என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » messi
நீங்கள் தேடியது "Messi"
லா லிகா புள்ளிகள் தரவரிசையில் நடப்பு சாம்பியன் ஆன பார்சிலோனா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. #LaLiga #Barcelona
லா லிகா கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வாலன்சியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே வாலன்சியா அணியின் கரேய் கோல் அடித்து பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்சிலோனா கேப்டன் மெஸ்சி 23-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 சமநிலை ஆனது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்த போட்டியை பார்சிலோனா டிரா செய்ததால் லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 8 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
செவியா 8 போட்டியில் 5 வெற்றி, 1 டிரா, இரண்டு தோல்விகள் மூலம் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரியால் மாட்ரிட் நான்கு வெற்றி, தலா இரண்டு டிரா, தோல்வியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்சிலோனா கேப்டன் மெஸ்சி 23-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 சமநிலை ஆனது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
இந்த போட்டியை பார்சிலோனா டிரா செய்ததால் லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 8 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
செவியா 8 போட்டியில் 5 வெற்றி, 1 டிரா, இரண்டு தோல்விகள் மூலம் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரியால் மாட்ரிட் நான்கு வெற்றி, தலா இரண்டு டிரா, தோல்வியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் ஆன பீலே, தனது அணியில் மெஸ்சிக்குதான் இடம், ரொனால்டோவிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். #Messi #Ronaldo #Pele
கால்பந்து உலகில் ஜாம்பவனாக திகழ்பவர் பிரேசில் நாட்டின் பீலே. தற்போது மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் சிறந்த வீரர்களாக திகழ்ந்து வருகிறார். நான் அணியை தேர்வு செய்தால் மெஸ்சிக்குதான் இடம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பீலே கூறுகையில் ‘‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (more organised), ரொனால்டோ (more of a center-forward).
நான் எனது அணியை தேர்வு செய்தார் ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த (center-forward) வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். என்னைவிட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’’ என்றார்.
இதுகுறித்து பீலே கூறுகையில் ‘‘மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி முற்றிலும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டவர். ஏராளமானோர் என்னை ஜார்ஜ் பெஸ்ட் உடன் ஒப்பிடவது உண்டு. ஆனால், நாங்கள் வித்தியாசமான விளையாட்டு ஸ்டைலை உடையவர்கள். மெஸ்சி (more organised), ரொனால்டோ (more of a center-forward).
நான் எனது அணியை தேர்வு செய்தார் ரொனால்டோவை விட மெஸ்சியைத்தான் தேர்வு செய்வேன். என்னுடைய அப்பா சிறந்த (center-forward) வீரர். அவர் எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். என்னைவிட மூன்று முறை கூடுதலாக கோல் அடிக்க வேண்டும் என்று கூறினார். அவர்தான் என்னை கால்பந்து விளையாட ஊக்குவித்தார். அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தவர்’’ என்றார்.
யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார். #Messi #Ronaldo
ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் நேற்றிரவு தொடங்கியது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா நெதர்லாந்தின் பிஎஸ்வி எய்ன்டோவன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
32-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 77 மற்றும் 87-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். இதற்கிடையில் டெம்பேள் 75-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார். இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார்.
எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2-வது பாதி நேரத்தில் 45 மற்றும் 51 நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இதை மிராலெம் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் 2-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 39 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ரொனால்டோ இல்லாமலேயே யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் முதல் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார்.
ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா நெதர்லாந்தின் பிஎஸ்வி எய்ன்டோவன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
32-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 77 மற்றும் 87-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். இதற்கிடையில் டெம்பேள் 75-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார். இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார்.
எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2-வது பாதி நேரத்தில் 45 மற்றும் 51 நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இதை மிராலெம் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் 2-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 39 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ரொனால்டோ இல்லாமலேயே யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் முதல் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி குறிப்பிட்டுள்ளார். #Messi #Barcelona
கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ - மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவும். இருவரும் பரம எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.
லா லிகா 2018-19 சீசனை மெஸ்சி, கவுட்டினோ ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றியோடு தொடங்கியுள்ளது. #LaLiga #Messi
ஐரோப்பா நாடுகளில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பங்கேற்கும் பார்சிலோனா அணியில் நட்சத்திர வீரர் மெஸ்சி இடம்பிடித்து விளையாடி வருகிறார்.
