search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mexico"

    மெக்சிகோவில் உள்ள கவுதலஜாரா நகரில் பொது இடங்களில் யாரேனும் செக்ஸ் உறவு கொண்டால் போலீசார் தடுக்க கூடாது என நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    அமெரிக்காவை ஒட்டிய நாடான மெக்சிகோவில் போதை மாபியாக்கள் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில், இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கவுதலஜாரா நகரில் உள்ள பூங்கா ஒன்றில் சமீபத்தில் தனிமையில் இருந்த காதல் ஜோடி போலீசாரால் தொல்லைக்கு உள்ளாயினர்.

    இதனை அடுத்து, பொது இடங்களில் செக்ஸ் உறவு கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என கவுன்சிலர் ஒருவர் நகர சபையில் முறையிட்டார். இதனை அடுத்து, அடுத்தவர் தொல்லைக்கு உள்ளாவதாக புகார் தெரிவிக்கும் வரை பொது இடங்களில் செக்ஸ் உறவில் ஈடுபடும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ வைரலாகி வருகிறது. #kikichallenge #KiKiDance
    சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும்.

    இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது.

    இந்நிலையில், நகரும் விமானத்தில் இருந்து இறங்கிய பெண் பைலட்கள் இருவர் கிகி நடனம் ஆடி சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அலிஜ்னெட்ரா மாண்ட்ரிகுயிஸ் என்ற பெண் பைலட், தனது உதவியாளருடன் டிரேக் என்பவரது மை பீலிங்ஸ் எனும் பாடலுக்கு கிகி நடனம் ஆடியுள்ளார்.

    நகரும் விமானத்தின் அருகில் இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. #kikichallenge #KiKiDance
    அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் ஊடுருவல், போதை மருந்து கடத்தலை தடுப்பதற்காக சுவர் கட்டப்படும் நிலையில், போதை மாபியா பயன்படுத்திய 80 மீட்டர் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #US #Mexico
    நியூயார்க்:

    போதை மாபியா கும்பல் அதிகம் உள்ள மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை மருந்துகள் கடத்தப்படுவதாகவும், சட்ட விரோதமாக ஊடுருவி வருபவர்களை தடுக்கவும் எல்லையில் மிக நீண்ட மதில் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க போலீசாருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போதை மாபியா பயன்படுத்தி வந்த சுரங்கம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரிசோனா மாகாணத்தில் உள்ள சான் லூயிஸ் நகரில் பழைய ஓட்டல் ஒன்றின் அடியில் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.



    சுமார் 180 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கம் எல்லையை கடந்து மெக்சிகோவில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் முடிகிறது. அந்த பழைய ஓட்டல் இருந்த கட்டிடத்தின் உரிமையாளர் சமீபத்தில் போலீசில் சிக்க, அந்த கட்டிடத்தில் சோதனை நடத்திய பின்னர் இந்த சுரங்க விவகாரம் வெளியே வந்துள்ளது.

    இந்த சுரங்கத்தின் மூலம் போதை மருந்துகள் கடத்தப்பட்டு வந்ததாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 
    மெக்சிகோ நாட்டில் பத்திரிகையாளர்களை குறிவைத்து மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JournalistKilled
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் கான்கன் நகரில் உள்ள குயிண்டானா ரூ என்ற பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தவர் ரூபன் பாட். இவர் அதே பகுதியில் இணைய தள பத்திரிகையை நடத்தி வந்தார்.

    இந்நிலையில், ரூபன் பாட் நேற்று ரிசார்ட்டில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியல் ரூபனை சரமாரியாக சுட்டனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ரூபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கடந்த ஒரு மாத காலத்தில் பத்திரிகையாளர் மீது நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாகும். ஏற்கனவே ரூபன் பாட்டுக்கு கொலை மிரட்டல்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. #JournalistKilled
    மெக்சிகோவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் விரைவில் பதவியேற்க உள்ள நிலையில் பல்வேறு சிக்கன அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். #Mexico #LopezObrador
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி படுதோல்வியடைந்தது. 

    ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

    கடந்த ஒரு நூற்றாண்டாக மெக்சிகோவை ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார்.

    விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், இப்போதே பல சிக்கன நடவடிக்கை அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் மெக்சிகோ அதிபருக்கு மாதம் ரூ.10 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தான் அதிபராக பதவியேற்றதும் அதிபருக்கான ஊதியம் ரூ.4 லட்சமாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார் என்பது குறிபிப்பிடத்தக்கது.
    மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #FireworksExplosions
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் மிகப் பெரிய பட்டாசுச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வந்ததால் பட்டாசுகளை வாங்க மக்கள் குவிவது வழ்க்கம்.

