என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய டெஸ்ட் அணி"
- வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது
- ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார்.
இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப் புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 121/2 என்ற நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜெய்டன் சீல்ஸ் வீசினார். இதை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளை அடித்தார்.
தொடர்ந்து கே.எல்.ராகுல்-சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 188 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது அணியின் மூன்றாவது விக்கெட்டாக ஷுப்மான் கில் ஆட்டமிழந்தார். பின்னர், ராகுல், கிரீஸுக்கு வந்த துருவ் ஜூரலுடன் சேர்ந்து, கவனமாக விளையாடி ரன்களை அதிகரித்தார்.
இந்த வரிசையில், கே.எல். ராகுல் 19 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். ராகுலின் சதத்தில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
மதிய உணவு நேரத்தில், இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வேஸ்ட் வேஸ்ட் இண்டீஸ்-ஐ விட 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன்.
- நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேலும் தேர்வு குழு தலைவர் அகர்கர் பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்து ரகானே கூறியதாவது:-
சில வருடங்களுக்கு முன்பு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டேன். பின்பு சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். இறுதிப் போட்டியில் நான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தேன். இருந்த போதும் நான் மீண்டும் ஏன் நீக்கப்பட்டேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன். எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. என்னை ஏன் நீக்கி விட்டீர்கள் என்று போய் கேட்கும் நபர் நான் கிடையாது.
மேலும் இது குறித்து நான் பேச வேண்டும் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் பேசுவதற்கு தயாராக இருந்தால்தான் முடியும். அப்படி யாரும் என்னிடம் பேச தயாராக இல்லை. என் கையில் என்ன இருக்கிறதோ அதைப்பற்றி மட்டுமே நான் பார்க்கிறேன். மீண்டும் வருவதற்கு நான் கடுமையாக உழைக்கிறேன்.
எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும் ஆர்வமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது நான் ரஞ்சி தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறேன். மும்பை அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.
என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை என்னுடைய விளம்பரத்திற்கு பிஆர் வைத்துக்கொள்ள சொன்னார்கள். நான் அடிக்கடி செய்திகளில் இடம் பெற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கான விளம்பரம் என்னுடைய பேட்டிங் மட்டும்தான். நான் அப்படி யாரையும் என் தனிப்பட்ட விளம்பரத்திற்கு வைத்துக் கொள்ளவில்லை.
என்று ரகானே கூறினார்.






