search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money laundering"

    • வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த கணவர்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    விருதுநகர்

    வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (37). இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தும்பக்குளத்தை சேர்ந்த அழகர்சாமி கூறியுள்ளார். இதனை நம்பி வினோத் குமார் என்பவரின் வங்கி கணக்கில் கண்ணன் பணம் செலுத்தினார். அதன்பின் கண்ணன் கம்போடியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய கண்ணன் பணத்தை திருப்பி தருமாறு அழகர்சாமியிடம் கேட்டார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி அருணா, வினோத்குமார், சாந்தி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி அழகர்சாமி, அவரது மனைவி உள்பட 4 பேர் மீது கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • செல்போனுக்கு வந்த டெலிகிராம் குறுந்தகவலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்துள்ளது.
    • இதை உண்மை என்று நம்பிய அமுதா பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுந்தகுமார். இவரது மனைவி அமுதா வயது 41 இவரது செல்போனுக்கு வந்த டெலிகிராம் குறுந்தகவலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்துள்ளது.இதை உண்மை என்று நம்பிய அமுதா அந்தக் குறுந்தகவலில் வந்த செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது அதில் பேசிய மர்ம நபர் ரூ.7,32,399 பணத்தை அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தினால் கார் உடனடியாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அமுதா பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.அதன் பின்னர் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமுதா இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி ராஜமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மகன் பிரசாத் வயது 24 இவரது செல்போனில் வந்த குறுந்தகவலில் அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதைக் கண்ட பிரசாத் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது அவர்கள் பணம் கட்டி சில நிபந்தனைகளை செய்யச் சொல்லி உள்ளனர். இதை உண்மை என்று நம்பிய பிரசாத் அவர்கள் கூறியபடி ரூ.50000 பணத்தைக் கட்டி அவர்கள் கூறிய நிபந்தனைகளை செய்து முடித்து உள்ளார்.அதன் பின்னர் பணம் தனது வங்கிக் கணக்கு திரும்ப வந்துவிடும் என்று அவர்கள் கூறியதை நம்பி காத்திருந்தார். ஆனால் அந்த மர்ம நபர்கள் கூறியபடி பணமும் வரவில்லை வேலையும் வரவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசாத் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர்.
    • இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவர்ச்சி திட்டம்

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இந்த தம்பதி கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் மோகன்ராஜ் -செந்தமிழ்செல்வி இறந்த நிலையில் அவரது மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தை கவனித்து வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சவுந்தர்யா - தமிழ்கண்ணன் தம்பதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் திருச்செங்கோடு கச்சேரி சாலை அருளகம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 79). இவரது மனைவி செல்லம்மை (75).

    இந்த தம்பதியின் மகன் அருணாச்சலம்(45), மருமகள் சொர்ணமாலா (38) மற்றும் சோமசுந்தரத்தின் மகள்கள் காந்திமதி (54) , வள்ளியம்மை (50) ஆகிய 6 பேர் வீட்டில் சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி பணம் பெற்றுள்ளனர்.

    இது குறித்து அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி துர்காதேவி (43) நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதே போல் மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தை கவனித்து வந்த அவர்கள் 6 பேர் மீதும் ேமாசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தகவல் தெரிவிக்கலாம்

    இந்த 2 நிதி நிறுவனங்களிலும் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிடையாக வந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், அதில் கூறியுள்ளார்.

    • முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார்.
    • ஏமாற்றமடைந்த ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 41). பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசுத்துறை தொடர்பு பிரிவு செயலாளரான இவர் ஜவுளி வியாபாரமும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதன் மூலம் அவர் ஏராளமான சொத்துக் களை வாங்கி குவித்துள்ளார்.

    இந்நிலையில் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவரை சந்தித்தார். இவரும் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார். அவர் மூலம் ஏராளமான நிலங்களை விற்பனை செய்துள்ளார்.

    இதற்கிடையே ஈஸ்வரனிடமும் எதிர்காலத்தில் நல்ல விலைக்கு போகும் ஒரு இடம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். அதனை வாங்கிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார். அதனை நம்பிய ஈஸ்வரன், சத்தியராஜிடம் இரண்டு தவணைகளாக ரூ.51 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சத்தியராஜ் கூறியபடி நிலம் எதுவும் வாங்கித் தரவில்லை.

