search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூச விழா"

    • திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தைப்பூச தேர் திருவிழா.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27 -ந்தேதி பரிவேட்டை, 28-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும்.

    29-ந்தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி ரத ஆரோகணமும், காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    • தைப்பூச விழா நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.
    • உணவு வகைகளை ஒருவொருக்கொருவர் பறிமாறி நிலாச்சோறு உண்டு வந்தனர்.

    திருப்பூர் :

    அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு வெள்ளைப்பூ ண்டு ரசம் படைத்து வழிபாடு செய்த பெண்கள்-குழந்தைகள் கும்மியடித்தது கோலாகலமாக இருந்தது.

    தைப்பூச விழா நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கடந்த 1 வாரமாக தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். மேலும் தினமும் வீடுகளில் இருந்து பல்வேறு உணவு வகைகளை விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்து சாமி முன்பு படைத்து, பாட்டு பாடி கும்மியடித்து, பின்னர் அங்கேயே அனைவரும் கொண்டு வந்த உணவு வகைகளை ஒருவொருக்கொருவர் பறிமாறி நிலாச்சோறு உண்டு வந்தனர். நேற்று முன்தினம் தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு மாவு, பழம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டனர். இந்த நிலையில் நேற்று மாவு, பழம் சாப்பிட்ட விநாயகருக்கு செமிக்கும் வகையில் வெள்ளைப்பூண்டு ரசமும், சாதமும் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட உணவு வகைகள் முன்பு கும்மி யடித்து, விநாயகரை வழிபட்டனர். முடிவில் அனைவரும் வெள்ளைப்பூண்டு ரசத்துடன் நிலாச்சோறு உண்டனர். இன்று (செவ்வாய்கிழமையுடன்) தைப்பூச விழா நிறைவடை கிறது.

    • ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பவுர்ணமி நாளில் வரும் பூசம் நட்சத்திரத்தில், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பவுர்ணமி நாளில் வரும் பூசம் நட்சத்திரத்தில், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாமக்கல் நகரில் மோகனூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவ பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையும், 11 மணிக்கு சிறப்பு அபிசேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பகல் 12 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சந்தனக்காப்பு அலங்காரமும், சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    காந்தமலை முருகன்

    இதேபோல், நாமக்கல் மாவட்டம், மோகனூர் காந்தமலை, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் ஊர்வலமாக வந்து சுவாமியை வழிபட்டனர். இக்கோவிலில், ஆண்டு தோறும், தைப்பூசத் தேர்த் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், தைப் பூசத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இருப்பினும், சுவாமிக்கு வழக்கம் போல் பூஜைகள் மட்டும் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல், கட்டளைதாரர்கள் மூலம் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, பால் குடம், தீர்த்தக்குடம், காவடி எடுத்துக்கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கோவிலை அடைந்தனர்.

    அதையடுத்து, சுவாமிக்கு, பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தை பூசத்திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகில் உள்ள கபிலர்மலை முருகன் கோயில், நாமக்கல் அருகில் உள்ள கூலிப்பட்டி, கந்தகிரி முருகன் கோயில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், பொம்மைக்குட்டை மேடு கருமலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் தைப்பூசத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    • காவடிகளை எடுத்து வந்தனர்
    • தைப்பூச விழாவையொட்டி நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி ஊராட்சியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 208பேர் பால்குட ஊர்வலம் நடைபெற்றது

    ப.முத்தம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சாமிக்கு பால்அபிஷேகம், திரவிய அபிஷேகம், கலச அபிஷேகம், நடைபெற்றது.

    தொடர்ந்து சாமிக்கு ராஜ அலங்கார தரிசனம், மஹா தீபஆராதனை அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சிவசுப்பிரமணிய சுவாமிக்கு ஹோமம், 208 பால்குடம் அபிஷேகம், கலசஅபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    சாமிக்கு ஸகணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம் நடைபெற்றது. குளக்கரை வினாயகர் ஆலயத்தில் இருந்து பம்பை, மேளதாளத்துடன் பக்தர்கள் 208 பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலைக் சென்றடைந்தது.

