என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி தீக்குளித்து தற்கொலை"

    ஆவுடையார்கோவில் அருகே கல்லூரி தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அம்பாள்புரத்தை  சேர்ந்தவர் பழனிவேலு மகள் துர்கா (வயது 22). இவர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் பாடத்தில் படித்து கடந்த சில மாதங்களுக்கு முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து துர்காவின் செல்போனுக்கு தேர்வு முடிவு வந்துள்ளது. இதில் துர்கா தேர்வில் தோல்வி அடைந்ததாக முடிவு வந்துள்ளது.

    இதைப்பார்த்து விரக்தி அடைந்த துர்கா நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு    மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    பின்னர் அவர் மேல்சிகிச் சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.  

    தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    கொரடாச்சேரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகள் பவித்ரா. இவர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி செல்ல இருந்தார். அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதுபற்றி தெரியவந்ததும் தமிழரசன், பவித்ராவை கண்டித்துள்ளார். 

    இதில் மனமுடைந்த பவித்ரா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×