2017-2018 சீசனினல் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2018-19 சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. பார்சிலோனா தனது முதல் ஆட்டத்தில் நேற்று டிபெர்ட்டிவோ அலெவ்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 64-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். 83-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.
மற்ற போட்டிகளில் ரியல் சோசியேடாட், லெவான்டே அணிகள் வெற்றி பெற்றன. செல்டா - எஸ்பான்யல், கிரோனா - வல்லாடோல்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
2017-2018 சீசனினல் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2018-19 சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. பார்சிலோனா தனது முதல் ஆட்டத்தில் நேற்று டிபெர்ட்டிவோ அலெவ்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 64-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். 83-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.
மற்ற போட்டிகளில் ரியல் சோசியேடாட், லெவான்டே அணிகள் வெற்றி பெற்றன. செல்டா - எஸ்பான்யல், கிரோனா - வல்லாடோல்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
மால்கமை பார்சிலோனா அபகரித்து விட்டது. அவருக்குப் பதிலாக மெஸ்சியை அனுப்ப வேண்டும் என்று ரோமா அணி உரிமையாளர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். #Barcelona
பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் மால்கம். 21 வயதே ஆன இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளப்பான போர்டியாக்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்த இத்தாலியின் முன்னணி கிளப்புகளில் ஒன்றான ரோமா மால்கமை வாங்க முயற்சி செய்தது.
இதற்கு நல்ல பலன் கிடைக்கவே ஒப்பந்தத்தை நெருங்கியது. மால்கமும் மருத்துவ பரிசோதனைக்காக ரோமா செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்பெயினின் தலைசிறந்த அணியான பார்சிலோனா அவரை கொத்திக் கொண்டது. தலைசிறந்த அணி என்பதால் மால்கம் உடனடியாக ஒப்பந்தத்தை பூர்த்தி செய்தார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத ரோமா அணியின் தலைவர், மால்கமை எங்களிடம் இருந்து பார்சிலோனா அபகரித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக மெஸ்சி அனுப்ப வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதற்கு நல்ல பலன் கிடைக்கவே ஒப்பந்தத்தை நெருங்கியது. மால்கமும் மருத்துவ பரிசோதனைக்காக ரோமா செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்பெயினின் தலைசிறந்த அணியான பார்சிலோனா அவரை கொத்திக் கொண்டது. தலைசிறந்த அணி என்பதால் மால்கம் உடனடியாக ஒப்பந்தத்தை பூர்த்தி செய்தார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத ரோமா அணியின் தலைவர், மால்கமை எங்களிடம் இருந்து பார்சிலோனா அபகரித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக மெஸ்சி அனுப்ப வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளார்.
நைஜீரியாவிற்கு எதிராக எந்தவொரு நிலையிலும் தோல்வி குறித்து யோசிக்கவில்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி தெரிவித்துள்ளார். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டது. ஆனால் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திற்கு எதிராக டிரா ஆனதால், அந்த அணிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. அத்துடன் குரோசியாவிற்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
இதனால் நேற்றைய நைஜீரியா போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது. இரண்டு போட்டியில் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்த மெஸ்சி, நேற்றைய போட்டியில் தனது முதல் கோலை அபாரமாக அடித்தார். ரோஜோ மேலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டினா 2-1 என வெற்றி பெற்றது.
முதல் இரண்டு போட்டியில் கோல் அடிக்காத மெஸ்சி மீது விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் நைஜீரியா வெற்றிக்குப்பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நாங்கள் தோல்வி குறித்து யோசிக்கவே இல்லை என்றார். மேலும் மெஸ்சி கூறுகையில் ‘‘ நைஜீரியாவிற்கு எதிராக நாங்கள் கடுமையான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தோம் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்களுடைய இலக்கை எட்டினோம்.
நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை இருந்தது. அதை நோக்கிச் சென்றோம். அதிர்ஷ்டவசமாக அது உண்மையான மாறியது.
கடவுள் எங்களுடன் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களை விட்டு சென்றிடவிலலை. மைதானத்தில் கூடியிருந்த மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் அவர்களுடைய தியாகத்திற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எப்போதும் எங்களுடன்தான் இருப்பார்கள். அர்ஜென்டினா அணியின் ஜெர்சி எப்போதுமே உயர்வுதான்’’ என்றார்.
இதனால் நேற்றைய நைஜீரியா போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது. இரண்டு போட்டியில் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்த மெஸ்சி, நேற்றைய போட்டியில் தனது முதல் கோலை அபாரமாக அடித்தார். ரோஜோ மேலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டினா 2-1 என வெற்றி பெற்றது.
முதல் இரண்டு போட்டியில் கோல் அடிக்காத மெஸ்சி மீது விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் நைஜீரியா வெற்றிக்குப்பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நாங்கள் தோல்வி குறித்து யோசிக்கவே இல்லை என்றார். மேலும் மெஸ்சி கூறுகையில் ‘‘ நைஜீரியாவிற்கு எதிராக நாங்கள் கடுமையான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தோம் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்களுடைய இலக்கை எட்டினோம்.
நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை இருந்தது. அதை நோக்கிச் சென்றோம். அதிர்ஷ்டவசமாக அது உண்மையான மாறியது.
கடவுள் எங்களுடன் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களை விட்டு சென்றிடவிலலை. மைதானத்தில் கூடியிருந்த மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் அவர்களுடைய தியாகத்திற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எப்போதும் எங்களுடன்தான் இருப்பார்கள். அர்ஜென்டினா அணியின் ஜெர்சி எப்போதுமே உயர்வுதான்’’ என்றார்.
உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக மெஸ்சி அடித்த கோல் இந்த உலக கோப்பையில் 100-வது கோல் ஆக பதிவாகி உள்ளது. #WorldCup #NGAARG #LionelMessi
அர்ஜென்டினா கேப்டனும், உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவருமான லியோனஸ் மெஸ்சி நைஜீரியாவுக்கு எதிராக தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அவர் 14-வது நிமிடத்தில் மிகவும் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் இது 100-வது கோலாகும். 40 ஆட்டங்கள் முடிவில் 105 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரி 2.63 ஆகும்.
இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் 5 கோல்கள் அடித்து முன்னணியில் உள்ளார். அடுத்த இரண்டு இடத்தை பெல்ஜியம் வீரர் ரொமெலு லுகாகு 4, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்களுடன் உள்ளனர். #WorldCup #NGAARG #LionelMessi
அவர் 14-வது நிமிடத்தில் மிகவும் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் இது 100-வது கோலாகும். 40 ஆட்டங்கள் முடிவில் 105 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரி 2.63 ஆகும்.
இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் 5 கோல்கள் அடித்து முன்னணியில் உள்ளார். அடுத்த இரண்டு இடத்தை பெல்ஜியம் வீரர் ரொமெலு லுகாகு 4, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்களுடன் உள்ளனர். #WorldCup #NGAARG #LionelMessi
மற்றவர்களுக்கென்றால் பேசும் விதிமுறை, ரொனால்டோ மெஸ்சி என்றால் பேசாது என ரெட் கார்டு சர்ச்சையில் ஈரான் பயிற்சியாளர் பதில் அளித்துள்ளார். #WorldCup
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உச்சக்கட்டமாக நேற்று நடைபெற்ற போர்ச்சுக்கல் - ஈரான் இடையிலான போட்டியில் அதிக சர்ச்சை ஏற்பட்டது. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் VAR, இந்த போட்டியின்போது உச்சக்கட்டத்தை எட்டியது.
குரூப் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்த இரண்டு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அது நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
இதனால் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடிக்க முயற்சி செய்தார். ஈரான் தடுப்பாட்டக்காரர் அவரை தடுக்க முயற்சி செய்யும்போது ரொனால்டோ கீழே விழுந்தார். ஆனால் நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுக்கவில்லை. பின்னர், நடுவர் ரிவியூ (VAR) கேட்க பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ரொனால்டோ அதில் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மைதானத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ரொனால்டோ தனது முழங்கையால் ஈரான் வீரர் மோர்டேசா போராலிகான்ஜியை தள்ளிவிட்டார். இதற்கு ஈரான் வீரர்கள் ரிவியூ (VAR) கேட்டனர். அப்போது ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாக தெரிந்தது. பலமுறை டிவியை பார்த்து ஆராய்ந்த பராகுவே நடுவர், மஞ்சள் அட்டையை காண்பித்தார். இதனால் ரெனால்டோ மஞ்சள் அட்டை பெற்றார்.
