search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி விற்பனை"

    • வீட்டு உபயோக பொருட்கள் நிலையத்தில் போலியாக விற்பனை செய்து ரூ. 22 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இது சம்பந்தமாக 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ். காலனி ராம்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் அருள் ராயன் (வயது54). இவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவ னத்தில் அலங்காநல்லூர்-தனிச்சியம் மெயின்ரோடு அன்பரசு மகன் நேதாஜி (24), நரிமேடு சாலை முதலியார் தெரு மாரிமுத்து மகன் விஜயகுமார் (33), ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெரு, அருள் ஜோ (43) ஆகியோர் வேலை பார்த்தனர்.

    3 பேரும் கடையில் இருந்து போலியான ரசீதுகளை தயார் செய்து கடை பணம் ரூ.22 லட்சத்து 35 ஆயிரத்து 260-ஐ மோசடி செய்தது தெரியவந்தது.

    இந்த மோசடி குறித்து கடை உரிமையாளர் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நேதாஜி, விஜயகுமார், அருள்ஜோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    ×