search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister"

    • மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ‘திடீர்’ ஆய்வு செய்தார்.
    • முன்பதிவு செய்துள்ள பயணிகளி டையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.

    மதுரை

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்போர் அவரவர் சொந்த ஊர்களுக்கும், பணிபுரியும் இடத்திற்கும் செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது.

    அதேவேளையில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தீபாவளியை கொண்டாட சொந்தஊர் சென்ற பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் ஊர் திரும்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்திய தோடு, அதனை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி யும் வருகிறார்.

    அந்த வகையில் மதுரை பைபாஸ் கிளை சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று பொது விடுமுறை என்பதால் ஏராளமானோர் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் குவியத் தொடங்கினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண் டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிக ளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். டிக்கெட் கட்டணம் குறித்த தகவல்களையும் அதிகாரிக ளிடம் கேட்டார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகம் மதுரை கோட்ட முன்பதிவு விசாரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய் தார்.

    மேலும் அனைத்து வழித்தடத்திலும் சிறப்பு பஸ்கள் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்பதிவு செய்துள்ள பயணிகளிடையே பஸ் வசதிகள் குறித்து கருத்துகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகா ரிகள் உடனிருந்தனர்.

    • நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழையால் பாதிக்கப்பட்ட மேல்பாரத் நகர் பகுதியை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக குன்னூர், கல்குழி மேல்பாரத் நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை சேதம் அடைந்துள்ளது.

    பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் உள்ள 8 குடும்பங்களைச் சேர்ந்த 23 நபர்கள் அருகில் உள்ள நிவாரண முகாமான மேல்பாரத் நகர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், மளிகை பொருட்களும், போர்வை, பெட்சீட் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் சார்பில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மழை காரணமாக மேல்பாரத் நகர் பகுதியில் சேதம் அடைந்த தடுப்புச்சுவர் மற்றும் நடை பாதை சீர் செய்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் ராமச்சந்திரன் நிவாரணமுகாமில் தங்கியுள்ள 5 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமார மங்கலம், ஆறுமுகம், வட்ட வழங்கல் அலுவலர் வசந்த்குமார், பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீசுன், துணை தலைவர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை கிழக்கு தொகுதியில் 78 புதிய சாலை அமைக்கும் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும்.
    • இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 1-வது மண்டல அலுவல கத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா,மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மாநக ராட்சி ஆணையாளர் மதுபாலன், உதவி கலெக்டர் சவுந்தர்யா, மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதி வாளர் குருமூர்த்தி, அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ. டாக்டர் சரவணன், டி.ஆர்.ஓ. சக்திவேல், மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், கவுன்சிலர்கள் ரோகினி பொம்மத்தேவன், செல்வ கணபதி, ராமமூர்த்தி, பால் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றுவதே இந்த அரசின் தலையாய கடமையாக இருக்கிறது. இந்த தொகுதியில் ஒரு கோடியே ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக 78 சாலைகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாள்களில் நடை பெறும். விடுபட்ட பகுதிகளில் 200 மீட்டர் பாதாள சாக்கடை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்தப் பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.

    எவ்வளவு கடன் சுமை இருந்தாலும் மக்கள் திட்டங்களை நிறைவேற்று வதில் மிகுந்த அக்கறை உள்ள அரசாக முதல்வர் மு. க. ஸ்டாலினின் அரசு இருக்கிறது.

    மேலமடை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப் பட்டு புதிய சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கிழக்கு தொகுதியில் உள்ள 7 கண்மாய்களில் நடை பாதை அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த பணிகளும் நடைபெற உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மக்களின் தேவையை அறிந்து பணி செய்ய வேண்டும். மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு தி.மு.க. பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், பகுதி செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் - கட்டனூர் சாலையில் இருஞ்சிறை விலக்கு பகுதியில் அமைந்துள்ள மறையூர் கழுங்கு பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர்.

    இதனை யடுத்து பொது மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக உயர் மட்ட பாலம் அமைக்க திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் மறையூர் - கட்டனூர் சாலையில் சுமார் ரூ.69 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த பால பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.

    இந்த ஆய்வின் போது நரிக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன், காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில்,ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி வளர்ச்சி ஆணையர், புதுடில்லி மற்றும் கைத்தறி ஆணையர் சென்னை ஆகியோர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகரில் இன்று (3-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை மாவட்ட அளவிலான 6-வது சிறப்பு கைத்தறி கண்காட்சி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு பின்புறம் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.

    கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

    கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த பெட்ஷீட்கள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், அசல்பட்டு, காட்டன் சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விற்பனைக்கு தமிழக அரசின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.150 வரை), பட்டு ரகங்களுக்கு ரூ.300-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. பட்டு ரகங்களுக்கு சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படுகின்றது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு துணிகள் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

    • தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருகிறது.
    • கழனிவாசல் பகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற் குட்பட்ட கழனிவாசல் பகுதி யில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கென அடிக்கல் விழா நடந்தது. காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த னர். அதனை தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் கழனிவாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி பேசிய தாவது:-

    முதலமைச்சரால் 2021-2022-ம் ஆண்டின் சட்டப்பேரவை நிதி அறிக்கையின் கீழ் மாநிலம் முழுவதும் விளையாட்டு திறனை விரிவு படுத்துகின்ற வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளி யிட்டார்கள். அதன்படி, முதற்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் இன்றைய தினம் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத் திற்குட் பட்ட கழனிவாசல் பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2½ ஆண்டுகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளார்கள். சொன் னதை செய்தது மட்டுமன்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் தமிழகத்தில் முதல்-அமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.

    கல்வி, சுகாதாரம், தொழில் துறை, வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி விளையாட்டு துறையிலும் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்கிடும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகள், அனைத்து விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி விளையாட்டு துறையை முதல்-அமைச்சர், விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஊக்குவித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட விளை யாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சொக்க லிங்கம், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, மாவட்ட கால்பந்து விளையாட்டு கழக தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச் சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர்.

    இந்த கூட்டத்தில், விருது நகர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குதல், தீர்வு வழங்க எடுத்துக்கொள்ளும் சராசரி கால அளவு, பட்டா மாறுதலுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள், அதன் நிலவரங்கள், இசேவை மையங்கள் வட்டார அளவில் தற்போது வரை பெறப்பட்டுள்ள விண்ணப் பங்கள்,

    நிலுவை விவரங்கள், பாலின விகிதம், ஊரக, நகர்ப்புறப் பகுதி களில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், அரசு மருத்துவ மனைகளில் நோய் வாய்ப்பட்டு பிறந்த குழந்தைகள் சேர்க்கை மற்றும் அதற்கான காரணங்கள், கருவுற்ற வளர் இளம் பெண்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ உதவி, தாய்மார்கள் இறப்பு,

    அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப் படும் பரிசோதனைகள், RBSK திட்டத்தின் கீழ் 7 முக்கிய அறுவை சிகிச்சை யின் செயல்திறன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோய் கண்டறியப்படு வதின் செயல்பாடுகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காந் பீட்டு திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும்-48,

    உழவர் சந்தைகளின் செயல்பாடு கள், ஆவின் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்திறன், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை புதிய தொழில்முனைவோர் மற்றும் நடுத்தர மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல் படுத்தப் பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவை யில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற் கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தி னர்.

    நிகழ்ச்சியில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு செயலர் தாரேஸ் அகமது, தனுஷ் எம்.குமார் எம்.பி., ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்,

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாணடியன், ரகு ராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் , விருதுநகர் நகர் மன்றத்தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுமதி ராஜசேகர், வாழ்ந்து காட்டுவோம், தாட்கோ அலுவலர்கள் உட்பட உள்ளாட்சி பிரதி நிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    • நெற்குப்பையில் ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
    • நகர செயலாளரும், பேரூராட்சி சேர்மனுமான கே.பி.எஸ்.பழனியப்பன் சீருடை அடங்கிய தொகுப்பினை ஓட்டுனர்களுக்கு வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 19 வருடங்களாக ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தி.மு.க. மாவட்ட மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான

    கே.ஆர்.பெரிய கருப்பன் தன் சொந்த நிதியிலிருந்து ஆயுத பூஜை தினத்தன்று சீருடை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் அமைச்சர் ஏற்பட்டில் இந்த வருடம் நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுனர்களுக்கு நகர செயலாளரும், பேரூராட்சி சேர்மனுமான கே.பி.எஸ்.பழனியப்பன் சீருடை அடங்கிய தொகுப்பினை ஓட்டுனர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் முத்தழகு, இளைஞர் அணி அமைப்பாளர் பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், வட்டச் செயலாளர் மாணிக்கம், கவுன்சிலர் வெள்ளைச்சாமி, ஒன்றிய பிரதிநிதி முத்து, தகவல் தொழில்நுட்ப அணி முருகேசன், மாணவரணி அமைப்பாளர் பாஸ்கரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீரமணி மற்றும் ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணி மாநாடு இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கும் மாநாடாக அமையும்.
    • மேலூரில் நடந்த இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

    மேலூர்

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூர் நகர், கிழக்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், கொட்டாம்பட்டி கிழக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூ ராட்சி சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி செயல்வீ ரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை தாங்கினார். அப் போது அவர் வருகிற டிசம்பர் 17-ந்தேதி சேலத் தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்து மேலூர் தொகுதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளி டம் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில், இளைஞர் அணி பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரி டையாக அழைத்து சரி பார்ப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி பேசியதா வது:-

    சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டிற்கு, மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான இளைஞர் கள் கலந்து கொள்ள வேண் டும். அதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளி லும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு இந்தியாவை திருப்பி வைக்கின்ற மாநாடாக அமையும்.

    இந்தியா கூட்டணி அமைந்ததற்கு முக்கிய காரணம் நமது தமிழக முதலமைச்சர். அதனால் தான் அதில் பங்கேற்று உள் ளார். வருகின்ற நாடாளு மன்ற தேர்தல் வெற்றி, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக அமையும். அதனால் கழக நிர்வாகிகள் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாள ரும், மேலூர் பொறுப்பாளர் வ.து.ந.ஆனந்த், மாவட்ட அவைத் தலைவர் பால சுப்பிரமணியன், மாவட்ட கழக பொருளாளர் சோம சுந்தரம், மேலூர் நகர செய லாளரும், நகர்மன்ற தலைவ ருமான முகமது யாசின், மேலூர் வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன்,

    ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திர பிரபு, பால கிருஷ்ணன், ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, வல்லாளப்பட்டி கார்த்தி கேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், முன் னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட தொண் டரணி அமைப்பாளர் நாவி னிபட்டி வேலாயுதம், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அமைப்பாளர் அழகு பாண்டி, கவுன்சிலர் அலாவு தீன், முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சாலை மற்றும் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்
    • ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி ஊராட்சி ஒன்றியம், பாலகொலா ஊராட்சிக்கு உள்பட்ட மந்தனை, நஞ்ச நாடு ஊராட்சி கோழிக்கரை ஆகிய பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூ.16.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. தமிழக சுற்றுலா அமைச்சா் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அங்கன் வாடி மையங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து பெங்காசிக்கல் பகுதியில் 24 வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.3.12 லட்சம் மதிப்பில் குடிநீா் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பாலகொலா ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.62.55 லட்சம் மதிப்பில் மீக்கேரி வரையிலான சாலைப்பணிகள், 15-வது நிதிக்குழு மானியதிட்டத்தின் கீழ் ரூ.6.20 லட்சம் மதிப்பில் ஆழ்துளைகிணறு, எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் பாலகொலா பகுதியில் பல்நோக்கு மைய கட்டிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    தொடா்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பாலாடா-நஞ்சநாடு முதல் பெங்காசிக்கல் வரை ரூ.1.26 கோடி மதிப்பில் சாலைப்ப ணிகள், நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    மேலும் நஞ்சநாடு ஊராட்சி, அம்மனட்டி பகுதியில் ரூ. 1.39 கோடி மதிப்பில் வெள்ள தடுப்புச்சுவா் கட்டுமானப் பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து இத்தலாா் ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உள்க ட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் சாா்பில் ரூ.31.80 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தாா். பின்னர் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.36.72 லட்சம் மதிப்பிலான நடைபாதை கழிவுநீா் கால்வாய்ப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, ஊட்டி கோட்டாட்சியா் மகராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உமாராஜன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவா் மாயன் என்ற மாதன், வட்டாட்சியா்கள் கலைச்செ ல்வி, சரவணக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன், பாலகொலா ஊராட்சி மன்றத் தலைவா் கலையரசி, துணைத் தலைவா் மஞ்சை மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • திருப்பத்தூர், எஸ் புதூர் ஒன்றியங்களில் புதிய மின் மாற்றிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • 37 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் எஸ் புதியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைரவன்பட்டி, குளத்துப்பட்டி கிராமங்களிலும் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாம்பட்டி கிராமத்திலும் சுமார் 27 லட்சம் 26 லட்சம் மதிப் பீட்டில் புதிய மூன்று மின்மாற்றிகளை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். இதனால் 650 மின் பயனீட்டாளர்கள் பயன்பெறு வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகள் உள்பட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 470 மாணவர்கள் மற்றும் 6323 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் குன்றக்குடி தருமை கயிலை குருமணி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 100 மாணவர்

    களுக்கும் பிரான்மலை ஊராட்சி வள்ளல் பாரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 70 மாணவர்களுக்கும் கிருங்கா கோட்டை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 37 பேருக்கும் விலையில்லா சைக்கிள் களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சி யர் செல்லமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மின் செயற் பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் ஜான் எப் கென்னடி, உதவி மின் பொறியாளர்கள் சையது ஹாசாலி, சுரேஷ், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான் சுப்பு, திருப்பத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் கே.பி.எஸ்.பழனியப்பன்.

    சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, அவை தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் அஞ்சப்பர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர கழகச் செயலாளர் கதிர்வேல், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர், முத்துக்குமார், பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன், துணைத் தலைவர் அமுதாசண்முகநாதன், ஊராட்சி மன்றசெயலர் ஆண்டவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசியப்பன், ஊர் அம்பலக்காரர் ஜோதி, ஆர். பாலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பெரிய பொன்னன், ஆதிமுத்து, குமார் சுப்பிரமணியன், குளத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் பெருமாள், சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முதுகுளத்தூர் பகுதிக்கு கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே வாரச் சந்தை ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள புதிய வாரச்சந்தையின் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். நவாஸ் கனி எம்.பி., முருகேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்த னர். முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் வரவேற்றார்.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு புதிய வாரச் சந்தையை திறந்து வைத்தார். விழாவில் முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் மாவீரன், வேலுச் சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன், முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி துணைத் தலைவர் வயணப் பெரு மாள் ஆகியோர் கலந்து கொண்டனா்.

    பின்னர் முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 100 பெண்க ளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் பேசுகையில், முதுகுளத்தூர் பகுதியில் கூடுதலாக 41 பஸ்கள் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. பார்த்திபனூர் பைபாஸ் சாலை பணிகள் முடிவ டைந்து விட்டன. கமுதி- சாயல்குடி பகுதியில் மில் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வள்ரச்சித் துறை அலுவலர்கள் சசிகலா, லாவண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×