இது ஈரான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. முழங்கையால் தாக்கினால் தானாகவே ரெட் கார்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், பலமுறை டிவியில் போட்டு தெளிப்படுத்திய பின்னரும் ரொனால்டோவிற்கு ரெட் கார்டு கொடுக்காதது அந்த அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 81-வது நிமிடத்திற்குப் பிறகு சுமார் 16 நிமிட ஆட்டம் நடைபெற்றது. ஒருவேளை ரொனால்டோ வெளியேறியிருந்தால் 10 பேருடன் விளையாடும் போர்ச்சுக்கலை வென்று ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த கோபத்தில் போட்டிக்குப்பின் ஈரான் பயிற்சியாளர் கார்லஸ் குய்ரோஸ் கூறுகையில் ‘‘நீங்கள் VAR-விற்காக போட்டியை நிரூத்தினீர்கள். அங்கே ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாகத் தெரிந்தது. பிபா விதிமுறைப்படி முழங்கை என்றாலேயே, ரெட் கார்டுதான். ஆனால், மெஸ்சி அல்லது ரொனால்டோ என்றால் விதிமுறை ஒன்றும் சொல்லாது’’ என்று தெரிவித்தார்.
குரூப் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்த இரண்டு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அது நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலை இருந்தது.
இதனால் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடிக்க முயற்சி செய்தார். ஈரான் தடுப்பாட்டக்காரர் அவரை தடுக்க முயற்சி செய்யும்போது ரொனால்டோ கீழே விழுந்தார். ஆனால் நடுவர் பெனால்டி வாய்ப்பு கொடுக்கவில்லை. பின்னர், நடுவர் ரிவியூ (VAR) கேட்க பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ரொனால்டோ அதில் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் மைதானத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ரொனால்டோ தனது முழங்கையால் ஈரான் வீரர் மோர்டேசா போராலிகான்ஜியை தள்ளிவிட்டார். இதற்கு ஈரான் வீரர்கள் ரிவியூ (VAR) கேட்டனர். அப்போது ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாக தெரிந்தது. பலமுறை டிவியை பார்த்து ஆராய்ந்த பராகுவே நடுவர், மஞ்சள் அட்டையை காண்பித்தார். இதனால் ரெனால்டோ மஞ்சள் அட்டை பெற்றார்.
இது ஈரான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. முழங்கையால் தாக்கினால் தானாகவே ரெட் கார்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், பலமுறை டிவியில் போட்டு தெளிப்படுத்திய பின்னரும் ரொனால்டோவிற்கு ரெட் கார்டு கொடுக்காதது அந்த அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 81-வது நிமிடத்திற்குப் பிறகு சுமார் 16 நிமிட ஆட்டம் நடைபெற்றது. ஒருவேளை ரொனால்டோ வெளியேறியிருந்தால் 10 பேருடன் விளையாடும் போர்ச்சுக்கலை வென்று ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும்.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த கோபத்தில் போட்டிக்குப்பின் ஈரான் பயிற்சியாளர் கார்லஸ் குய்ரோஸ் கூறுகையில் ‘‘நீங்கள் VAR-விற்காக போட்டியை நிரூத்தினீர்கள். அங்கே ரொனால்டோ முழங்கையால் தாக்கியது தெளிவாகத் தெரிந்தது. பிபா விதிமுறைப்படி முழங்கை என்றாலேயே, ரெட் கார்டுதான். ஆனால், மெஸ்சி அல்லது ரொனால்டோ என்றால் விதிமுறை ஒன்றும் சொல்லாது’’ என்று தெரிவித்தார்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. #FIFA2018 #Argentina #Messi #Nigeria
‘சி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி 2 வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த பிரிவில் அடுத்த சுற்றை எட்டும் இன்னொரு அணி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் அணி பிரான்சுடன் டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றை அடைந்து விடலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் பெருவை வீழ்த்த வேண்டும், பிரான்ஸ் அணி, டென்மார்க்கை சாய்க்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா, டென்மார்க் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் ஒரு அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.
‘டி’ பிரிவில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்துடன் டிரா கண்டு, குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்த அர்ஜென்டினா (1 புள்ளி) இன்றைய தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் இரு ஆட்டங்களிலும் சொதப்பிய அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தங்கள் அணியை அவர் வெற்றிகரமாக கரைசேர்க்க தவறினால் இத்துடன் அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிந்து போகும் ஆபத்து கூட இருக்கிறது. அதே சமயம் அர்ஜென்டினாவுக்கு ‘ஆப்பு’ வைத்து அடுத்த சுற்றுக்குள் நுழைவதில் நைஜீரியா இளம் படையினரும் கங்கணம் கட்டி நிற்பதால் இந்த ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று நம்பலாம்.
