search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி வியாபாரம்"

    • முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார்.
    • ஏமாற்றமடைந்த ஈஸ்வரன் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே உள்ள ஆலாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 41). பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட அரசுத்துறை தொடர்பு பிரிவு செயலாளரான இவர் ஜவுளி வியாபாரமும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இதன் மூலம் அவர் ஏராளமான சொத்துக் களை வாங்கி குவித்துள்ளார்.

    இந்நிலையில் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பவரை சந்தித்தார். இவரும் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். முதலில் நட்பாக பழகிய சத்யராஜ் காலப் போக்கில் தனது தொழிலுக்கு அவரை பயன்படுத்த தொடங்கினார். அவர் மூலம் ஏராளமான நிலங்களை விற்பனை செய்துள்ளார்.

    இதற்கிடையே ஈஸ்வரனிடமும் எதிர்காலத்தில் நல்ல விலைக்கு போகும் ஒரு இடம் தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார். அதனை வாங்கிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார். அதனை நம்பிய ஈஸ்வரன், சத்தியராஜிடம் இரண்டு தவணைகளாக ரூ.51 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சத்தியராஜ் கூறியபடி நிலம் எதுவும் வாங்கித் தரவில்லை.

    நண்பர் என்பதால் சில காலம் பொறுத்திருந்தார். இருந்தபோதிலும் பணத்தையும் திருப்பிச் செலுத்த மறுத்ததோடு ஈஸ்வரனுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் திருத்தங்கல் போலீசில் கடந்த மாதம் 30-ந்தேதி புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் போலீசார் சத்தியராஜ் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று அதிகாலை அவரை கைது செய்தனர். நில மோசடியில் பா.ஜ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலம் மாநகருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • பெரிய கடை முதல் சிறு, சிறு ஜவுளிக்கடைகளில் வியாபாரம்களை கட்டுகின்றன.

    சேலம்:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலம் மாநகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாலையோரம் தற்காலிக கடைகளும் அதிகளவில் முளைத்துள்ளன. இங்கு சேலை, சுடிதார், குழந்தைகளுக்கு தேவை யான துணிகள், பேண்ட், சட்டை, ஜீன்ஸ் போன்ற ஜவுளி வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கின்றன.

    பெரிய கடை முதல் சிறு, சிறு ஜவுளிக்கடைகளில் வியாபாரம் களை கட்டுகின்றன. இதேபோல் சேலம் மாநகரில் நேற்று கடைவீதியில் தீபாவளி வியாபாரம் படுஜோராக நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தினருடன் ஜவுளி எடுக்க சேலம் பழைய பஸ் நிலையம், கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள ஜவுளி கடைகளில் குவிந்தனர். சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதியிலும் அதிக ளவில் ஜவுளிக்கடை செயல்பட்டு வருவதால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்தது.

    இங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படு வதால் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை உஷார் படுத்தி வருகின்றனர்.

    இதுதவிர கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் போலீசார் தங்களது உடையில் சிறிய கேமிராவை பொருத்தி அதன்மூலம் திருடர்களை கண்காணிக்கின்றனர். தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,200 போலீசாரும், ஊர்க்காவல் படையினர் 150 பேரும் என மொத்தம் 1,350 பேர் ஈடுபட்டு உள்ளனர். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி பொதுமக்கள் இன்னும் அதிக அளவில் திரள வாய்ப்பு உள்ளதால் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர்கள் லாவன்யா, மாடசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ×