என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரூ.6000 நிவாரணம் - ரேசன் அட்டை இல்லாதவர்களா நீங்கள்?... உங்களுக்கான குட் நியூஸ்..
- நிவாரண நிதியை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டம்.
- 16-ந்தேதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இதற்காக பொதுமக்களுக்கு 16-ந்தேதி முதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிவாரண நிதியை 3 பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று கூறப்படுகிறது. அதாவது,
* ரேசன் அட்டை வைத்திருப்போர்.
* ரேசன் அட்டைக்கு விண்ணப்பித்திருந்தாலும் நிவாரண தொகை.
* சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நிவாரண நிதியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






