search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைப்பூச விழாவையொட்டி பறவை காவடி எடுத்த பக்தர்கள்
    X

    தைப்பூச விழாவையொட்டி பறவை காவடி எடுத்த பக்தர்கள்

    • அலங்காநல்லூர் அருகே தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்தனர்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்துமலை அடிவரத்தில் சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்தகோவிலின் 14-ம் ஆண்டு தைப்பூச உற்சவ விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு ஹோமங்கள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக முருக பக்தர்கள் கொண்டையம்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் வேல்குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×