருக்கு, அவரது நோய்களும், வந்த இன்னல்களும் அகல்வது கண்கூடான உண்மை என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள்.
      ×