    அங்கு சாமிக்கு பால்அபிஷேகம், திரவிய அபிஷேகம், கலசஅபிஷேகம், ராஜ அலங்கார தரிசனம், மஹா தீபஆராதனை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஊர் கவுண்டர் தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்வாரிய பொறியாளர் சி. ரங்கநாதன், வாசுதேவன், டி பழனி, மோகன் குமார் பழனிச்சாமி உட்பட, நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோன்று திருப்பத்தூர் தண்டாயுதபாணி கோயில் பசலிகுட்டை முருகன் கோயில் ஜலகாம்பாறை வெற்றிவேல் ஆலயம், உள்ளிட்ட பகுதிகளில் தைப்பூச விழா வை ஒட்டி முருகன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் பக்தர்கள் பால்குட ஊர்வலம் மற்றும் காவடிகளை எடுத்து வந்தனர்.

      மானாமதுரை

      சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடைபெற்றது. மானாமதுரை புறவழிச் சாலையில் அமைந்துள்ள வழிவிடு முருகன் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

      மூலவர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிவிடு முருகனை தரிசனம் செய்தனர்.

      மானாமதுரை ெரயில் நிலையம் எதிரே உள்ள பூரண சக்கர விநாயகர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் நடந்த தைப்பூச விழாவில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்து பூஜை நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்தனர்.

      மானாமதுரை அருகே உள்ள கால்பிரவு கிராமத்தில் எழுந்தரு ளியுள்ள செல்வமுருகன் கோவி லில் நடந்த தைப்பூச விழாவில் வள்ளி, தெய்வானை சமேத செல்வ முருகனுக்கு 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வ முருகனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஏ.ஆர்.பி. முருகேசன் செய்திருந்தார்.

      மானாமதுரையில் தாய மங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மயூரநாதர் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.

      மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பாலமுருகன் கோவிலிலும் தைப்பூச விழா நடந்தது.

      இடைக்காடர் சித்தர்கோவிலில் பவுர்ணமி அன்னதான வழிபாட்டு குழுசார்பில் சிறப்பு யாகம், அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இரவு இடைக்காடர் சித்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.மதுரை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர் .

      கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி, கருப்பனேந்தல் மடம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி முதல்ஜீவ ஒடுக்கம் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது.

      இளையான்குடி ஒன்றியம் குறிச்சி வழிவிடு பெரியநாச்சி, காசி விசுவநாதர் கோவிலில் செந்திலாண்டவர் சன்னதியில் தைப்பூச விழா நடந்தது. செந்திலாண்டவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை நடைபெற்று தீபார தனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செந்திலாண்டவரை தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி எஸ். பி.தேவர் செய்திருந்தார்.

      வேதியேரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சமுக பிரத்யங்கிராதேவி கோவிலில் தங்ககவசம், பூஜை, திருவிளக்கு வழிபாடு நடந்தது. திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் நடந்த தைப்பூச விழாவில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.

      • அலங்காநல்லூர் அருகே தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்தனர்.
      • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

      அலங்காநல்லூர்

      அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்துமலை அடிவரத்தில் சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்தகோவிலின் 14-ம் ஆண்டு தைப்பூச உற்சவ விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக முருக பக்தர்கள் கொண்டையம்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் வேல்குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

      • சிறப்பு அபிஷேகம் நடந்தது
      • ஏராளமான பக்தர்கள் தரிசனம

      ஆற்காடு:

      ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சனிக்கி ழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

      இதையொட்டி, வள்ளி - தேவசேனா உட னுறை சுப்பிரமணிய சுவாமிக்கு வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. சுவாமிக்கு மகா தீபாராதனை நடை பெற்றது.

      தொடர்ந்து பகல் உச்சிகால பூஜையும், மாலையில் ஏக தின லட்சார்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

      இதில், உபயதாரர்கள், ரத்தினகிரி மற்றும் சுற் றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

      • தைப் பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
      • இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

      தாரமங்கலம்:

      தாரமங்கலம் கைலாச நாதர் கோவில் தைப் பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டளைதாரர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து 9-ந் தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்ற விழாவில் கோவில் தக்கார் திருஞன சம்பந்தர், கோவில் செயல் அலுவலர் புனித

      ராஜ், உமாபதி குருசாமி கள்,நான்கு கோடி மகா ஜனங்கள், மிராஸ்தா ரர்கள், கட்டளைதாரர்கள், கோவில் பணியாளர்கள், அனைத்து ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

      • கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
      • தேர்த் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

      இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வருகின்ற 5-ந் தேதி தைப்பூசத் திருநாளில் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் காவடி, பால் காவடி, இளநீர் காவடி, மயில் காவடிகளை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு செய்வார்கள்.

