search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்திய அணியை விமர்சனம் செய்ய வல்லுனர்கள் பயப்படுகிறார்கள்: மைக்கேல் வாகன்
    X

    இந்திய அணியை விமர்சனம் செய்ய வல்லுனர்கள் பயப்படுகிறார்கள்: மைக்கேல் வாகன்

    • அடிலெய்டு அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
    • தொடக்க வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடாதது தோல்விக்கு முக்கிய காரணம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் அடிலெய்டில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் மோதின. இதில் 169 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி இங்கிலாந்து அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும்போது இந்திய அணியின் குறைகளை சுட்டிக் காட்டி வெளிநாட்டு விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர். அப்போது அவர்கள் சமூக வலைத்தளத்தில் இந்திய வல்லுனர்கள், ரசிகர்களால் கடுமையான அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

    இருந்தாலும் மைக்கேல் வாகன் போன்றோர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்கள். இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் போன்றோர் பதிலடி கொடுத்தும், ட்ரோல் செய்தும் வந்தனர்.

    நேற்று இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் மைக்கேல் வாகன், கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய அணியை விமர்சிக்க பயப்படுகிறார்கள். மேலும், அவர்கள் வேலையை இழந்து விடுவோம் என அஞ்சுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ''யாருமே இந்திய அணியை விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். பண்டிட்ஸ் இந்தியாவில் ஒருநாள் வேலையை இழந்துவிடுவோம் என கவலைப்படுகிறார்கள்.

    ஆனால், தற்போது நேரடியாக பேச வேண்டிய நேரம். அவர்கள் சிறந்த வீரர்களுக்கு பின்னால் மறைந்து கொள்ள முடியும். ஆனால், இது ஒட்டுமொத்தமாக ஒரு அணி சரியான வழியில் விளையாடுவதை பற்றியது. அவர்களின் பந்து வீச்சாளர்கள் தேர்வு தரம் குறைவாகவே இருந்தது. மேலும், மிகவும் நேர்த்தியான வகையில் அதிரடியாக பேட்டிங் செய்யவில்லை. சுழற்பந்து வீச்சிலும் குறைபாடு.

    ஒயிட் பால் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் செயல்திறன் மிகவும் குறைவாக உள்ளது. இந்திய பிரிமீயர் லீக்கில் உலகின் ஒவ்வொரு வீரர்களும், அவர்களின் பேட்டிங் திறமையை எப்படி முன்னேற்றினார்கள் எனச் சொல்கிறார்கள். ஆனால், இந்தியா இதுவரை சாதித்தது என்ன?'' என்றார்.

    Next Story
    ×