search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மைக்கெல் வாகனின் பில்டப்பால் சமூக வலைத்தளத்தில் வாட்டி வதைக்கும் இந்திய ரசிகர்கள்
    X

    மைக்கெல் வாகன்

    மைக்கெல் வாகனின் பில்டப்பால் சமூக வலைத்தளத்தில் வாட்டி வதைக்கும் இந்திய ரசிகர்கள்

    • மைக்கெல் வாகன் இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி 400 ரன்கள் வரை குவிப்பார்கள் என பேசியிருந்தார்.
    • இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர்.

    மைக்கெல் வாகன் இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி 400 ரன்கள் வரை குவிப்பார்கள் என பேசியிருந்தார். ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்ததால் இந்திய ரசிகர்கள் அவரை வாட்டி எடுத்தனர். முதலாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்த ஆட்டம் குறித்து அவர் பேசியதாவது:-

    இங்கிலாந்து அணியில் தற்போது ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் இணைந்துள்ளதால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 400 ரன்களை அடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியிருந்தபடி அந்த மூவரில் பேர்ஸ்டோ 7 ரன்களை மட்டுமே அடிக்க ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    இப்படி அதிரடியான வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்து 400 ரன்கள் குவிக்கும் என்று பெரிய அளவில் பில்டப் கொடுத்த வேளையில் நேற்று இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டு சொதப்பியதால் மைக்கேல் வாகனை சமூக வலைதளத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×