என் மலர்

    நீங்கள் தேடியது "keeranur"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கீரனூர் அருகே காட்டுக்குள் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணம் கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகேயுள்ள உச்சாணி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான உசிலமரக்காடு உள்ளது. இந்த காட்டில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக கண்ணங்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. 

    அவரது புகாரின் பேரில் உடையானிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த், கீரனூர் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் ஆகியோர் சம்பவம் நடந்த காட்டு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். 

    அங்கு சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் தான் அணிந்திருந்த ஊதா நிற வேட்டியால் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கீரனூர் அருகே தேர்வு தோல்வி பயத்தால் 10-ம் வகுப்பு மாணவி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த கோட்ரப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த லாவண்யா திடீரென மாயமானார். அதிகாலையில் எழுந்த அவரது பெற்றோர்கள் மகள் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் லாவண்யா குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இது குறித்து கீரனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கடந்த 23-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே தேர்வில் தோல்வியுற்றால் பெற்றோர்கள் திட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் மாணவி லாவண்யா வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் மாணவியை யாரும் கடத்தி சென்றனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கீரனூரில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
    கீரனூர்:

    திருச்சி மறை மாவட்டம்  கீரனூர் மறை வட்டத்தில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. 

    தமிழக ஆயர் பேரவையின் தலைவரும், மதுரை உயர் மாவட்ட பேராயருமான டாக்டர் அந்தோணி பாப்புசாமி ஆலயத்தை திறந்து வைத்து புனித நீரால் ஆசீர்வதித்தார். அதன்பின் பங்கு மக்கள் ஆலயத்திற்குள் நுழைந்தனர். பின்னர் திருப்பலி நடந்தது. 

    நிகழ்ச்சியில் திருச்சிமறை மாவட்ட முதன்மை குரு யுஜின் அடிகளார் மற்றும் பல குருக்கள், கன்னியாஸ்திரியர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை, மறை மாவட்ட அதிபர் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர். 
    ×