என் மலர்
நீங்கள் தேடியது "Test team"
- வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது
- ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார்.
இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப் புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 121/2 என்ற நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜெய்டன் சீல்ஸ் வீசினார். இதை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளை அடித்தார்.
தொடர்ந்து கே.எல்.ராகுல்-சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 188 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது அணியின் மூன்றாவது விக்கெட்டாக ஷுப்மான் கில் ஆட்டமிழந்தார். பின்னர், ராகுல், கிரீஸுக்கு வந்த துருவ் ஜூரலுடன் சேர்ந்து, கவனமாக விளையாடி ரன்களை அதிகரித்தார்.
இந்த வரிசையில், கே.எல். ராகுல் 19 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். ராகுலின் சதத்தில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
மதிய உணவு நேரத்தில், இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வேஸ்ட் வேஸ்ட் இண்டீஸ்-ஐ விட 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- இந்த அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான ஐ.சி.சி. விருதுகள் வென்றவர்களின் விவரங்கள் இன்று முதல் வெளியிடப்படும் என ஐ.சி.சி. அறிவித்திருந்தது.
அதன்படி, 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் 4 பேரும், இந்திய வீரர்கள் 3 பேரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆண்கள் அணி விவரம்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பென் டக்கெட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) , ஜோ ரூட் (இங்கிலாந்து), ஹாரி புரூக் (இங்கிலாந்து), கமிந்து மெண்டிஸ் (இலங்கை), ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து) , ரவீந்திர ஜடேஜா (இந்தியா), கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), மாட் ஹென்றி (நியூசிலாந்து). ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா).
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 1½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆதில்ரஷித் சேர்க்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் அணியில் ஆதில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டது கேலிக் குரியது.

ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆதில் ரஷீத் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #AdilRashid #MichaelVaughan
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.
ஒருநாள் தொடர் முடிந்த பிறகு இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.
இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு நாளை (18-ந்தேதி) அல்லது 19-ந்தேதி நடை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீரர் பும்ரா காயம் காரணமாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கு உடல் தகுதி பெறுவது சந்தேகம்.
இதனால் அவரது இடத்தில் முகமதுஷமி இடம் பெறலாம் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதால் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

தற்போது அவருடன் மேலும் ஒரு விக்கெட் கீப்பர் அணியில் தேர்வு செய்யப்படலாம். ரிசப் பாண்ட், பார்த்தீவ் பட்டேல், சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். இதில் ரிசப்பாண்டுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதேபோல சுழற்பந்து வீரர்களில் ஒருவர் தேர்வு பெறலாம். குல்தீப்யாதவ் அல்லது யசுவேந்திர சாஹல் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம். டெஸ்ட் அணியில் அஸ்வின், ஜடேஜா சுழற் பந்தில் முத்திரை பதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #INDvENG






