என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேசன் கில்லஸ்பி"

    • இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவி வருகிறது.
    • இரண்டு டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி, பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த 8 மாதங்களிலேயே பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

    இந்த நிலையில் தனது எக்ஸ் தளத்தின் மூலம் தன்னை பின்தொடர்பவர்களுடன் கலந்துரையாடிய அவரிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு கில்லஸ்பி, 'பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நான் இருந்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னிடம் எதுவும் ஆலோசிக்காமல் சீனியர் உதவி பயிற்சியாளரை நீக்கியது. ஒரு தலைமை பயிற்சியாளராக இதை என்னால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற பல அவமதிப்புகளை சந்தித்தேன். அதனால் தான் விலகினேன்' என்றார்.

    'இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவி வருகிறது. இரண்டு டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்துள்ளனர். அதனால் இந்திய டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக நீங்கள் செயல்பட வேண்டும். உங்களது பயிற்சி இந்திய அணிக்கு தேவைப்படுகிறது' என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு கில்லஸ்பி, வேண்டாம்.... நன்றி கூறி பின்வாங்கினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியது.
    • கவாஸ்கர் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்திருந்தார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துகிறது. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.

    பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

    மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அணி கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அவரது கருத்துக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் அணி முன்னாள் பயிற்சியாளருமான ஜேசன் கில்லஸ்பி கண்டனம் தெரிவித்தள்ளார்.

    இது தொடர்பாக கில்லஸ்பி கூறுகையில் "நான் கவாஸ்கரின் வார்த்தை ஜாலங்களை ஏற்கவில்லை. சுனில் கவாஸ்கர் இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் எனக் கூறியதை நான் பார்த்தேன். இது முட்டாள் தனமானது. முற்றிலும் முட்டாள்தனமானது" என்றார்.

    ×