    நண்பர் என்பதால் சில காலம் பொறுத்திருந்தார். இருந்தபோதிலும் பணத்தையும் திருப்பிச் செலுத்த மறுத்ததோடு ஈஸ்வரனுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் போலீசார் சத்தியராஜ் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். நில மோசடியில் பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நண்பர் ஜான் மரியா என்பவர் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
    • 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்தை அவர் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

    சேலம்:

    சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் விஜய் வெங்கடேஷ். இவரது நண்பர் ஜான் மரியா என்பவர் மூலம், கர்நாடக மாநிலம் பெங்களூர் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

    மேலும், பரத்வாஜ் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பன்மடங்காக திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் வெங்கடேஷ், கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 60 லட்சத்தை அவர் கூறிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

    ஆனால் பரத்வாஜ் கூறியபடி எந்த ஒரு தொகையும் கூடுதலாக கிடைக்காததால், தான் கட்டிய பணத்தை விஜய்வெங்கடேஷ் திரும்ப கேட்டபோது தர மறுத்துள்ளார்.

    இதையடுத்து விஜய் வெங்கடேஷ் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் போலீசார் பெங்களூருவை சேர்ந்த பரத்வாஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரகாசம் பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 50) இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாய பன்னீர்செல்வம் (44) என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1லட்சத்து 25ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.

    இந்நிலையில் பணம் கொடுத்த சகாய பன்னீர்செல்வம் அத்திப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பிரகாசத்திடம் பணத்தைக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் சகாயபன்னீர் செல்வத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து சகாய பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண மோசடி வழக்கில் பா.ஜ.க. தலைவர் கைது நடவடிக்கையில் தாமதம் ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
    • கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பா.ஜ.க. துணை தலைவர் பாண்டி யன். கடந்த 2017-ம் ஆண்டு இவரது 2 மகன்க ளுக்கு கப்பல் துறை முகத்திலும், ரெயில் வேயிலும் அரசு வேலை வாங்கி தருவதாக திருத்தங்கல்லை சேர்ந்த பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் ஆசை வார்த்தை கூறி யுள்ளனர்.

    இதனை நம்பிய பாண்டியன் 2 பேரிடமும் பல்வேறு தவணைகளில்

    ரூ.11 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் வேலை யும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பாண்டியன் இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் சுரேஷ்குமாரும், கலைய ரசனும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொடுத்தனர். மீதமுள்ள பணத்திற்கு காசோலையை கொடுத்தனர். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் பண மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரையும், கலையரசனையும் கைது செய்தனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டில் சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். அதனை விசா ரித்து ஐகோர்ட்டு ஜாமீன் பெறுவதற்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டு மென உத்தரவிட்டது. அதற்கு கால அவகாசமும் தரப்பட்டது. ஆனால் சுரேஷ்குமார் டெபாசிட் பணத்தை செலுத்தவில்லை.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி மீண்டும் சுரேஷ்குமார் கோர்ட்டில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை உடனே வாபஸ் பெற்றார்.

    இதனைத்தொடர்ந்து சுரேஷ்குமார் கால அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் தொகையை செலுத்த 2 வார காலம் அவகாசம் அளிப்பதாகவும், அப்போதும் டெபாசிட் செய்யாதபட்சத்தில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு திரும்ப பெற்றதாக கருதப்படும் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் 2 வார காலம் முடிந்த பின்பும் சுரேஷ்குமார் டெபாசிட் தொகையை செலுத்த வில்லை. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.

    பண மோசடி வழக்கில் சுரேஷ்குமார் ஜாமீன் பெறுவதற்கு மதுரை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து மனு செய்ததால் போலீசார் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த முறை கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றா ததால் சுரேஷ்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • வீட்டு உபயோக பொருட்கள் நிலையத்தில் போலியாக விற்பனை செய்து ரூ. 22 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இது சம்பந்தமாக 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ். காலனி ராம்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் அருள் ராயன் (வயது54). இவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவ னத்தில் அலங்காநல்லூர்-தனிச்சியம் மெயின்ரோடு அன்பரசு மகன் நேதாஜி (24), நரிமேடு சாலை முதலியார் தெரு மாரிமுத்து மகன் விஜயகுமார் (33), ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெரு, அருள் ஜோ (43) ஆகியோர் வேலை பார்த்தனர்.

    3 பேரும் கடையில் இருந்து போலியான ரசீதுகளை தயார் செய்து கடை பணம் ரூ.22 லட்சத்து 35 ஆயிரத்து 260-ஐ மோசடி செய்தது தெரியவந்தது.

