search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Michael Vaughan"

    • தகுதி இல்லாதவரெல்லாம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார்.
    • அப்படி பகுதிநேர பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கூட வராத தம்மிடம் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளதாக மைக்கேல் வாகன் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.

    ஐபிஎல் டி20 தொடரின் 16-வது சீசன் வரும் 2023-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று கொச்சி நகரில் நடைபெறும் நிலையில் கோப்பையை வெல்வதற்கு தேவையான வீரர்களை தக்க வைத்துள்ள அந்தந்த அணி நிர்வாகங்கள் தேவையற்ற வீரர்களை வெளியேற்றியுள்ளது.

    அந்த வரிசையில் 2008 முதல் இப்போது வரை முதல் கோப்பை வெல்ல போராடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த வருடம் புதிய கேப்டனாக நியமித்த மயங் அகர்வாலை சுமாராக செயல்பட்டதால் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அணியிலிருந்தே மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

    இப்படி அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் சொதப்பலை அரங்கேற்றி வரும் அந்த அணி அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்காக கேப்டனை மட்டுமல்லாமல் பயிற்சியாளர் குழுவையும் அடியோடு மாற்றியுள்ளது. ஏனெனில் புதிய கேப்டனாக சீனியர் வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உறுதுணையாக ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக டிராவிஸ் பெய்லிஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோக துணை பயிற்சியாளராக ப்ராட் ஹார்டின், பந்து வீச்சு பயிற்சியாளராக சார்ல் லாங்வெல்ட் ஆகியோரை நியமித்துள்ள அந்த அணி பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாபரை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தகுதி இல்லாதவரெல்லாம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார்.

    கடந்த பல வருடங்களாகவே சமூக வலைதளங்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளை மையப்படுத்தி ஒருவரை ஒருவர் இவர்கள் கலாய்த்துக் கொள்வது வழக்கமாகும். குறிப்பாக வேண்டுமென்றே இந்தியாவை கலாய்க்கும் வகையில் மைக்கேல் வாகன் பேசுவதும் அதற்கு சினிமா படங்களை உபயோகித்து வாசிம் ஜாபர் பதிலடி கொடுப்பதும் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்றதாகும். முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் வாசிம் ஜாபருடைய விக்கெட்டை மைக்கேல் வாகன் எடுத்துள்ளார்.

    அப்படி பகுதிநேர பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கூட வராத தம்மிடம் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளதாக மைக்கேல் வாகன் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார். அவருடைய அந்த டுவிட் வைரலாகும் நிலையில் அதற்கு வழக்கம் போல வாஷிம் ஜாபர் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • இந்திய அணியை மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்ட அணி என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார்.
    • ஒன்றரை வருடங்களாக இந்தியாவுக்காக விளையாடி வருவதால், சர்வதேச கிரிக்கெட்டில் தங்களை வெளிப்படுத்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது.

    வெல்லிங்டன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அவர்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம் இருக்கும். சர்வதேச அளவில் விளையாடும் போது நாங்கள் யாருக்கும் எங்களை நிரூபிக்க அவசியமில்லை என நினைக்கிறேன். இது ஒரு விளையாட்டு, இதில் நீங்கள் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வீர்கள். அதற்கான முடிவுகள் நடக்கும் போது நிச்சயம் நடக்கும். நாங்கள் இன்னும் டி20 கிரிக்கெட்டில் சில விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    அதனை வருங்காலங்களில் சரி செய்து சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்வி எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனால் தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் நீங்கள் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டு அதில் இருந்து மீண்டு வந்து எப்படி வெற்றி அடைய வேண்டும் என்பது குறித்து தான் யோசிக்க வேண்டும் . முன்னேறிச் செல்வது மட்டும்தான் ஒரே வழி.தவறுகளை திருத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

    அடுத்த டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த டி20 உலக கோப்பைக்கான பயணம் நியூசிலாந்து தொடருடன் தொடங்குகிறது. இது ஒரு புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலங்கள் இருக்கிறது.

    அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அமர்ந்து பிறகு யோசிப்போம். இப்போது எங்களுடைய வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்ப.ம் எங்கள் அணியின் முக்கிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செய்யப்படவுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22 வரை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது

    • அடிலெய்டு அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
    • தொடக்க வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடாதது தோல்விக்கு முக்கிய காரணம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் அடிலெய்டில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் மோதின. இதில் 169 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும்போது இந்திய அணியின் குறைகளை சுட்டிக் காட்டி வெளிநாட்டு விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர். அப்போது அவர்கள் சமூக வலைத்தளத்தில் இந்திய வல்லுனர்கள், ரசிகர்களால் கடுமையான அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

    இருந்தாலும் மைக்கேல் வாகன் போன்றோர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்கள். இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் போன்றோர் பதிலடி கொடுத்தும், ட்ரோல் செய்தும் வந்தனர்.

    நேற்று இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் மைக்கேல் வாகன், கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள். மேலும், அவர்கள் வேலையை இழந்து விடுவோம் என அஞ்சுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ''யாருமே இந்திய அணியை விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். பண்டிட்ஸ் இந்தியாவில் ஒருநாள் வேலையை இழந்துவிடுவோம் என கவலைப்படுகிறார்கள்.

    ஆனால், தற்போது நேரடியாக பேச வேண்டிய நேரம். அவர்கள் சிறந்த வீரர்களுக்கு பின்னால் மறைந்து கொள்ள முடியும். ஆனால், இது ஒட்டுமொத்தமாக ஒரு அணி சரியான வழியில் விளையாடுவதை பற்றியது. அவர்களின் பந்து வீச்சாளர்கள் தேர்வு தரம் குறைவாகவே இருந்தது. மேலும், மிகவும் நேர்த்தியான வகையில் அதிரடியாக பேட்டிங் செய்யவில்லை. சுழற்பந்து வீச்சிலும் குறைபாடு.

    ஒயிட் பால் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளது. இந்திய பிரிமீயர் லீக்கில் உலகின் ஒவ்வொரு வீரர்களும், அவர்களின் பேட்டிங் திறமையை எப்படி முன்னேற்றினார்கள் எனச் சொல்கிறார்கள். ஆனால், இந்தியா இதுவரை சாதித்தது என்ன?'' என்றார்.

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் இனிமேல் இங்கிலாந்து பயப்படப்போவதில்லை.
    • இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக மரியாதை கொடுக்கும்.

    அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஏப்ரல் மாத தொடக்கத்தில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை மீண்டும் வெல்லும் என்று சொல்லி இருந்தால் நாங்கள் அவர்களால் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாது என கூறியிருப்போம். ஆனால், கோடைக்கால டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்த முடிவு தெளிவானது.

    அடுத்த கோடைக்கால ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படும் என்றார். இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக மரியாதை கொடுக்கும். இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதையும், அவர்களால் எந்த இடத்திலும் அபாயகரமானவர்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு தெரியும். தோல்வி பயம் இல்லாமல் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவது தற்போதைய இங்கிலாந்து அணியை மிகவும் உற்சாகமான அணியாக மாற்றி உள்ளது.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் இனிமேல் இங்கிலாந்து பயப்படப்போவதில்லை. மெக்கல்லம் - ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி அழுத்தமில்லாமல் அதிரடியாக விளையாடும் போக்கினை அணியில் பழக்கப்படுத்தி இருக்கின்றனர்.


    எல்லா அணிகளும் இந்த மாதிரி அதிரடியாக விளையாட வேண்டுமென நினைக்கிறேன். கடைசி கோடைக் காலத்தில் இங்கிலாந்து எப்படி டெஸ்ட் போடியை விளையாட வேண்டுமென உலகத்திற்கே தெரிவித்தது. அடுத்த ஆஷஸ் கோப்பையை நிச்சயமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி வெல்லும் என்றார்.

    இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் 34-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 2017-18 ஆஷஸ் தொடரை வென்று, 2019 தொடரை சமன் செய்ததுள்ளது . அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் 4-0 என ஆஸ்திரேலிய அணி வென்று ஆஷஸ் கோப்பையை தங்கள்வசம் வைத்துள்ளது.

    • மைக்கெல் வாகன் இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி 400 ரன்கள் வரை குவிப்பார்கள் என பேசியிருந்தார்.
    • இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர்.

    மைக்கெல் வாகன் இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி 400 ரன்கள் வரை குவிப்பார்கள் என பேசியிருந்தார். ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்ததால் இந்திய ரசிகர்கள் அவரை வாட்டி எடுத்தனர். முதலாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்த ஆட்டம் குறித்து அவர் பேசியதாவது:-

    இங்கிலாந்து அணியில் தற்போது ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் இணைந்துள்ளதால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 400 ரன்களை அடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியிருந்தபடி அந்த மூவரில் பேர்ஸ்டோ 7 ரன்களை மட்டுமே அடிக்க ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    இப்படி அதிரடியான வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்து 400 ரன்கள் குவிக்கும் என்று பெரிய அளவில் பில்டப் கொடுத்த வேளையில் நேற்று இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டு சொதப்பியதால் மைக்கேல் வாகனை சமூக வலைதளத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். 

    • ஜோ ரூட் சதம் அடித்ததால், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 141 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.

    9 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 285 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்தார். இதனைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின் சதம் அடித்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதற்கு முன்னர் இங்கிலாந்து அணி கேப்டனாக இருந்த அலஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆவார்.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடித்த ஜோ ரூட்டிற்கு, இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இங்கிலாந்து அணிதான் எதிராளிகளை அபாரமாக வீழ்த்த கூடிய அணியாக இருக்கிறது என முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

    லண்டன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளன.

    குரூப் 1 பிரிவில் உள்ள இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காளதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி இந்தியா (10 விக்கெட்), நியூசிலாந்து (5 விக்கெட்), ஆப்கானிஸ்தான் (5 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்தது.

    இந்தநிலையில் இங்கிலாந்து அணியின் வேகத்தை பாகிஸ்தானால் மட்டுமே தடுக்க முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இங்கிலாந்து அணிதான் சிறந்த அணி. எதிராளிகளை அபாரமாக வீழ்த்த கூடிய அணியாக இருக்கிறது. இங்கிலாந்து அணியின் வெற்றி நடையை தடுப்பது யார்?

    தற்போது உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியால் மட்டுமே இங்கிலாந்தின் வேகத்தை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ரிவியூ ஆப்சனை பயன்படுத்துவதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் மிகவும் வொர்ஸ்ட் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்களும், இந்தியா 292 ரன்களும் சேர்த்தன.

    இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா இரண்டு ரிவியூ-களையும் விரைவாக இழந்தது. இதனால் சில வாய்ப்புகளில் நடுவர் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இயலாமல் போனது.

    ஜோ ரூட் எல்பிடபிள்யூ ஆகும்போது பும்ரா அப்பீல் கேட்டார். நடுவர் நீண்ட நேரம் அவுட் கொடுக்கவில்லை. இதனால் பும்ரா சோர்ந்துவிட்டார். அவர் சோர்ந்த நிலையில் நடுவர் அவுட் கொடுத்தார். ஜோ ரூட் ரிவியூ கேட்டார். அதில் எந்தவித சந்தேகமின்றி ஜோ ரூட் அவுட் என தெரியவந்தது. ஒருவேளை நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் ஜோ ரூட் டக்அவுட்டில் இருந்து தப்பியிருப்பார்.



    2-வது இன்னிங்சில் ஜடேஜா பந்து வீசும்போது அடுத்தடுத்த ஓவரில் ஜென்னிங்ஸ் (9.2) மற்றும் அலஸ்டைர் குக்கிற்கு (11.6) நடுவர் விக்கெட் கொடுக்காததால் விராட் கோலி ரிவியூ கேட்டார். அப்போது இருவரின் பேடும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இருக்கும்போது பந்து தாக்கியதால் ரிவியூ வாய்ப்பை இந்தியா இழந்தது.

