என் மலர்
உள்ளூர் செய்திகள்

முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம்
- முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது
- கந்த சஷ்டியை முன்னிட்டு நடந்தது
கரூர்:
கந்த சஷ்டியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25 துவங்கி தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூர சம்கார நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. சஷ்டி விழாவின் தொடர்ச்சியாக கோவிலில் நேற்று காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