      மேலும் அன்று மாலை முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

      இதன்படி, இன்று காலை கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள நாதஸ்வர வாத்தியங்கள் ஒலிக்க கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்றத்தின் போது அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கொடி மரத்திற்கும், மூலவர் முருகப்பெருமானுக்கும் உற்சவமூர்த்தி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

      மேலும் தைப்பூசத்தையொட்டி தொடர்ந்து 9 நாட்களும், தினமும் இரவு உற்சவமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் அலங்காரம் செய்யப்பட்டு யானை வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்னப்பச்சி வாகனம், காமதேனு வாகனம் ஆகிய வாகனங்கள் மூலம் திருவீதி உலா நடைபெறும் என்று சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

      • மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி தைப்பூச விழாவை தொடங்கி வைத்தனர்.
      • இதனைத்தொடர்ந்து தேரோட்டம் வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி காலை 6.20 மணிக்கு நடக்கிறது.

      சென்னிமலை:

      சென்னிமலை மலை மேல் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர்க்கு தை பூச விழா வருடந்தோறும் மிக சிறப்பாக 15 நாட்கள் நடக்கும்.

      இந்த ஆண்டு விழாவை சம்பரதாய முறைப்படி செங்குந்த முதலியார் சமூகதத்தினை சேர்ந்த நாட்டமை, பெரிய தனகாரர்கள், பெரியவர்கள் முன் நின்று மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி தைப்பூச விழாவை தொடங்கி வைத்தனர்.

      சென்னிமலை மலை மீது நடக்கும் கொடியேற்ற த்திற்காக சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலலாச–நாதர் கோவிலில் இருந்து சாமி புறப்பாடு மற்றும் தீர்த்தக்கு டங்களுடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.

      பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சாமி மலை மீது படி வழியாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு விநாயகர்வழிபாடு, முளைப்பாரி பூஜைகள், காப்புகட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. அதை தொடர்ந்து மயூரயாகம் நடந்தது.

      அதன் பின்பு முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவர்க்கும் பல்வேறு நெய்வேத்திய பொருட்கள் மற்றும் பவானி கூடுதுறையில் இருந்து கொண்டு வந்த தீர்த்தங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.

      தலைமை குருக்கள் ஸ்ரீ ல ஸ்ரீ ராமநாதசிவம், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து சாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினர்.

      அதன் பின்பு மதியம் சேவல் கொடியை தாங்கி உரிய மேளதாளம் முழங்க கோவிலை வலம் வந்து முருகன் சன்னதி கொடி மரத்தில் சேவல் கொடியையும், சிவன் ஆலயம் முன்பு நந்தி கொடியையும் ஏற்றினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

      கொடியேற்ற விழாவில் முன்னாள் கோ–-ஆப்டெக்ஸ் இயக்குனர் மெய்யப்பன், எஸ்.ஏ.பி. டெக்ஸ் தலைவர் காவேரி ரங்கன், மெட்றோ சரவணன், எஸ்.ஏ.பி. டெக்ஸ் மேலாளர் சண்முகம், இந்திரா டெக்ஸ் மேலாளர் சுகுமார் ரவி, காங்காதரன், லேத் செந்தில், உள்பட ஊர் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

      இதனைத்தொடர்ந்து தேரோட்டம் வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி காலை 6.20 மணிக்கு நடக்கிறது. தை பூச விழாவின் முக்கிய விழாவான மகா தரிசனம் 9-ந் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

      அன்று சென்னிமலை நகரில் நடராஜப் பெருமா னும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கும்.

      இதில் முருகப் பெருமானை தரிசனம் செய்ய சென்னிமலை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

      ×