    குறுகிய நேரத்திற்குள் இந்தியா ரிவியூ வாய்ப்பை இழந்ததால் இனிமேல் அதை பயன்படுத்த முடியாது. இந்நிலையில் ரிவியூ கேட்பதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகிலேயே மிகவும் வொர்ஸ்ட் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணி மிகவும் கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய மந்திரத்துடன் களம் இறங்குங்கள் என்று முன்னான் வீரர் வாகன் இங்கிலாந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 2011 மற்றும் 2014-ல் படுதோல்வியடைந்த இந்தியா, இந்த முறை தொடரை கைப்பற்றும் என நம்பப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய தார்மீக மந்திரத்துடன் களம் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘ஜோ ரூட் தன் அணி வீரர்களிடம், நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று சம்மட்டியடித்தது போல், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று பிறகு ஹெட்டிங்லேயில் கோபமாக மீண்டெழுந்து வெற்றி பெற்றதுபோல் விராட் கோலி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபம் மற்றும் ஆவேசமாக ஆட வேண்டும் என்று அணியிடம் வலியுறுத்த வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஹெட்டிங்லே 2-வது டெஸ்டின் முதல் நாளில் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்க வேண்டும் என்று வீரர்களிடம் கூற வேண்டும். சில வேளைகளில் அணியின் விவாதத்தின்போது இப்படி செய்ய இயலாது. சில நேரங்களில் ஒவ்வொரு வீரர்களிடம் பேசும்போது அதற்கு பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வீரர்களிடமும் சென்று, பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாட லீட்ஸிற்கு ஏன் தீவிர நோக்கத்துடன் வந்தீர்கள்? என்று கூற வேண்டும்.

    உதை வாங்கி விட்டு விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதை விடுத்து தொடக்கத்திலேயே இங்கிலாந்து இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதில் ரஷித் விவகாரம் இதற்கு உதவும்.

    இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது. அந்த அளவுக்கு அணி நன்றாக இல்லை. ஆனால் ஒவ்வொரு வாரமும் மனநிலையில் அதே சிந்தனையை வைத்துக் கொள்ள முடியும்.

    ஜோ ரூட் 16 டெஸ்டுகளில் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார், ஆனால் அவர் அரைசதங்களை சதமாக மாற்றத் திணறுகிறார். இதை சரிசெய்ய வேண்டும்.



    கோலியின் முன் கால் நகர்த்தலுக்கு பிராட், ஆண்டர்சன் சவால் அளிக்க வேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி ஒரு பந்தை ஸ்ட்ரெய்ட்டாக வீசி அவரை ஆட வைத்து அவுட் ஆக்க வேண்டும்.

    கோலியின் இடது கால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வர வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு எழும். அப்போது ஆஃப் திசையில் ஸ்கொயராக ஆடும்போது எட்ஜ் வாய்ப்புகள் அதிகம்.

    ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு அடி வெளியே செல்லும் பந்துகளுக்கு அவர் பலவீனம் தெரிகிறது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எழுச்சி பெற்று கோலியின் பிரன்ட் ஃபுட் ஆட்டத்திற்கு சவால் கொடுக்க வேண்டும்” என்றார்.
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். #ENGvIND #AdilRashid #MichaelVaughan
    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

    இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 1½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் அணியில் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டது கேலிக் குரியது.

    உள்ளூரில் நடக்கும் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஒருவரை நாம் அணியில் சேர்த்து இருக்கிறோம். அவர் சிறப்பாக செயல்படுவாரா? மாட்டாரா? என்பதை மறந்து விடுவோம். ஆனால் இந்த முடிவை நான் கேலியதாகதான் பார்க்கிறேன்.



    ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆதில் ரஷீத் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #AdilRashid #MichaelVaughan
    ×