ஏற்கனவே 2-வது சுற்றை உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணி, கடைசி லீக்கில் ஐஸ்லாந்துடன் மோதுகிறது. இதில் குரோஷியா எளிதில் வெற்றி காணும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒரு வேளை ஐஸ்லாந்து அதிர்ச்சி அளித்தால், அர்ஜென்டினாவுக்கு சிக்கல் உருவாகும். #FIFA2018 #Argentina #Messi #Nigeria
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி GOAT அல்ல, Sheep என்று டுவிட்டர்வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். #WorldCup2018 #Messi
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அர்ஜென்டினா கோப்பையை வாங்கும் அணகளில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அந்த அணியில் மெஸ்சி இடம்பிடித்திருப்பது. இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அர்ஜென்டினா என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது டியகோ மரடோனா, மெஸ்சி ஆகியோர்தான். இந்த இருவர்களுக்கும் இடையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் தற்போதைய விவாதம் உள்ளது. இதில் மெஸ்சி சற்றே பின்தங்கியிருக்கிறார். ஏனென்றால் முக்கியமான சர்வதேச தொடரில் அவர் ஜொலித்தது கிடையாது. கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனியிடம் வீழ்ந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார். அதனோடு கோபா அமெரிக்கா கோப்பையை இரண்டு முறை சிலியிடம் இழந்தார்.
இதனால் அர்ஜென்டினாவிற்கு சர்வதேச கோப்பையை வாங்கி தந்தது கிடையாது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த உலகக்கோப்பையில் மெஸ்சி களம் இறங்கினார். இந்த தொடரில் அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பொறுத்து ஓய்வு முடிவு இருக்கும் என்று அறிவித்தார்.
ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தற்கு நேர் எதிராக அர்ஜென்டினாவின் விளையாட்டு அமைந்து வருகிறது. ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜென்டினா முதல் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. நேற்று நடைபெற்ற குரோசியாவிற்கு எதிராக 0-3 என படுதோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டியிலும் மெஸ்சியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை.
அதேவேளையில் இவருக்கு போட்டியாக திகழும் போர்ச்சுக்கலின் கிறிஸ்டினோ ரொனால்டோ இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தலைமுறையின் GOAT (Greatest Of All Time- எல்லா நேரத்திலும் சிறந்தவர்) யார் என்பதில் இருவருக்கும் இடையில் கடும் போட்டிய நிலவி வருகிறது. இந்நிலையில் மெஸ்சியின் சொதப்பல் ஆட்டத்தால் வெறுப்படைந்த ரசிகர்கள், அவர் GOAT அல்ல, Sheep என்று டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.
அர்ஜென்டினா என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது டியகோ மரடோனா, மெஸ்சி ஆகியோர்தான். இந்த இருவர்களுக்கும் இடையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் தற்போதைய விவாதம் உள்ளது. இதில் மெஸ்சி சற்றே பின்தங்கியிருக்கிறார். ஏனென்றால் முக்கியமான சர்வதேச தொடரில் அவர் ஜொலித்தது கிடையாது. கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனியிடம் வீழ்ந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார். அதனோடு கோபா அமெரிக்கா கோப்பையை இரண்டு முறை சிலியிடம் இழந்தார்.
இதனால் அர்ஜென்டினாவிற்கு சர்வதேச கோப்பையை வாங்கி தந்தது கிடையாது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த உலகக்கோப்பையில் மெஸ்சி களம் இறங்கினார். இந்த தொடரில் அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பொறுத்து ஓய்வு முடிவு இருக்கும் என்று அறிவித்தார்.
ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தற்கு நேர் எதிராக அர்ஜென்டினாவின் விளையாட்டு அமைந்து வருகிறது. ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜென்டினா முதல் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. நேற்று நடைபெற்ற குரோசியாவிற்கு எதிராக 0-3 என படுதோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டியிலும் மெஸ்சியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை.
