search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother Suicide"

    கரூர் அருகே தண்ணீர் தொட்டியில் குழந்தையை அமுக்கி கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகள் மனோபிரியா (வயது 28). இவருக்கும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் செவந்தபாளையத்தை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோகிதா என்ற 11 மாத குழந்தை இருந்தது. மகேஷ் பெங்களூருவில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    மனோபிரியா தனது குழந்தையுடன் நாமக்கல்லில் உள்ள மாமனார் வீட்டில் இருந்து வந்தார். அப்போது தன்னையும், குழந்தையையும் பெங்களூருக்கு அழைத்து செல்லுங்கள் என கணவர் மகேஷிடம் போனில் மனோபிரியா அடிக்கடி கூறி வாக்குவாதம் செய்திருக்கிறார். எனினும் குழந்தை சற்று வளர்ந்ததும் கூட்டி செல்கிறேன் என மகேஷ் தெரிவித்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த மனோபிரியா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு தனது குழந்தையுடன் கரூர் மாவட்டம், சங்கரன்பாளையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். பின்னர் குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து அவர் பெற்றோரிடம் முறையிட்டார். அப்போது அவர்கள் தங்களது மகளுக்கு ஆறுதல் கூறினர். இந்த நிலையில் மனோபிரியா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென அங்கிருந்த சிமெண்டு தண்ணீர் தொட்டிக்குள் தனது குழந்தை மோகிதாவை அமுக்கி கொலை செய்தார். அதனை தொடர்ந்து அவர் வீட்டின் அறையில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்ததும், மனோபிரியா, அவரது கைக்குழந்தை மோகிதா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், மனோபிரியா, மோகிதா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு வரும்போதே விபரீத முடிவினை தேடிக்கொள்ளும் எண்ணத்திலேயே மனோபிரியா வந்தது தெரியவந்துள்ளது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனோபிரியா தற்கொலை செய்து கொண்டதால், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை மெரினாவில் குடும்ப தகராறு காரணமாக கடலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சேலம் அம்மாபேட்டை உடையார் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 54). இவர்களது மகன் சண்முகபிரியன் (25). இவர்களுக்குள் குடும்பத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு ரேவதியும், அவரது மகன் சண்முகபிரியனும் பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர். இன்று காலை அவர்கள் சென்னை வந்தனர்.

    பின்னர் அவர்கள் மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்குள்ள கல்லுக்குட்டை பகுதியில் கடலில் குதித்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒடிச் சென்று கடலில் குதித்த அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

    இதில் சண்முகபிரியனை போலீசார் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ரேவதியை கடல் அலை இழுத்து சென்றது. இதில் அவர் கடலில் மூழ்கி இறந்தார். போலீசார் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுக்கூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காடந்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி அபிநயா (வயது 26). இவர்களுடைய மகன் துரைமுருகன் (7), மகள் ஜெயவந்தினி (4). சரவணக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    துரைமுருகன், மற்றும் ஜெயவந்தினி ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரிகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அபிநயா மிகுந்த சிரமம் அடைந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அபிநயா, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனதை கல்லாக்கிக்கொண்டு வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து தனது மகன் துரைமுருகன், மகள் ஜெயவந்தினி ஆகியோருக்கு குடிப்பதற்காக கொடுத்தார்.

    வி‌ஷத்தை குடித்த துரைமுருகனும் ஜெயவந்தினியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதன் பின்னர் அபிநயாவும் வி‌ஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அபிநயாவும் அவருடைய மகன் துரைமுருகனும் பரிதாபமாக இறந்தனர். ஜெயவந்தினி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள்.

    இந்த நிலையில் அபிநயா வீட்டுக்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு பார்த்த காட்சியால் அதிர்ச்சியில் அடைந்தனர். அங்கு அபிநயாவும் அவரது மகன் துரைமுருகனும் பிணமாக கிடப்பதும், ஜெயவந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக ஜெயவந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே வயிற்று வலி காரணமாக 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம் காவல் சரகம் கத்தரிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ராதிகா (வயது 25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை, 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    ராதிகா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    நாகர்கோவிலில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி இந்துமதி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று அருண் காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வேலைக்கு சென்றார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்துமதியை பார்ப்பதற்காக அவரது தாயார் செல்வி வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இந்துமதி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் செல்வி, மகள் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் அவரது கணவர் மற்றும் நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி. ஜவகர், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்துமதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்துமதி தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஆறுகாணி கோவில்விளை பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மகன் சரத் (வயது 18). இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் அவர், மேல்படிப்பிற்கு பணம் இல்லை என சரத் கூறி வருத்தப்பட்டு வந்தார். நேற்று உறவினர் வீட்டில் படுக்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அப்போது அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆறுகாணி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறு காரணமாக 1½வயது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஊமையணூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலைராஜன் (வயது 32).

