search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polytechnic student suicide"

    கடலூர் அருகே மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த காரைக்காடு அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன்(வயது 45) தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(40). இவர்களது மகன் விக்னேஷ்(20). இவர் கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இன்று காலை தனது தாய் ராஜலட்சுமியிடம் கல்லூரியில் தேர்வு எழுத பணம் கட்டவேண்டியுள்ளது. பணம் தருமாறு கேட்டுள்ளார். உடனே ராஜலட்சுமி ஏ.டி.எம்.கார்டை கொடுத்து அருகில் உள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.

    ஏ.டி.எம்.கார்டை பெற்றுக்கொண்ட விக்னேஷ் அங்குள்ள ஏ.டி.எம்.மையத்துக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். ஆனால் ஏ.டி.எம்.மில் பணம் ஏதும் வரவில்லை. உடனே வீட்டுக்கு வந்து தனது தாயிடம் ஏ.டி.எம்.கார்டு மூலம் வரவில்லை என்று கூறினார்.

    அப்போது ராஜலட்சுமி வங்கி கணக்கில் ரூ.4 ஆயிரத்து 500 உள்ளது. ஏன்? பணம் வரவில்லை என்றார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார். கேப்பர் குவாரி ரெயில்நிலையம் அருகே இன்று காலை 8.40 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்தவழியாக மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே விக்னேஷ் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    விக்னேஷ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இந்த தகவல் அவரது தாய் ராஜலட்சுமிக்கும் தெரியவந்தது.

    மகன் ரெயில் முன் பாய்ந்து இறந்த தகவல் அறிந்ததும் அவர் கதறி அழுது துடித்தார். பின்னர் மனவேதனை அடைந்து வீட்டுக்குள் சென்றார். அங்கு அவர் தூக்குபோட்டு தற்கொலை கொண்டார்.

    இந்த தகவல் அறிந்ததும் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அதேபோல ரெயிலில் அடிப்பட்டு இறந்த மாணவர் விக்னேஷ் உடலை கடலூர் ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலிடெக்னிக் மாணவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    பொள்ளாச்சியில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    பொள்ளாச்சி பொங்காளியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அருண்குமார் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

    இந்த நிலையில் அருண்குமார் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்குமார் வி‌ஷத்தை குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அருண்குமார் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவையில் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பிச்சைவீரன்பேட் வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது46). தச்சு தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுடைய மகள் நந்தினி. (வயது21). இவர் புதுவை அடுத்த கெங்கராம்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது தந்தை ஜெயவேலு தினமும் மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் இதேபோல ஜெயவேலு குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை கவனித்த வந்த நந்தினி தந்தையை திட்டினார்.

    இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த நந்தினி வீட்டில் இருந்த (எலிபேஸ்ட்) வி‌ஷத்தை சாப்பிட்டு விட்டார். இதனால் மயங்கி விழுந்த நந்தினியை அவரது பெற்றோர் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து ஜெயவேலு ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாஸ்பேட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை குறிஞ்சிநகரை சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி. இவர்களது மூத்த மகன் அரவிந்த் (வயது22). இவர் லாஸ்பேட்டை மோதிலால்நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு மனஅழுத்தம் நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் அரவிந்த் தங்கி இருந்த அறை கதவு வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த மலர்விழி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது அரவிந்த் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அரவிந்தை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வகுப்பறையில் அனைவரின் முன்பும் பேராசிரியர் கன்னத்தில் அறைந்ததால் மனமுடைந்த பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள ஆதனக் குறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தட்சிணாமூர்த்தி (வயது 18). இவர் கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 6-ந்தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். திருமணத்தில் பங்கேற்று விட்டு 7-ந்தேதி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர் பெற்றோருக்கு போன் எதுவும் பண்ணவில்லை. பெற்றோர் தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. 

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொழுதூர் கல்லூரிக்கு சென்று பார்த்த போது அங்கும் தட்சிணா மூர்த்தியை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணாடம் பஸ் நிலையத்தில் தட்சிணா மூர்த்தி நிற்பது தெரியவந்தது. அங்கு சென்ற உறவினர்கள் அவரை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து சென்றனர். 

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தட்சிணாமூர்த்தி திடீரென விஷம் குடித்து விட்டார். உயிருக்கு   போராடிய அவரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தட்சிணாமூர்த்தி இறந்தார்.
     
    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி தளவாய் போலீசில் புகார் செய்தார். புகாரில், கல்லூரி பேராசிரியர் தாக்கியதால் தட்சிணா மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7-ந்தேதி கல்லூரிக்கு சென்ற தட்சிணாமூர்த்தியிடம் அக்கல்லூரி பேராசிரியர் ஒருவர்  6-ந் தேதி ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளதோடு, கன்னத்தில் மாறி மாறி அறைந்ததாக கூறப்படுகிறது. மற்ற மாணவர்கள் மத்தியில் தன்னை அடித்ததால் மனமுடைந்து தட்சிணாமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக என கூறப்படுகிறது. 

    இந்த காரணத்திற்காகத் தான் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×