    இந்நிலையில், மெக்சிகோ பட்டாசு சந்தையில் நேற்று காலை 9.15 மணியளவில், அங்கு திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த வெடி விபத்தில் 17 பேர் உடல் சிதறி பலியாகிளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #BRAMEX #WorldCup #FIFAWC
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று மெக்சிகோ - பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. 
    மெக்சிகோவில் அதிபர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஆப்ரதோர் 53 சதவிகித வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றுள்ளார். #MexicoElections #LopezObrador
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகின.

    அதேபோல, வாக்கு எண்ணிக்கையில் அந்த கட்சி பின் தங்கியது. ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதே போல தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன.

    53 சதவிகித வாக்குகள் பெற்று அவர் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிகார்டோ அனாயா 23 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

    ஊழல், வறுமை, போதை மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்தார். அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையை கடுமையாக ஆப்ரதோர் விமர்சித்து வந்தாலும், இவரது வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    மெக்சிகோவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரண்டு கட்சிகளை வீழ்த்தி அதிபர் நாற்காலியில் லோபஸ் ஆப்ரதோர் அமர்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் அதிபர் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் தொடங்கியுள்ளது. #MexicoElections
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் வெளியாகின.

    ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஆண்ட கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் ரிகார்டோ அனாயா போட்டியிடுகிறார்.

    லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றால், மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை வெளியேற்றியவர் என்ற பெயரை பெறுவார். இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவான பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. 

    போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்வீடன் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #MEXSWE #FIFAWorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெருகிறது. ஒரு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ அணி, ஸ்வீடனை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஸ்வீடன் அணி களமிறங்கியது.

    போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் போட தொடர்ந்து முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. 

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டம் ஸ்வீடன் அணிக்கு சாதகமாக அமைந்தது. 50-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியின் அகஸ்டின்சன் கோல் அடித்தார். இதனால் ஸ்வீடன் அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    அதைத்தொடர்ந்து 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கிரான்குவிஸ்ட் கோல் அடித்தார். இதனால் ஸ்வீடன் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின் 74-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணிக்கு ஒரு போனஸ் கோல் கிடைத்தது. மெக்சிகோ அணி வீரர் அல்வரேஸ் அந்த கோலை அடித்து கொடுத்தார். மெக்சிகோ அணி இறுதிவரை கோல் அடிக்காததால் ஸ்வீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 



    இதனால் ‘எஃப்’ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஸ்வீடன் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மெக்சிகோ அணி இரண்டாவது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #MEXSWE
    நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்ட நிலையில், சந்தேகத்தின் பெயரில் நகர பாதுகாப்பு செயலாளரை சிறப்பு படையினர் கைது செய்வதை தடுத்த போலீசார் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மெக்சிகோ:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் வரும் ஜூலை 1-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதிபர், செனட்டர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அங்கு தொடர்ந்து அரசியல் கொலைகள் நடந்து வருகின்றன.

    போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் இது போன்ற அரசியல் கொலைகள் வழக்கமானது என்றாலும், சமீபத்தில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    மிசோவ்கன் மாநிலத்தில் உள்ள ஒகாம்போ நகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட பெர்னாட்னோ ஜுவாரெஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கும்பலுக்கும் நகர பாதுகாப்பு செயலாளர் ஆஸ்கர் கார்சியாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதனை அடுத்து, ஆஸ்காரை கைது செய்ய சிறப்பு படையினர் ஒகாம்போ நகருக்கு விரைந்தனர். ஆனால், ஒகாம்போ நகர போலீசார், சிறப்பு படையினரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து, நகர காவல் பணியில் உள்ள 27 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    27 போலீசாருடன் ஆஸ்கர் கார்சியாவும் கைது செய்யப்பட்டார். 
    உலக கால்பந்து போட்டியில் தென்கொரியாவை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடிய மெக்சிகோ ரசிகர்கள் 16 பேரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WorldCup2018 #Mexico
    மெக்சிகோ:

    ரஷ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது, தென்கொரிய அணியை 2-1 என்று கணக்கில் மெக்சிகோ அணி வீழ்த்தியது. போட்டியில் பெற்ற வெற்றியை மெக்சிகோ நாட்டில் ரசிகர்கள் பலரும் வீதிகளில் கொண்டாடியுள்ளனர்.

    அதேபோல், டெக்சாஸ்  எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் செட்டில் 6 பேர் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரில் துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள், சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதற்கிடையில், மற்றொரு பகுதியில் உள்ள  கடையில் போட்டியை கண்டுகளித்த கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேர் என, 5 ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பின் நள்ளிரவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் நடைபெற்ற 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ரசிகர்கள் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #WorldCup2018 #Mexico
    ×