என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "food poisoning"
- உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா:
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம், கீழ்வைப்பூர் அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் ஞானஸ்நான நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், ஏராளமானோ கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்று உணவு வினியோகம் செய்துள்ளது. அந்த உணவை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 100 நபர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை கேட்டரிங் நிறுவனத்தினர் மறுத்துள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருமலா பகுதியில் அதே நாளில் வேறு இரண்டு இடங்களில் உணவு வழங்கியதாகவும், இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் கேட்டரிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மானே என்பவரின் வீட்டு கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
முதல் சுற்று உணவு பரிமாறி முடிந்ததும், உணவு சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மருத்துவமனைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 3 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டதா? அல்லது வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #FoodPoisoningDeath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்