search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையை பெரு வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி உள்ளோம்!
    X

    சென்னையை பெரு வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி உள்ளோம்!

    • கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது.
    • தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    எழும்பூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி பி.கே.மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    * மழை வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மழை இருக்கும் என்று எச்சரிக்கை செய்யவில்லை. இதை அனைத்தையும் மீறி 45 வருடங்கள் இல்லாத மழையை நாம் பார்த்துள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு செயலாற்றும் கட்சி.

    * ஆட்சியில் இருக்கும் போது உள்ள வசதி, அதிகாரம் அதை பயன்படுத்தி நாம் சுலபமாக பணியாற்றி விடுவோம். ஆனால் ஆட்சியில் இல்லாத போதும் நாம் பணியாற்றி வருகிறோம்.

    * கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது தி.மு.க.

    * 2015-ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    * ஏரியை திறக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்.

    * 2015-ல் கொஞ்சம் கொஞ்சமாமக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்திருப்பார்கள்.

    * 2015-ஐ விட மோசமான மழை பெய்தும் செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்ப விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து சென்னைக்கும் வந்த பெரும் பாதிப்பை தவிர்த்து உள்ளோம்.

    * இந்த மழை வெள்ளத்தில் மக்களை சந்தித்து உதவிய ஒரே கட்சி திமுக தான். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அனைவரும் மக்களை சந்தித்து உதவிகரமாக நீட்டினார்கள்.

    * மூன்று நாட்களாக ஆய்வு செய்யும் மத்திய அரசின் அதிகாரிகள் கூட மழை வெள்ளத்தை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு உள்ளது என்று கூறி உள்ளனர். மத்திய அரசில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் மனதார பாராட்டி உள்ளனர்.

    * தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×