search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அருகே ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் சாவு- அதிர்ச்சியில் தாயார் தற்கொலை
    X

    கடலூர் அருகே ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் சாவு- அதிர்ச்சியில் தாயார் தற்கொலை

    கடலூர் அருகே மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த காரைக்காடு அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 45) தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(40). இவர்களது மகன் விக்னேஷ்(20). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இன்று காலை தனது தாய் ராஜலட்சுமியிடம் கல்லூரியில் தேர்வு எழுத பணம் கட்டவேண்டியுள்ளது. பணம் தருமாறு கேட்டுள்ளார். உடனே ராஜலட்சுமி ஏ.டி.எம்.கார்டை கொடுத்து அருகில் உள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.

    ஏ.டி.எம்.கார்டை பெற்றுக்கொண்ட விக்னேஷ் அங்குள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். ஆனால் ஏ.டி.எம்.மில் பணம் ஏதும் வரவில்லை. உடனே வீட்டுக்கு வந்து தனது தாயிடம் ஏ.டி.எம்.கார்டு மூலம் வரவில்லை என்று கூறினார்.

    அப்போது ராஜலட்சுமி வங்கி கணக்கில் ரூ.4 ஆயிரத்து 500 உள்ளது. ஏன்? பணம் வரவில்லை என்றார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார். கேப்பர் குவாரி ரெயில்நிலையம் அருகே இன்று காலை 8.40 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்தவழியாக மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே விக்னேஷ் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    விக்னேஷ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இந்த தகவல் அவரது தாய் ராஜலட்சுமிக்கும் தெரியவந்தது.

    மகன் ரெயில் முன் பாய்ந்து இறந்த தகவல் அறிந்ததும் அவர் கதறி அழுது துடித்தார். பின்னர் மனவேதனை அடைந்து வீட்டுக்குள் சென்றார். அங்கு அவர் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார்.

    இந்த தகவல் அறிந்ததும் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதேபோல ரெயிலில் அடிப்பட்டு இறந்த மாணவர் விக்னேஷ் உடலை கடலூர் ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலிடெக்னிக் மாணவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×