அதேவேளையில் இவருக்கு போட்டியாக திகழும் போர்ச்சுக்கலின் கிறிஸ்டினோ ரொனால்டோ இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தலைமுறையின் GOAT (Greatest Of All Time- எல்லா நேரத்திலும் சிறந்தவர்) யார் என்பதில் இருவருக்கும் இடையில் கடும் போட்டிய நிலவி வருகிறது. இந்நிலையில் மெஸ்சியின் சொதப்பல் ஆட்டத்தால் வெறுப்படைந்த ரசிகர்கள், அவர் GOAT அல்ல, Sheep என்று டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.
Messi is no goat. Perhaps, he's a sheep. But definitely not THE GOAT. pic.twitter.com/SQM1yK7qTx
— Efo Kojoyevu (@kojoyevu) June 21, 2018
Ronaldo - Carrying his nation on the biggest stage. Messi - Going missing when his country needs him the most
— Lee Daggett (@Lee_Daggett) June 21, 2018
Everyone blaming Messi for the loss like he is the coach, defender or a goalkeeper of Argentina. Messi is just a one player not a whole team!#ARGCROpic.twitter.com/sUpX9WfW9E
— Muntaha Mujtaba (@Muntaha_Mj) June 21, 2018
Messi is a Goat when playing for Barcelona but a Sheep when playing for Argentina 😭😭 #ARGCRO
— DaT AkWa IbOm Gee👊🇳🇬 (@ClintonViceB) June 21, 2018
Argentina/Barca fans: “Messi can’t do everything by himself”
— Abraham Cavazos (@cavazus) June 21, 2018
Well, Cristiano DOES everything by himself 🐐🐐🐐#ARGCROpic.twitter.com/RX4t0ec73Y
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெறாத அர்ஜென்டினா அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளதால் மெஸ்சியின் உலகக்கோப்பை கனவு கேள்விகுறியாக உள்ளது. #FIFA2018 #Messi
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சியால் அர்ஜென்டினா அணிக்கு பெருமை சேர்க்க முடியவில்லை. ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்காத அவர் நேற்றைய குரோஷியாவுக்கு எதிராகவும் கோல் அடிக்கவில்லை. 2 ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெறாத அர்ஜென்டினா போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளது.
30 வயதான மெஸ்சியின் உலககோப்பை கனவு கேள்விகுறியாகவும் இருக்கிறது. கடந்த உலககோப்பையில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்து அவர் மயிரிழையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த முறை தொடக்கமே சரிவாக இருக்கிறது. மெஸ்சி சிறப்பாக ஆடினாலும் சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லை. ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் அவர் தவிக்கிறார்.
நேற்றைய ஆட்டத்தில் சக வீரர்கள் மெஸ்சியிடம் சரியான முறையில் பந்தை கொடுக்கவில்லை. மேலும் மெஸ்சி பந்தை கொண்டு செல்லும் போது அவருடன் நெருங்கி வரவில்லை. பார்சிலோனா கிளப்பில் மெஸ்சியால் சாதிக்க முடிந்ததுக்கு சக வீரர்களின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்சியின் திறமைக்கு ஏற்ற வகையில் ஒத்துழைக்க முடியவில்லை.
மெஸ்சியின் திறமையை பயிற்சியாளர் பாராட்டி இருக்கிறார். தோல்விக்காக அவரை குறை கூற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். #FIFA2018 #Messi #worldcup2018
30 வயதான மெஸ்சியின் உலககோப்பை கனவு கேள்விகுறியாகவும் இருக்கிறது. கடந்த உலககோப்பையில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்து அவர் மயிரிழையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த முறை தொடக்கமே சரிவாக இருக்கிறது. மெஸ்சி சிறப்பாக ஆடினாலும் சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லை. ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் அவர் தவிக்கிறார்.
நேற்றைய ஆட்டத்தில் சக வீரர்கள் மெஸ்சியிடம் சரியான முறையில் பந்தை கொடுக்கவில்லை. மேலும் மெஸ்சி பந்தை கொண்டு செல்லும் போது அவருடன் நெருங்கி வரவில்லை. பார்சிலோனா கிளப்பில் மெஸ்சியால் சாதிக்க முடிந்ததுக்கு சக வீரர்களின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்சியின் திறமைக்கு ஏற்ற வகையில் ஒத்துழைக்க முடியவில்லை.
மெஸ்சியின் திறமையை பயிற்சியாளர் பாராட்டி இருக்கிறார். தோல்விக்காக அவரை குறை கூற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். #FIFA2018 #Messi #worldcup2018
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X