search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "michigan cyclone"

    • கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது.
    • தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    எழும்பூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி பி.கே.மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    * மழை வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மழை இருக்கும் என்று எச்சரிக்கை செய்யவில்லை. இதை அனைத்தையும் மீறி 45 வருடங்கள் இல்லாத மழையை நாம் பார்த்துள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு செயலாற்றும் கட்சி.

    * ஆட்சியில் இருக்கும் போது உள்ள வசதி, அதிகாரம் அதை பயன்படுத்தி நாம் சுலபமாக பணியாற்றி விடுவோம். ஆனால் ஆட்சியில் இல்லாத போதும் நாம் பணியாற்றி வருகிறோம்.

    * கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது தி.மு.க.

    * 2015-ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    * ஏரியை திறக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்.

    * 2015-ல் கொஞ்சம் கொஞ்சமாமக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்திருப்பார்கள்.

    * 2015-ஐ விட மோசமான மழை பெய்தும் செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்ப விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து சென்னைக்கும் வந்த பெரும் பாதிப்பை தவிர்த்து உள்ளோம்.

    * இந்த மழை வெள்ளத்தில் மக்களை சந்தித்து உதவிய ஒரே கட்சி திமுக தான். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அனைவரும் மக்களை சந்தித்து உதவிகரமாக நீட்டினார்கள்.

    * மூன்று நாட்களாக ஆய்வு செய்யும் மத்திய அரசின் அதிகாரிகள் கூட மழை வெள்ளத்தை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு உள்ளது என்று கூறி உள்ளனர். மத்திய அரசில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் மனதார பாராட்டி உள்ளனர்.

    * தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது.
    • வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லை.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

    சென்னையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீ பெரும்புதூர் (3கிராமங்கள் மட்டுமே) செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், (3கிராமங்கள் மட்டுமே), திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கும் பணி இன்று பிற்பகல் முதல் தொடங்குகிறது.

    ரேஷன் கடைகளுக்கு அரசு ஒரு பட்டியல் அனுப்பி உள்ளது. அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. எந்த தேதியில் எந்த நாள் பணம் வாங்க வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருமான வரி செலுத்தக் கூடியவர்கள், அரசு பணியில் அதிகாரியாக இருப்பவர்களின் பெயர் அந்த பட்டியலில் இல்லை.

    பட்டியலில் பெயர் இடம் பெறாத நபர்கள் ரேஷன் கடையில் கொடுக்கப்படும் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து அரசிடம் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்து மேல்முறையீடு செய்து நிவாரணம் கோரலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

    டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 16-ந்தேதி முதல் (சனிக்கிழமை) ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாக இன்று ரேஷன் கடை அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் பயிற்சியும் வழங்கப்பட்டது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கும் மத்திய குழுவினர் அதன்பிறகு சேத விவரங்களை டெல்லிக்கு சென்று அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.
    • வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சேத மதிப்பு அதிகமாகி உள்ளது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பொது மக்களுக்கு பொருட்சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளது.

    வெள்ள சேதத்தை கணக்கிடுவதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை கணக்கிட்டு வருகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கும் மத்திய குழுவினர் அதன்பிறகு சேத விவரங்களை டெல்லிக்கு சென்று அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முதற்கட்டமாக இடைக்கால நிவாரண தொகையாக ரூ.5060 கோடி வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இப்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சேத மதிப்பு அதிகமாகி உள்ளது.

    எனவே கூடுதலாக நிவாரண நிதி கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய குழுவினர் டெல்லி சென்று அறிக்கை சமர்ப்பித்ததும் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்று கூடுதல் நிவாரண நிதி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து புயல்-வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண நிதியை வழங்குமாறு வலியுறுத்த உள்ளதாகவும், என்னென்ன சேதத்துக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்ற விவரங்களுடன் பட்டியலை கோரிக்கை மனுவாக வழங்க உள்ளதாகவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து பேசி விட்டு அதன் பிறகு மத்தியக் குழுவினர் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
    • வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தனர்.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான்சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை துணை இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் வந்திருந்தனர்.

    அவர்கள் நேற்று காலை தலைமைச் செயலகம் சென்று தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு தென்சென்னைக்கு ஒரு குழுவும், வடசென்னை பகுதிக்கு மற்றொரு குழுவினரும் சென்று பார்வையிட்டனர்.

    பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, வியாசர்பாடி, கணேசபுரம், வடபெரும்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளை பார்வையிட்டனர்.

    இன்று 2-வது நாளாக மத்திய குழுவினர் இடம்பெற்றிருந்த சிவ்கரே, விஜயகுமார், பவ்யா பாண்டே ஆகியோர் நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி அருகே உள்ள கழிவுநீரகற்று பம்பிங் ஸ்டேஷன் கீழ்ப்பாக்கம் குடிநீர் நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து வில்லிவாக்கம் அம்பேத்கர் நகர், சிட்கோ நகர், அம்பத்தூர் எஸ்டேட் சிட்கோ தொழிற்பேட்டை பகுதிகளை பார்வையிடுகின்றனர். அதன் பிறகு பாடி, கொரட்டூர் பகுதிகளுக்கு சென்று வெள்ள சேத பகுதிகளை பார்க்கின்றனர்.

    கொரட்டூரில் மழை நீர் புகுந்த வீடுகளை பார்த்ததுடன் வடக்கு அவென்யூ ரோடு, பம்பிங் ஸ்டேஷன், ஏரிக்கரை பகுதிகளுக்கும் சென்றும் பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ள சேதங்களை மறறொரு குழுவில் இடம் பெற்றிருந்த குணால் சத்யார்த்தி, திமான்சிங், ரங்கநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதலில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், நன்மங்கலம் ஏரி, சமத்துவ பெரியார் நகர், மூவேந்தர் நகர், பாரதியார் நகர், குட்வில் நகர் பகுதிகளை பார்வையிட்டனர்.

    இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிய வரதராஜபுரம்-ராயப்பா நகர், மகாலட்சுமி நகர் பாலம், தாம்பரம்-முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

    இன்று மதியம் குன்றத்தூர் வேல்நகர், பிரிதிவிநகர், செம்பரம்பாக்கம் அமரம்பேடு, மாதா கல்லூரி அருகே உள்ள பகுதிகள், பூந்தமல்லி நசரத்பேட்டை, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய பகுதி, திருவேற்காடு, ஐ.சி.எப். காலனி, நூம்பல், முகவலிவாக்கம் திருவள்ளூர் நகர், மணப்பாக்கம் முகலிவாக்கம் சாலை, பெல்நகர் காவ்யா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ ஆகிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட உள்ளனர்.

    இதே போல் மற்றொரு குழுவினர் புழல் ஏரி, சோழவரம் ஏரி, ஆவடி வீட்டு வசதி வாரியம், பருத்திப்பட்டு, பொன்னேரி, திருவேற்காடு, பஞ்செட்டி சாலை, சுப்பாரெட்டி பாளையம், அத்திப்பட்டு, புதூர் நகர், தட்டமஞ்சி, தச்சூர், அத்திப்பட்டு அனுபம்பட்டு, கொசஸ்தலை ஆறு பகுதிகள், சோமஞ்சேரி, பிரளயம்பாக்கம், ஆரணியாறு, பழவேற்காடு புலிகாட் ஆகிய இடங்களை பார்வையிட உள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை (வியாழக்கிழமை) சந்தித்து பேசி விட்டு அதன் பிறகு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். பின்னர் வெள்ள சேத மதிப்பு விவரங்களை விரிவாக தயாரித்து மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.

    • ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
    • ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    சென்னை :

    மழை வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்களில் நடுத்தர குடும்பமாக சிலர் இருந்தால் அவர்களும் தங்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுக்கலாம். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து எழுதி கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    • மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    இதில் சென்னை மாநகரம்-புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளித்ததால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    ஏராளமானோர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உடமைகள் அனைத்தும் தண்ணீரில் சேதம் அடைந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

    வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    இது மட்டுமின்றி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிடவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தவிர கால்நடைகள், பயிர்கள், படகுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் இப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.



    இதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்தது என்ற விவரங்களை மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

    கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 16-ந்தேதி முதல் டோக்கன் வினியோகிக்க அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகளில் பணம் வினியோகித்து விடலாம் என்று அரசு கருதுவதால் நாளை முதல் டோக்கன் வினியோகிக்க அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களும் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அனைத்து பகுதிகளுக்கும் பெரும்புதூர் தாலுகாவில் மேவலூர் குப்பம், சிவன்தாங்கல், கட்சிப்பட்டு ஆகிய 3 கிராமங்களுக்கும் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இங்குள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கியதும் ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகள் வெள்ளம் பாதிக்காத பகுதிகளாக இருப்பதால் இங்குள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் கிடைக்காது.

    குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது.

    இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், வசதி படைத்தவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

    வருமான வரி செலுத்துபவர்கள், அரசு அதிகாரிகளில் ஏ.பி. வகையான அதிகாரிகள், மிகப்பெரிய தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பிரிவில் உள்ளவர்கள் வைத்துள்ள ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

    • சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
    • அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பாதித்தது. மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்ட பகுதியிலும் வெள்ளம் நீர் சீராக செல்லவில்லை. ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதால் 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நின்றது.

    இதுவரையில் இல்லாத அளவிற்கு பல பகுதிகளில் தண்ணீர் வடிய பல நாட்கள் நீடித்தது. குறிப்பாக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் விரைவாக வடியாமல் சிறிது சிறிதாக வடிந்தது.

    இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளானார்கள். மழைநீர் வடிகால் இருந்த போதிலும் பரவலாக வெள்ளம் சூழ்ந்து நின்ற பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

    தண்ணீர் தேங்கியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். 363 பகுதிகளில் 2 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றுள்ளது. அந்த பகுதிகளை ஆய்வு செய்து மழை நீர் இனி தேங்காமல் இருக்க என்ன வழிமுறைகள், மாற்று திட்டங்களை கொண்டு செயல்படுத்தலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


    நகரின் மையப் பகுதிகளில் பல நாட்களாக வெள்ளம் தேங்கி நின்றது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்றாலும் கூட இந்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றததற்கான காரணம் என்ன? மழை கால்வாய்கள் இணைப்பு முறையாக உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுபற்றி மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 363 பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இருந்துள்ளது. அந்த பகுதிகளில் மழை நீர் வடியாமல் நின்றதற்கான காரணம் என்ன?

    எவ்வளவு நேரத்தில் எத்தனை செ.மீ. மழை பெய்தது என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி மழைக்காலம் முடிந்த பிறகு தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை என்ஜினீயர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும் ஆறுகளில் உள்ள அடைப்புகள், கால்வாயின் அளவு, அதன் ஆழம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ்நர், டெமெல்லோஸ் சாலை, புளியந்தோப்பு அருகில் உள்ள தெருக்கள், ரெட்டேரி ஏரிக்கு பின்புறம், மாதவரம், எம்.ஜி.நகர் சாலை, மணலியில் உள்ள சி.பி.சி.எல். நகர் உள்ளிட்ட சில பகுதிகள் இதில் அடங்கும்.

    அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அடுத்த வாரம் பெய்யும் மழை தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரிக்கு பிறகு தான் சில பகுதிகளில் வெள்ளம் ஏன் புகுந்தது என ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகரப் பகுதியில் பல பூங்காக்கள் கட்டப்பட உள்ளன.
    • சென்னை நகரில் சுற்றுலாவுக்காக பல கடற்கரைகளை உருவாக்கப்படும்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிச்சாங் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. தற்போது புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை காக்க திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

    இந்த பணிகளை 15 கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மிச்சாங் புயலுக்கு பிறகு சென்னை மாநகரத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை கருத்தில் கொண்டு 3-வது கட்ட பணிகளில் திருத்தம் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக மாநகரப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள வளர்ச்சியை ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    திருத்தப்பட்ட திட்டத்தில் வெள்ள தடுப்பு மற்றும் புயல் பாதுகாப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

    பெருவெள்ளம் புயலால் பாதிப்பு ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதலில் 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பான பணிகளை தொடங்கினர். அது தற்போது 5904 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் துணை நகரங்களாக கண்டறியப்பட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மீஞ்சூர், திருவள்ளூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மழை புயல் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த சென்னை மாநகர வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    மேலும் சென்னை மாநகரில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிக உயரமான கட்டிடங்கள் புதிய சாலைகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளது . மாநகரப் பகுதியில் பல பூங்காக்கள் கட்டப்பட உள்ளன.

    சென்னை நகரில் சுற்றுலாவுக்காக பல கடற்கரைகளை உருவாக்கப்படும். இது தொடர்பாக திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும் பணிகள் நடக்கின்றன. அதேபோல மாநகரில் சாதி பெயருடன் கூடிய தெருக்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்கள் பொதுவாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
    • சென்னை மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்கிய 359 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன.

    செவ்வாய்கிழமை முதல் நிவாரண பணிகளும், மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

    இதுவரை 95 சதவீத இடங்களில் மழை தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. இன்னும் 5 சதவீத புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தெருக்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. அந்த தெருக்களில் தண்ணீரை வெளியேற்ற இன்னும் ஒரு வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் வெள்ளம் அகற்றப்பட்ட பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் டன் கணக்கில் குப்பைகள் இருப்பதால் அவற்றோடு போராடும் நிலைமைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 24 ஆயிரம் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளை செய்து வருகிறார்கள்.

    கடந்த 6, 7-ந்தேதிகளில் சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு இருந்தன. கடந்த 3 நாட்களில் மேலும் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது. லாரி, லாரியாக குப்பைகள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    கடந்த 5 நாட்களில் சுமார் 30 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு இருந்தன. இன்னமும் நூற்றுக்கணக்கான தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே சென்னையில் இன்னும் 10 டன் குப்பைகள் அகற்றப்படும் என்று தெரிகிறது.

    ஆனால் குப்பைகளை கொட்டுவதுதான் கடும் சவாலாக மாறி வருகிறது. பெரும்பாலான மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் வெற்றிடங்களில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதற்கு சில பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    சென்னை மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்கிய 359 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. மீதமுள்ள இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    சாலை மற்றும் தெருக்களில் விழுந்த 1,351 மரங்களில் 1,255 மரங்கள் அகற்றப்பட்டன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 726 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 51,158பேர் பரிசோதனை மேற்கொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் 22 ஆயிரம் பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • நேரம் செல்ல செல்ல உமாமகேஸ்வரி நினைத்தது போலவே நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.
    • நிலமையை நினைத்து கலங்கிய உமாமகேஸ்வரிக்கும் பயம் சூழ்ந்தது.

    சென்னையை மிதக்க விட்ட வெள்ளத்துக்குள் சிக்கி மீண்டவர்களும், மீட்கப்பட்டவர்களும் திகில் நிறைந்த தங்கள் அனுபவங்களை சொல்வதை கேட்கும் போது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்துகிறது.

    அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 30 வயதான உமா மகேஸ்வரியும், அவரது 2 மகன்களும் அடங்குவார்கள். இவர் தண்ணீருக்குள் உயிருக்காக போராடியது மிகவும் திகிலானது. அவர் கூறும்போது:-

    எங்கள் சொந்த ஊர் விழுப்புரம். மேற்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிக்கிறோம். கூலி வேலை பார்க்கிறோம். கடந்த 3-ந்தேதி மாலையில் தொடங்கிய மழை இரவிலும் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது.

    காலையில் எழுந்ததும் கதவை திறந்து பார்த்தால் வெள்ளக்காடாக காட்சி.

    ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்திருக்கிறது. இருப்பினும் வெளியே புறப்பட்ட கணவரிடம், இன்றைக்கு வெளியே போகாதீங்க... மழை வெள்ளம் ஒரு மாதிரி மிரட்டுகிறது. வீட்டுக்குள்ளும் வெள்ளம் வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

    ஏய்... இதுக்கு போய் பயப்படலாமா? வீட்டுக்குள் எல்லாம் தண்ணீர் வரப்போவதில்லை. தைரியமாக இருங்கள் என்று கூறி விட்டு அவர் வெளியே கிளம்பி சென்று விட்டார்.

    நேரம் செல்ல செல்ல உமாமகேஸ்வரி நினைத்தது போலவே நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது.

    வெள்ளம் முட்டளவை தாண்டியதும் அவரது மகன்கள் இரண்டு பேரும் 'அம்மா... பயமா இருக்கும்மா...' என்று உமாமகேஸ்வரியை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார்கள்.

    நிலமையை நினைத்து கலங்கிய உமாமகேஸ்வரிக்கும் பயம் சூழ்ந்தது. வெளியே எங்கு பார்த்தாலும் கடல் போல் வெள்ளம் நின்றது. சிலர் படகுகளில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதை பார்த்ததும் 'எங்களை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..' என்று அபய குரல் எழுப்பி இருக்கிறார்.

    ஆனால் உமாமகேஸ்வரியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவர்கள் தண்ணீரில் தத்தளித்தது யாருக்கும் தெரியவும் இல்லை.

    வெள்ளம் அதிகரித்து மகன்களை மூழ்கடிக்கும் அளவுக்கு வந்து விட்டது. நிலைமை விபரீதமாகி விடும் என நினைத்த உமாமகேஸ்ரி நாம் இறந்தாலும் பரவாயில்லை. நம் பிள்ளைகள் பிழைத்து கொள்ளட்டும் என நினைத்து இருவரையும் வீட்டுக்குள் இருந்த பரண் (லாப்ட்) மீது தூக்கி உட்கார வைத்துள்ளார்.

    மகன்கள் 'அம்மா நீயும் வந்துரும்மா' என்று கதறி இருக்கிறார்கள். "நான் ஏற முடியாதுடா செல்லம். நீங்கள் பயப்படாமல் பத்திரமாக இருங்கள்" என்று அவர்களை தைரியப்படுத்தி இருக்கிறார்.

    காலை 10 மணியளவில் கதவு மட்டத்துக்கும் மேலே வெள்ளம் வந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் எப்படியும் தப்பிக்க முடியாது என்று கருதி இருக்கிறார். ஒரே அறை உள்ள வீடு அது. வேறு எங்கும் செல்லவும் முடியாது.

    கடைசி கட்ட முயற்சியாக கியாஸ் சிலிண்டரை எடுத்து போட்டு அதன் மீது ஏறி நின்றுள்ளார். இப்படியே சுமார் 12 மணி நேரம் நின்றுள்ளார்.

    இரவில் அந்த வழியாக மீட்பு பணிக்கு சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை பார்த்துள்ளார்கள்.

    பயந்து நடுங்கிய அவர்களை பார்த்ததும் 'இனி பயப்படாதீர்கள் நாங்கள் காப்பாற்றி விடுவோம்' என்று தைரியம் அளித்து ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள்.

    உயிர் பிழைத்த 3 பேரும் இன்னும் கொஞ்சம் நேரம் யாரும் வந்திருக்காவிட்டால் செத்திருப்போம் என்று நடுங்கியபடியே கூறினார்கள்.

    • ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 6-வது பிரதான சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது.
    • சோழிங்கநல்லூர் விப்ரோ தெருவில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது.

      சென்னை:

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னையில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

    மழை ஓய்ந்த பிறகும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து 2 நாட்கள் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் அதன் பிறகு வெள்ளம் வடியத் தொடங்கியது. வெள்ளம் வடியாத தெருக்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை ஓய்ந்து 1 வாரம் ஆகியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. சுமார் 200-க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளம் வடியாமலேயே காணப்படுகிறது. இந்த தெருக்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் வெள்ளம் வடியவில்லை.

    பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் யமுனா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு 15 தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரமாக 10 அடிக்கு மேல் தண்ணீர் நின்று கொண்டு இருந்த நிலையில் தற்போது இடுப்பளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. இதனை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் தண்ணீர் வடியாமல் உள்ளது.

    இந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், பொதுமக்களை ஏற்றி செல்ல பழவேற்காட்டில் இருந்து மோட்டார் படகு வரவழைக்கப்பட்டது. இந்த படகில் 3 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்த நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்திற்காக மாவட்ட நிர்வாகம் இத்தகைய மோட்டார் படகை ஏற்பாடு செய்துள்ளது. அதில் ஏறி இன்று மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். மேலும் தண்ணீரை வெளியேற்ற ஏற்கனவே டிராக்டர்களுடன் 7 மோட்டார்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 160 குதிரை திறன் கொண்ட புதிய மோட்டார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு மெட்ரோ சிட்டி 6-வது தெருவில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த தண்ணீரும் இன்னும் வடியவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    சென்னை திருநின்றவூரில் 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை. திருநின்றவூர் பெரியார்நகர், திருவள்ளுவர் தெரு, பாரதியார் தெரு, முத்தமிழ் தெரு, சுதேசி நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, திருவேங்கட நகர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அந்த பகுதியில் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் அவர்கள் தேங்கி நிற்கும் தண்ணீரை பொருட்படுத்தாமல் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு போலீசாரும், தன்னார்வலர்களும் படகில் சென்று உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறார்கள். இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பல மாணவ-மாணவிகள் படகிலேயே பள்ளிக்கு சென்றனர். பெரியார் நகரில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக கொசவன்பாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி 50 மீட்டர் தூரத்துக்கு தற்காலிக கால்வாய் அமைத்து தன்ணீரை கூவம் ஆற்றில் விழச்செய்து வெளியேற்றுகிறார்கள். இதற்காக திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையிலும் குறுக்கே வெட்டப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நடைபெறவில்லை.

    கொடுங்கையூர் சேலவாயல் தென்றல் நகர் 2-வது தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் தேங்கிய மழை வெள்ளம் இன்னமும் வடியவில்லை. முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொது மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த தண்ணீர் சாக்கடையாக மாறி விட்டதால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. சேலவாயல் ராகவேந்திரா நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியிலும் இன்னும் தண்ணீர் வடியவில்லை. அங்கு டிராக்டர் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள 2 தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு இன்னும் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.

    ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 6-வது பிரதான சாலையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி காணப்படுகிறது. இந்த பகுதி பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ளதால் இங்கு இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது. இந்த பகுதியில் மேலும் 5 தெருக்களில் லேசான அளவில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சோழிங்கநல்லூர் விப்ரோ தெருவில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. இங்கு முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்படுவதால் இங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

    மேலும் போரூர் அருகேயுள்ள ஆலப்பாக்கம் மெயின்ரோடு, பரணிபுத்தூர் அருகேயுள்ள மாங்காடு மெயின்ரோடு, அய்யப்பன்தாங்கல், பெரிய கொளத்துவாஞ்சேரி, வளசரவாக்கம் விஜயாநகரில் உள்ள சில பகுதிகள், போரூர் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் இன்னும் வடியவில்லை. தொடர்ந்து இந்த பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நிவாரண நிதியை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டம்.
    • 16-ந்தேதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக பொதுமக்களுக்கு 16-ந்தேதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிவாரண நிதியை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று கூறப்படுகிறது. அதாவது,

    * ரேசன் அட்டை வைத்திருப்போர்.

    * ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தாலும் நிவாரண தொகை.

    * சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நிவாரண நிதியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×