    இவருக்கும் செங்கான் கொட்டவூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 1½ வயதில் நித்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

    சோலைராஜன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் அங்கு குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

    பங்குனி உத்திர திருவிழாவிற்காக தனது மனைவி தீபா மற்றும் மகள் நித்யஸ்ரீ ஆகிய 2 பேரையும் செங்கன்கொட்டாவூர் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

    திருவிழாவிற்கு சென்ற தீபா நேற்று குடிசை வீட்டிற்குள் சென்று தனது குழந்தை நித்யஸ்ரீ மீதும், அவர் மீதும் மண்எண்ணை கேனை எடுத்து உடல் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில் தீ வீடு முழுவதும் பரவியதால் குடிசை வீடு தீப்பற்றி கொண்டது. அப்போது வீட்டிற்கு வெளியே இருந்த உறவினர்கள் திடீரென்று குடிசை வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். அங்கு தீபாவும், நித்யஸ்ரீயும் தீயில் கருகி அலறுவதை கண்டனர்.

    2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தாயும், மகளும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து சென்று தீபா, நித்யஸ்ரீ ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீபாவுக்கும், சோலைராஜனுக்கு இடையே குடும்பதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபா தனது குழந்தைக்கு தீவைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

    குடும்ப பிரச்சனை காரணமாக தீபா தனது குழந்தை மீது தீவைத்து கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிசை வீடு தீப்பிடித்து இருவரும் இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஒ. சரவணன் விசாரணை நடத்தி வருகின்றார். திருவிழாவிற்காக வந்த தீபா தனது குழந்தையை தீ வைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
    திருப்பத்தூர் அருகே குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கோணாப்பட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 39). இவரது மனைவி நீலா (33). இந்த தம்பதிக்கு பவதாரணி (5). என்ற மகள் இருந்தார்.

    உதயகுமார் பெங்களூருவில் சில ஆண்டாக கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த உதயகுமார் மீண்டும் வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். இதனால் தம்பதியடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனிடையே உதயகுமார் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறேன் அதற்கு ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது என நீலாவிடம் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய நீலா தனது பெயரில் இருந்த நிலத்தை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் ரூ.5 லட்சம் பணத்தை கணவரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட உதயகுமார் வெளிநாடு செல்வதாக கூறி பெங்களூருவுக்கு சென்று தங்கி விட்டார்.

    பெங்களூருவில் இருந்து உதயகுமார் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும் நல்ல சம்பவம் கிடைக்கிறது என்று கூறி அவ்வபோது நீலாவிடம் போன் செய்து பேசியுள்ளார். இனியும் கஷ்டபட தேவையில்லை என்று நிலா எண்ணி வந்தார்.

    இந்நிலையில் கணவர் வெளிநாடு செல்லவில்லை பெங்களூருவில் தான் உள்ளார் என்பது நீலாவிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலா தனது கணவரிடம் இது குறித்து கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நீலா நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தானும் வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை கண்ட உறவினர்கள் 2 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பவதாரணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    நீலாவிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு நீலா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீராம்பட்டினத்தில் மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    புதுவை வீராம்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேலு, மீனவர். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது33). இவர்களுக்கு  3 மகன்கள். இதில் மூத்த மகன் லோகேஷ் (வயது15) மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதற்கிடையே  ஞானவேலுவுக்கும் அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சினை  ஏற்பட்டு அடிக்கடி  தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று அதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சீதாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள  முடிவு செய்தார்.  தான் இறந்து விட்டால்  மனநிலை பாதிக்கப்பட்ட மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என கருதிய சீதாலட்சுமி  மகனை கொன்று விட்டு  தானும் தற்கொலை  செய்து கொள்ள  எண்ணினார். சம்பவத்தன்று உணவில் எலிமருந்தை (விஷம்)  கலந்து லோகேஷ்க்கு கொடுத்து விட்டு மீதி இருந்த எலி மருந்தை சீதாலட்சுமி குடித்து விட்டார்.

    இதில் மயங்கி கிடந்த மனைவி மற்றும் மகனை ஞானவேலு மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர அளித்தும் பலனின்றி தாய்-மகன்  இருவரும் நேற்று மாலை இறந்து போனார்கள். 

    இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகிறார்.  இந்த சம்பவம்  வீராம்பட்டினம் பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    வேப்பம்பட்டு அருகே குழந்தை இறந்த சோகத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு ஆர்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கார்த்திக். வெல்டர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    ஆனால் பிறந்த 7 நாட்களில் குழந்தை இறந்து விட்டது. இதனால் ரேவதி குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ரேவதிக்கு திருமணமாகி 2 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    கடலூர் அருகே மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த காரைக்காடு அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 45) தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(40). இவர்களது மகன் விக்னேஷ்(20). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இன்று காலை தனது தாய் ராஜலட்சுமியிடம் கல்லூரியில் தேர்வு எழுத பணம் கட்டவேண்டியுள்ளது. பணம் தருமாறு கேட்டுள்ளார். உடனே ராஜலட்சுமி ஏ.டி.எம்.கார்டை கொடுத்து அருகில் உள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.

