search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரலாறு படைப்பாரா லோபஸ் ஆப்ரதோர்? - மெக்சிகோவில் அதிபர் தேர்தல் தொடங்கியது
    X

    வரலாறு படைப்பாரா லோபஸ் ஆப்ரதோர்? - மெக்சிகோவில் அதிபர் தேர்தல் தொடங்கியது

    மெக்சிகோவில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரண்டு கட்சிகளை வீழ்த்தி அதிபர் நாற்காலியில் லோபஸ் ஆப்ரதோர் அமர்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் அதிபர் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தல் தொடங்கியுள்ளது. #MexicoElections
    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிபர் பதவி, பாராளுமன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு இன்று தேர்தல் தொடங்கியுள்ளது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் வெளியாகின.

    ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஆண்ட கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் ரிகார்டோ அனாயா போட்டியிடுகிறார்.

    லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றால், மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை வெளியேற்றியவர் என்ற பெயரை பெறுவார். இன்று மாலை வாக்குப்பதிவு நிறைவான பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. 

    போதை மாபியா ஆதிக்கம் கொண்ட நாடான மெக்சிகோவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×