    இந்த மோசடி குறித்து கடை உரிமையாளர் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நேதாஜி, விஜயகுமார், அருள்ஜோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த பெண் மீது புகார் கொடுக்கப்பட்டது.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெண்ணை வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சோைன மீனாநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி இந்திராணி(39). ஓட்டல் நடத்தி வருகிறார். திருமங்கலம் ஜாகீர்நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி நாகதுர்கா(36). இந்திராணியின் தோழியின் மூலமாக நாகதுர்காவுக்கு இந்திராணியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்வதை அறிந்த நாகதுர்கா, தான் திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக இந்திராணியிடம் கூறினார். இதனை நம்பி கடந்த ஆண்டு ரூ.4 லட்சத்தை நாகதுர்காவிடம், இந்திராணி கொடுத்தார். பணத்தை வாங்கி கொண்டு அரசு வேலை வாங்கி தராமல் இழுத்தடிக்கவே இந்திராணி பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு நாகதுர்கா மறுத்தார்.

    அதிர்ச்சியடைந்த இந்திராணி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்படி திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நாகதுர்காவை தேடி வருகின்றனர்.

    • அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
    • அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தைத் சேர்ந்த அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம் ஆனால் நாட்கள் ஓடியும் மீண்டும் பணம் தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். எனவே பிட் காயின் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சட்டவிரோதமாக பணம் புழக்கத்தில் ஈடுபடுகிறீர்கள் என்று கூறி ஞான பாக்கியராஜ் வைத்திருந்த ரூ.2.85 லட்சத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் காமராஜபுரம் 34-ம் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மகன் ஞான பாக்கியராஜ் (வயது 25). புதுக்கோட்டைைய பூர்வீகமாக கொண்ட தற்போது சிங்கப்பூரில் வசித்து வருபவர் ஷாஜகான். இவர் தமிழகம் முழுவதும் பலருக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார்.

    அவரிடம் ஞான பாக்கியராஜ் வேலை பார்த்து பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே தினமும் ஏராளமான பணத்தை ஞானபாக்கியராஜ் வசூல் செய்து வருவதை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு வந்துள்ளனர். அவரிடம் இருந்து பணம் பறிப்பதற்காக திட்டம் வகுத்தனர்.

    இந்த நிலையில் ஞானபாக்கியராஜ் நேற்று வழக்கம் போல் தேவகோட்டையில் பணத்தை கொடுத்து விட்டு, மேலும் பலரிடம் பணம் வசூல் செய்தார். அந்த பணத்துடன் அவர் புதுக்கோட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார். திருமயத்தை அடுத்த கொசப்பட்டி கண்மாய் அருகே வந்தபோது 2 பேர் அவரை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, நீங்கள் சட்டவிரோதமாக பணம் புழக்கத்தில் ஈடுபடுகிறீர்கள் என்று கூறி ஞான பாக்கியராஜ் வைத்திருந்த ரூ.2.85 லட்சத்தை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஞான பாக்கியராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குபதிவு செய்து விஜிலென்ஸ் அதிகாரிகள் என கூறி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • ஆண்கள், பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
    • திருச்சியை சேர்ந்த 2 நிறுவனங்கள் மூலம் மளிகை கடை, பிரியாணி கடை ,காய்கறி கடை ,பால்பண்ணை போன்றவற்றில் பங்குதாரர்களாக சேர்த்து இரட்டிப்பு பணம் தருவதாக கூறினார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த ஜெகஜீவன் ராம் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் எங்களை அணுகினர். அவர்கள் திருச்சியை சேர்ந்த 2 நிறுவனங்கள் மூலம் மளிகை கடை, பிரியாணி கடை ,காய்கறி கடை ,பால்பண்ணை போன்றவற்றில் பங்குதாரர்களாக சேர்த்து இரட்டிப்பு பணம் தருவதாக கூறினார்கள்.

    இதனை நம்பி மேற்கண்ட 2 பேரிடம் நாங்கள் 2019 முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 350 பேர் வரை ரூ.5 கோடி வரை பணம் கொடுத்துள்ளோம். ஆனால் பணத்தை தராமல் அவர்களது குடும்பத்தினர் பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். பணத்தை கேட்டால் எந்த பதிலும் கூறாமல் ஏமாற்றி வருகின்றனர். சுமார் ரூ. 5 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்தவர்களிடம் இருந்து எங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    ×