search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "exam failure"

    • அமைச்சர் பொன்முடி பேட்டி : மாணவர்கள் தேர்வு தோல்வி பற்றி பயப்பட தேவை இல்லை - நேரில் சந்தித்து ஆறுதல்
    • மாணவர்கள் தேர்வு தோல்வி பற்றி பயப்பட தேவையில்லை. தோல்விதான் வெற்றிக்கான முதல் படியாகும் .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வெளியான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில்தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் 5பேர் தற்கொலைக்கு முயன்றனர்.இவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உடனடி மறு தேர்வு எழுதிஉயர்கல்வியை தொடரலாம் என மாணவ,மாணவிகளுக்கு நம்பிக்கையளித்து பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் தேர்வு தோல்வி பற்றி பயப்பட தேவையில்லை. தோல்விதான் வெற்றிக்கான முதல் படியாகும் . இம் மாத இறுதியில் மறுதேர்வு தேதி அறிவிக்கப்படும் .அடுத்தமாதம் நடைபெறும் தேர்விற்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டிலேயே தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியில் சேரலாம். வரும் ஆகஸ்ட் மாதம் வரை உயர்கல்வியில் சேர அரசு அனைத்து கல்லுாரிகளுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்டகலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்எல்.ஏ.க்கள்புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்ஜெயச்சந்திரன், தாசில்தார்கள் இளவரசன், ஆனந்தகுமார், துணை முதல்வர் சங்கீதா, நிலையமருத்துவ அலுவலர், சாந்தி , உதவி நிலையமருத்துவ அலுவலர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை ,பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம்,துணை தலைவர் பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை ,வேம்பி ரவி, நகர செயலாளர் நைனா முகமது , ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முரளி, எத்திராசன்உட்பட கட்சியினர் பலர் பங்கேற்றனர் .

    பொள்ளாச்சியில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    பொள்ளாச்சி பொங்காளியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அருண்குமார் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

    இந்த நிலையில் அருண்குமார் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்குமார் வி‌ஷத்தை குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அருண்குமார் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரீட்சையில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை பெருங்குடி அருகில் உள்ள வளையங்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வய27). டிப்ளமோ பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    இதற்கான தேர்வில் அவர் ஒரு சில பரீட்சையில் தேர்ச்சி அடையவில்லை. இருந்தபோதிலும் கார்த்திக் தொடர்ந்து 3 தடவைகள் ‘அரியர்ஸ்’ தேர்வு எழுதினார். ஆனாலும் தேர்ச்சி பெறமுடியவில்லை.

    இதனால் விரக்தி அடைந்த கார்த்திக் நேற்று காலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக கார்த்திக் சகோதரர் பால்பாண்டி பெருங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செண் பகவேலன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள மலைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (36). இவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் வைரமுத்து நேற்று இரவு வீட்டின் சமையல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக வைரமுத்துவின் தாய் சரஸ்வதி ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆவுடையார்கோவில் அருகே கல்லூரி தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அம்பாள்புரத்தை  சேர்ந்தவர் பழனிவேலு மகள் துர்கா (வயது 22). இவர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் பாடத்தில் படித்து கடந்த சில மாதங்களுக்கு முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து துர்காவின் செல்போனுக்கு தேர்வு முடிவு வந்துள்ளது. இதில் துர்கா தேர்வில் தோல்வி அடைந்ததாக முடிவு வந்துள்ளது.

    இதைப்பார்த்து விரக்தி அடைந்த துர்கா நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு    மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    பின்னர் அவர் மேல்சிகிச் சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.  

    தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    கீரனூர் அருகே தேர்வு தோல்வி பயத்தால் 10-ம் வகுப்பு மாணவி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த கோட்ரப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த லாவண்யா திடீரென மாயமானார். அதிகாலையில் எழுந்த அவரது பெற்றோர்கள் மகள் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் லாவண்யா குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இது குறித்து கீரனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கடந்த 23-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே தேர்வில் தோல்வியுற்றால் பெற்றோர்கள் திட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் மாணவி லாவண்யா வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் மாணவியை யாரும் கடத்தி சென்றனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×