search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன் கோவில்களில்"

    • மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சஷ்டியையொட்டி சூரசம்காரம் விழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி எனும் முருகப்பெருமானுக்கு தினந்தோறும் பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் பெண்கள் விரதமிருந்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான், வீரபாகு, சூரன் ஆகியோர் சப்பரத்தில் சத்தி சாலை மாரியம்மன் கோவில் வழியாக வந்து பவானிசாகர் சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று முருகப்பெருமான் வீரபாகு உடன் சேர்ந்து முதலில் கஜமுகனை வதம் செய்தார்.

    இதையடுத்து 2-வதாக வானு கோவணை வதம் செய்தார். 3-வதாக சிங்க மகனை வதம் செய்து 4-வதாக கோவில் வளாகத்தில் சராகா சூரனை வதம் செய்துவிட்டு வான வேடி க்கைகளுடன் முருகப்பெரு மான் சிவபெருமானுக்கு சிவ பூஜைகள் செய்து முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா விழா கடந்த 14-ந் தேதி காலை தொடங்கியது.

    அன்று காலை 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது அதன் பிறகு காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.

    11 மணிக்கு மகா பூர்ணாகுதியும் 11.30 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடை பெற்றது. தொடந்து பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு வள்ளி தெய்வானை க்கு அபிஷேம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை 5 நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்பு நேற்று மதியம் 2 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச் சாரியார் முருகப்பெரு மானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேல்லினை ஒப்படைத்தார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெருமான் சமேதராக மலை அடிவார த்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடி க்கை மற்றும் சிறப்பு மேள தாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா தொடங்கியது.

    சென்னிமலை டவுன், நான்கு ராஜா வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சி யை ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டு களித்தனர்.

    இதில் மேற்கு ராஜா வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜா வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜா வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்சியும் நடந்தது.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். அதை தொடந்து இன்று காலை 10.30 மணிக்கு முருகப்பெரு மான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடைபெற்றது.

    கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    • நாளை நடக்கிறது
    • இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் 8-30மணிக்குபிரசாதம் வழங்குதலும் நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்ட லில் ஸ்ரீ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 38-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் இந்த கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் அதிகாலை 6 மணிக்கு நிர்மால்யபூஜையும் 7.30 மணிக்கு சிறப்பு வழி பாடும். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும்8-30மணிக்குபிரசாதம் வழங்குதலும் நடந்து வருகிறது.

    6-ம் திருவிழாவான நாளை(சனிக்கிழமை) காலை 6-30 மணிக்கு மங்கள இசை, தேவ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கலசபூஜை போன்றவை நடக்கிறது.8மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 10 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பிற்பகல் 2 மணிக்கு சூரன் பவனி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதேபோல கன்னியா குமரி மறக்குடி தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருவிழாவான நாளை முதல் முறையாக இந்த கோவிலில் சூரசம்கார விழாநடக்கிறது.மேலும் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மருங்கூர் சுப்ரமணியசாமி கோவில், தோவாளை திருமலை முருகன் கோவில், சொக்கர் கிரி முருகன் கோவில், ஆரல்வாய்மொழி முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் நாளை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    • முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    சென்னிமலை:

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிரு த்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆடி கிருத்திகையையொட்டி சென்னி மலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து முருக பெருமானுக்கு பால், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சென்னிமலை முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் அடுத்த பவள மலை முத்துகுமாரசாமி கோவிலில் ஆடி கிருத்திகை யை யொட்டி இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது.

    இதையொட்டி கோவிலில் திருப்படி பூஜை நடந்தது. இதில் படியில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில், கோபி அருள்மலை முருகன், மூல வாய்க்கால் முருகன், அம்மா பேட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில் களிலும் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை முருக பெருமானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.
    • திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்க ளில் இன்று ஏராளமான பக்த ர்கள் சாமி தரிசனம் செய்த னர்.

    சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்தி கையை யொட்டி இன்று அதிகாலை முருக பெரு மானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை சுப்பி ரமணியசாமி கோவிலில் இன்று அதிகாலை சுப்பிர மணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை பெண்கள், ஆண்கள் என ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பால் குடம் எடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி சுப்பிரமணிசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று மாலை தங்க மயில் வாகனத்தில் தங்கரத புறப்பாடு நடக்கிறது.

    ஈரோடு அடுத்த திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு, திண்டல், பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் ஈரோடு பார்க் ரோடு முருகன், காசிபாளையம் மலை மலேசியா பாலமுருகன், கருங்கல்பாளையம் சுப்பிர மணியசாமி, பவானி பழனி ஆண்டவர், கோபி செட்டிபாளையம் பவள மலை முருகன் கோவில் மற்றும் பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×