search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mentally"

    • மதுரையில் அனாதையான மனநலம் பாதித்த பெண்ணுக்கு கலெக்டர் உதவி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அமுதா படுக்கை அறை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை

    மதுரை உலகநேரி, அம்பலகாரன் பட்டியை சேர்ந்தவர் முருகன் (62). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் மூத்த மகள் சிவரஞ்சனி, இளைய மகள் அமுதா (24) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    இவர்களில் மூத்த மகள் சிவரஞ்சனி, மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரை குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். முருகனின் மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். முருகன் இளைய மகள் அமுதா உதவியுடன் சிவரஞ்சனியை பராமரித்து வந்தார்.

    முருகன் கடந்த 31-ந் தேதி நண்பருடன் மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டிக்கு சென்றார். அங்கு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, முருகன் கடந்த 2-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.

    தாய் மாரடைப்பில் இறந்த நிலையில் தந்தையும் விபத்தில் பலியான சம்பவம் அமுதா, சிவரஞ்சனியை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அமுதா தந்தையின் உடலை வாங்குவதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கிடங்குக்கு வந்திருந்தார். உசிலம்பட்டி போலீசார் உரிய நேரத்துக்கு வராததால், பிரேத பரிசோதனை வேறு ஒரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அமுதா மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி சிவரஞ்சனியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார். 'தாயும் இறந்து தந்தையும் பலியான நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியை எப்படி பராமரிக்க போகிறோம்? என்று அமுதா கண்ணீர் வடித்தார்.

    அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அமுதா படுக்கை அறை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து சிவரஞ்சனி அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக ராமநாதபுரத்தில் வசிக்கும் அத்தை ஞானாம்பாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே அமுதாவுக்கு பிரேத பரிசோதனை முடிந்து தத்தனேரி சுடுகாட்டில் இறுதி சடங்கு முடிந்தது. மதுரை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கில், முருகனின் உடலுக்கு இன்று பிரத பரிசோதனை நடத்தப்படுகிறது.

    விபத்தில் தந்தை இறந்தது, தங்கை தற்கொலை செய்தது பற்றி எதுவும் தெரியாமல், சிவரஞ்சனி ஆஸ்பத்திரி வாசலில் சிரித்தபடி நின்று கொண்டு இருந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவரை திருவாதவூர் மனநல காப்பகத்தில் சேர்க்கும் பணியை, சமூக சேவகர் நேதாஜி ஹரி கிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார்.

    மதுரையில் ஒட்டு மொத்த குடும்பமும் இறந்த நிலையில் அனாதையாக நிற்கும் மனநலம் பாதித்த சிவரஞ்சனியை அனாதை இல்லத்தில் சேர்க்கும் விஷயத்தில், கலெக்டர் அனீஷ்சேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுக்கூர் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள காடந்தங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார். இவருடைய மனைவி அபிநயா (வயது 26). இவர்களுடைய மகன் துரைமுருகன் (7), மகள் ஜெயவந்தினி (4). சரவணக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    துரைமுருகன், மற்றும் ஜெயவந்தினி ஆகியோர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரிகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும் வைத்துக்கொண்டு அபிநயா மிகுந்த சிரமம் அடைந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அபிநயா, 2 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனதை கல்லாக்கிக்கொண்டு வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து தனது மகன் துரைமுருகன், மகள் ஜெயவந்தினி ஆகியோருக்கு குடிப்பதற்காக கொடுத்தார்.

    வி‌ஷத்தை குடித்த துரைமுருகனும் ஜெயவந்தினியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதன் பின்னர் அபிநயாவும் வி‌ஷத்தை குடித்து விட்டு மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அபிநயாவும் அவருடைய மகன் துரைமுருகனும் பரிதாபமாக இறந்தனர். ஜெயவந்தினி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தாள்.

    இந்த நிலையில் அபிநயா வீட்டுக்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு பார்த்த காட்சியால் அதிர்ச்சியில் அடைந்தனர். அங்கு அபிநயாவும் அவரது மகன் துரைமுருகனும் பிணமாக கிடப்பதும், ஜெயவந்தினி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக ஜெயவந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதவி வெறியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். #dinakaran #OPanneerselvam

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘ முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தினகரன் முதல்வராக சதி செய்தார். என்று கூறினார்.

    தினகரனின் சொந்த ஊரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தஞ்சையில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அவர் பேசுவது எல்லாம் உண்மையல்ல என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். பதவி வெறியில் இவ்வாறு பேசுகிறார்.

    தி,மு.க.வுடன் கைக் கோர்த்து கொண்டே இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். பின்னர் டெல்லியில் இருந்து உத்தரவு வந்தவுடன் இந்த ஊழல் ஆட்சியுடன் சேர்ந்து கொண்டு ‘துணை முதல்வர்’ பதவியை வகிக்கிறார். அவரது நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. என்னை சதி செய்தார் என்று கூறுகிறார். இதை யாரும் நம்ப மாட்டார்கள். அவரது மனைவி கூட நம்ப மாட்டார். ஓ.பி.எஸ். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்னை தெரியும். விரக்தியில் உள்ள ஓ.பி.எஸ். மனநிலை பாதித்தவர் போல் பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் குறுக்கிட்டு, ‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி முக்கொம்பு அணையை பார்வையிடும் நேரத்தில் நீங்களும் சுற்றுப்பயணம் செல்கிறீர்களே? என்றனர்.

    இதற்கு தினகரன் பதிலளித்து பேசும் போது, ஸ்டாலின் சுற்றுப்பயணம் பற்றி எனக்கு தெரியாது. கடைமடை பகுதிவரை தண்ணீர் இல்லாததால் ஆகஸ்ட் 19-ந் தேதி நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து விட்டோம். அதன்படி இன்று மாலை நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கடைமடைக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தூர்வாரும் பணியில் சுமார் ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    காவிரி வெற்றி விழா பொதுக்கூட்டம் என்று கூத்து நடத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது மாநில பொருளாளர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #dinakaran #OPanneerselvam

    ×