    ஏ.டி.எம்.கார்டை பெற்றுக்கொண்ட விக்னேஷ் அங்குள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். ஆனால் ஏ.டி.எம்.மில் பணம் ஏதும் வரவில்லை. உடனே வீட்டுக்கு வந்து தனது தாயிடம் ஏ.டி.எம்.கார்டு மூலம் வரவில்லை என்று கூறினார்.

    அப்போது ராஜலட்சுமி வங்கி கணக்கில் ரூ.4 ஆயிரத்து 500 உள்ளது. ஏன்? பணம் வரவில்லை என்றார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார். கேப்பர் குவாரி ரெயில்நிலையம் அருகே இன்று காலை 8.40 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்தவழியாக மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே விக்னேஷ் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    விக்னேஷ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இந்த தகவல் அவரது தாய் ராஜலட்சுமிக்கும் தெரியவந்தது.

    மகன் ரெயில் முன் பாய்ந்து இறந்த தகவல் அறிந்ததும் அவர் கதறி அழுது துடித்தார். பின்னர் மனவேதனை அடைந்து வீட்டுக்குள் சென்றார். அங்கு அவர் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார்.

    இந்த தகவல் அறிந்ததும் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதேபோல ரெயிலில் அடிப்பட்டு இறந்த மாணவர் விக்னேஷ் உடலை கடலூர் ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலிடெக்னிக் மாணவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட சிவசங்கரி, எனது கணவர் பொறுமையானவர், அவரை அழ வைத்துவிட்டேன் என்று போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவசங்கரி தனது கணவர் மதிவாணன், போலீஸ் அதிகாரி, தாய் சுமதி, தங்கை ஆகிய 4 பேருக்கு உருக்கமான கடிதங்களை எழுதி உள்ளார்.

    போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், எனது கணவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். நான் எனது கணவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டேன்.

    எனது கணவர் பொறுமையானவர். நல்லவர். நான் அவரை அழவைத்து விட்டேன். நான் எனது 2 மகன்களையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டேன். இதற்கு நானே காரணம். எங்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படியே எனது கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதேபோல் மற்றவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதங்களை சிவப்பு மையால் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் மகன்களை கொன்று தற்கொலை செய்ததற்கான காரணங்களை சிவசங்கரி குறிப்பிடவில்லை.

    2 மகன்களை சிவகங்கரி வி‌ஷம் கொடுத்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் பாதிரிக்குப்பத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பம் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 48). இவர் கூத்தப்பாக்கத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35).

    இவர்களுக்கு பாவேஷ் கண்ணா (12), ரபிஷ் கண்ணா (8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். அங்குள்ள தனியார் பள்ளியில் பாவேஷ் கண்ணா 7-ம் வகுப்பும், ரபிஷ்கண்ணா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சிவசங்கரி வீட்டில் தனது மகன்களுடன் இருந்தார். திடீரென்று அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகன்களை யார் காப்பாற்றுவார்கள்? என்று எண்ணினார்.

    பின்னர் அவர் குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அதனை தொடர்ந்து தனது மனதை கல்லாக்கி கொண்டு மகன்களை கொல்ல முடிவு செய்தார்.

    பின்னர் அவர் தனது மகன்களை முத்தமிட்டு கொஞ்சினார். அதன் பின்னர் 2 மகன்களையும் கொன்றார். மகன்கள் இறந்ததை அறிந்ததும் அவர்களது உடல்களை சுற்றி பூக்களை தூவி கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் சிவசங்கரியும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மெடிக்கல் ஸ்டோரை பூட்டி விட்டு மதிவாணன் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    கதவை தட்டிப் பார்த்தார் இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் சிவகங்கரி போனை எடுக்கவில்லை.

    உடனே பதறிபோன மதிவாணன் தனது நண்பரை அழைத்தார். அவர் வந்தவுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    வீட்டில் உள்ள ஒரு அறையில் சிவசங்கரி தூக்கில் பிணமாக தொங்கினார். அவருக்கு கீழே மகன்கள் பாவேஷ்கண்ணா, ரபிஷ்கண்ணா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து மதிவாணன் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து மதிவாணன் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மதிவாணன் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலை செய்து கொண்ட சிவகங்கரி தனது கணவர் உள்பட 4 பேருக்கு கடிதங்கள் எழுதி வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் சிவகங்கரி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது பற்றி உருக்கமாக கூறியுள்ளார்.

    அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×