search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks explosion"

    • திண்டிவனத்தில் பட்டாசு வெடித்ததில் தீற்ெபாறி விழுந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அணைக்கப் போராடினர். இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கூரை வீட்டில் பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்தது.

    • திண்டிவனத்தில் பட்டாசு வெடித்ததில் தீற்ெபாறி விழுந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
    • வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்தவர் அஞ்சலி தேவி. இவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை அணைக்கப் போராடினர்.

    இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீபாவளிக்கு சிறுவர்கள் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கூரை வீட்டில் பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்தது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பு.
    • இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு அமித் ஷா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரியில் இன்று பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து  ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்ததாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • காரைக்காலில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
    • ஒரு சிலர் அதிகாலை முதலே பட்டாசு வெடிக்க துவங்கிவிட்டனர்.

    புதுச்சேரி

    தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டா டப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்க ப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில், தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், தீபாவளி அன்று ஒரு சிலர் அதிகாலை முதலே பட்டாசு வெடிக்க துவங்கிவிட்டனர். இரவு வரை அரசின் நேரக்கட்டுபாட்டை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. அசம்பா விதங்கள் இல்லாமல் மக்கள் சந்தோசமாக பட்டாசு வெடித்தனர்.

    போலீசாருக்கு வந்த புகாரின் பேரில், தீபாவளி அன்று, காரைக்கால் நெடுங்காட்டில் 5 பேரும், கோட்டுச்சேரியில் 6 பேரும், நிரவி மற்றும் திரு.பட்டின்பத்தில் தலா 4 பேரும், காரைக்கால் நகரில் 5 பேரும், திருநள்ளாறில் 6 பேரும் என 29 பேர் மீது அரசு அனுமதித்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்ய ப்பட்டு விசாரித்து வருகின்றனர். மேலும் தீபாவளிக்கு முதல் நாள் அனைத்து பகுதிகளிலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப ட்டது. மொத்தம் 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தீபாவளி அன்று, வெடித்த பட்டாசுகளில் சில, திருநள்ளாறு தேனூர் பகுதியில் வசிக்கும் மீனா என்பவர் கூரை வீட்டில் பட்டதில் வீடு தீக்கிறையானது. இந்த தீ விபத்தில், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து, திருநல்லாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    சிவகாசியில் நடந்த வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் நொறுங்கியது. அங்கு வேலை பார்த்த 2 பெண்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
    சிவகாசி :

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரில் உள்ள ஒரு வீட்டை மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் வாடகைக்கு பிடித்திருந்தார். தரைக்கு கீழே ஒரு தளமும், தரைக்கு மேல் 2 மாடிகளும் என 3 அடுக்குகளை கொண்ட இந்த வீட்டில், பட்டாசு மூலப்பொருளான ரசாயனம் சேர்க்கும் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த வீட்டில் பட்டாசுகள் அதிக அளவில் பதுக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் வேல்முருகன் (வயது 37), மனோஜ்குமார் (27), கார்த்தீசுவரி (33), ஹமிதா (55) ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 3 அடுக்குகளும் அப்படியே நொறுங்கி, தரைமட்டத்துக்கு மேல் வெறும் இடிபாடுகளாக காட்சி அளித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறிய வண்ணமாக இருந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர்.

    ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்தை தீயணைப்பு வீரர்கள் நெருங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதன் பின்னர் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பணியில் இருந்த கார்த்தீசுவரி, ஹமிதா ஆகிய 2 பெண்களையும் காணவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மீட்பு பணியை துரிதப்படுத்த உதவினர். இந்த விபத்திற்கு பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததுதான் காரணம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மாயமான பெண்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. எனவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். எந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளை முற்றிலுமாக அகற்றிய பின்னரே உயிரிழப்பு ஏதும் இருக்கிறதா? என தெரியவரும். இந்த வெடிவிபத்து சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #FireworksExplosions
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் மிகப் பெரிய பட்டாசுச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வந்ததால் பட்டாசுகளை வாங்க மக்கள் குவிவது வழ்க்கம்.

    இந்நிலையில், மெக்சிகோ பட்டாசு சந்தையில் நேற்று காலை 9.15 மணியளவில், அங்கு திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

    இந்த வெடி விபத்தில் 17 பேர் உடல் சிதறி பலியாகிளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ×