என் மலர்
நீங்கள் தேடியது "indian test team"
- இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.
- இந்த அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
அடுத்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது தொடர்பாக கருண் நாயர் கூறியதாவது:
மீண்டும் வந்ததற்கு நன்றி. மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் அறிந்தது போலவே நானும் இதை அறிந்தேன். அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். நெருங்கியவர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்தன.
உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கடந்த 12-16 மாதங்களாக நான் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். இது எனது செயல்முறைகளை அப்படியே வைத்திருப்பது மற்றும் எனக்கு வேலை செய்த அதே விஷயங்களைச் செய்வது பற்றியது என தெரிவித்தார்.
- ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன்.
- நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேலும் தேர்வு குழு தலைவர் அகர்கர் பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்து ரகானே கூறியதாவது:-
சில வருடங்களுக்கு முன்பு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டேன். பின்பு சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். இறுதிப் போட்டியில் நான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தேன். இருந்த போதும் நான் மீண்டும் ஏன் நீக்கப்பட்டேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன். எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. என்னை ஏன் நீக்கி விட்டீர்கள் என்று போய் கேட்கும் நபர் நான் கிடையாது.
மேலும் இது குறித்து நான் பேச வேண்டும் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் பேசுவதற்கு தயாராக இருந்தால்தான் முடியும். அப்படி யாரும் என்னிடம் பேச தயாராக இல்லை. என் கையில் என்ன இருக்கிறதோ அதைப்பற்றி மட்டுமே நான் பார்க்கிறேன். மீண்டும் வருவதற்கு நான் கடுமையாக உழைக்கிறேன்.
எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும் ஆர்வமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது நான் ரஞ்சி தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறேன். மும்பை அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.
என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை என்னுடைய விளம்பரத்திற்கு பிஆர் வைத்துக்கொள்ள சொன்னார்கள். நான் அடிக்கடி செய்திகளில் இடம் பெற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கான விளம்பரம் என்னுடைய பேட்டிங் மட்டும்தான். நான் அப்படி யாரையும் என் தனிப்பட்ட விளம்பரத்திற்கு வைத்துக் கொள்ளவில்லை.
என்று ரகானே கூறினார்.






